-யாழில் இருந்து வல்லபை:-[மூலம்:சூரியன்.கொம்]
1. இலங்கையின் சிங்கள அரசர்கள், வாளேந்தும் ஆண்சிங்க அடையாளத்தை மாத்திரம்தானா பண்டைய காலம் முதல் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் காலம்வரை பயன்படுத்தி வந்திருந்தனர்? அப்படியானால், தென்னிலங்கையில் காணப்படும் பிராமி எழுத்து நாணயங்களிலும், ஏனைய நாணயங்களிலும், சிற்பங்களிலும், ஏனையவைகளிலும் காணப்படும் ஆண்யானை, ஆண்குதிரை, எருது, ஆமை, மயில், அன்னம், சேவல், மீன் மற்றும் அடையாளங்கள் எந்தெந்தச் சமூகங்களை அடையாளப்படுத்துகின்றன?
2. சிங்கள அரசர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் ஆண்சிங்க அடையாளத்தையும், வாளேந்தும் ஆண்சிங்க அடையாளத்தையும் பயன்படுத்தியிருக்கவில்லையா?
3. சிங்கம் வீரமானது, வலிமையானது. ஆப்படியாயின், வலிய, வீர சிங்கத்திற்கும், வாளுக்கும் (Sword) என்ன தொடர்பு?
4. வாளேந்தும் ஆண்சிங்கம் ஏன் எமது வலது கைப்பக்கம் பார்த்தவண்ணம் வைக்கப்படாது, துட்டகாமணீயின் கொடியிலும், கண்டி இராச்சியக் கொடியிலும் எமது இடது கைப்பக்கம் பார்த்வண்ணம் வைக்கப்பட்டுள்ளது?
5. பௌத்தமானது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகளைக் கொடுப்பது. மஹாவம்ஸவில் தேவநம்பியதிஸ்ஸவின் ராணியான அனுலாவும், அவளது பரிவாரங்களும் பிக்குணிகளாகக் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே மாறியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், பௌத்த இலங்கையில் எப்படிச் சிங்கள இனத்தவர்களை அடையாளப்படுத்தவென ஆண்சிங்கம் பயன்படுத்தப்பட்டது?
6. ஆண்சிங்கம் சிங்கள இனத்தை அடையாளப்படுத்துவதாயின், கண்டியின் தமிழ் அரசனனான ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் ஏன் வாளேந்தும் ஆண் சிங்கத்தினைத் தனது கொடியில் அடையாளமாக வைத்தான்?
7. கண்டியில் தலதா மாளிகாலவில் (Dalada Maligawa) புத்தபெருமானின் புனித தந்ததாது வைக்கப்பட்டுவந்துள்ளது. ஆகவே கண்டியில் புத்தபெருமானின் அற ஆட்சியே இருந்துள்ளது. இந்த நிலையில் கண்டி இராச்சியத்தில் புத்தபெருமானின் அற ஆட்சியை அடையாளப்படுத்தும் கொடிகளே அன்றும் பறக்கவிடப்பட்டிருக்க முடியும். அப்படியானால், வாளேந்தும் ஆண் சிங்கமானது ஏனைய மிருகங்களைக் கொன்று தின்னும் மிருக சிங்கமல்லாது, ஒளிமயமான, அன்புமயமான, அருள்மயமான சிங்கத்தை, புத்தபெருமானைக்த்தான் அடையாளப்படுத்துகிறதா?
8. தம்புள்ள கற்பாறைக் கோயிலானது புத்தபெருமானின் கோயிலாகும். ஆகவே, அக்கோயிலில் புத்தபெருமான் தொடர்பானவையும், பௌத்தம் தொடர்பானவையும் தான் காணப்படமுடியுமேயன்றி, ஒரு இனம், சாதி, குழு போன்றவவைகளை அடையாளப்படுத்தும் விடயங்களும், தமிழர் மீதான சிங்களவரின்; போர் வெற்றிபற்றியோ இருக்கமுடியாது. இந்தநிலையில், போரில் வெற்றிபெற்றதாகக் கூறப்படும் துட்டகாமணீ உயர்த்திய கொடியானது புத்தபெருமானின் அற ஆட்சியானது இலங்கை பூராகவும் நிலைநாட்டுப்பட்டதைக் குறிக்கிறதா? அதாவது, வாளேந்தும் ஆண் சிங்கக் கொடியானது புத்தபெருமானைக் குறிக்கிறதா? ஆந்தக் கொடியில், ஏன் வாளேந்தும் ஆண் சிங்கமானது நடுவு நிலைத் தன்மையையுடையதான முறையில் வைக்கப்பட்டுள்ளது? அது பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவத்தை வலியுறுத்தவா?
இந்த எட்டுக் கேள்விகளுள், மூன்றாம், ஐந்தாம் கேள்விகளுக்கு ஒருவித விளக்கத்தினைக் கொடுக்க முன்னைய ஆராய்வாளர்களும், அரசியல்வாதிகளும் முற்பட்டு இருந்துள்ளனர். ஆனால், அவர்களது விளக்கங்கள் விஞ்ஞானத் தன்மையற்றதாகவே காணப்படுகின்றன.
அவர்கள் ஏனைய ஆறு கேள்விகளையும் எழுப்பவேயில்லை! இதனால், இந்த இரண்டு கேள்விகளுக்கான அவர்களது விடைகளும் கற்பனாவாதமாக ஆகியுள்ளது.
1. ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது அடையாளங்கள்:
ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது என்பவைகள், ஒருமித்தும், தனித்தனியாகவும், இரண்டு ஒன்றாகவும், நாணயங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், ஏனையவைகளில் தென்னிலங்கையிலும், வட இலங்கையிலும், தென்னிந்தியா, வட இந்தியா, கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன.

சந்திரவட்டக்கல்
தென்னிலங்கையில், அநுராதபுரவில்; கண்டெடுக்கப்பட்ட சந்திரவட்டக் கல்லில் (Moon Stone) ஆண்யானை, ஆண்சிங்கம், ஆன்குதிரை, எருது என்பவை திரும்பத்திரும்ப வளைவில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. உள்வளைவில் அன்னபறவை மீண்டும்மீண்டும் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவைகள் எவற்றைக் குறிக்கின்றன என்பதை ஆராய்வாளர்கள் விஞ்ஞான hPதியாக ஆராய்ந்தறிய முடியாத நிலையில், கற்பனாவாதக் கதைகளை ?ஆய்வு? விளக்கங்களாகக் கூறி, எழுதி வந்துள்ளனர்.

கரந்தைச்செப்பேட்டு முத்திரை
தென்னிந்தியாவில் கரந்தைச் செப்பேட்டு முத்திரையில், ஆண்சிங்கம், ஆண்யானை, ஆண்குதிரை, எருது என்ற நான்கும், இரட்டைமீன் அடையாளத்துடனும், சுவஸ்திகா அடையாளத்துடனும், குடை, இருபுறம் சாமரைகளின்கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

Lion Capital
வட இந்தியாவின் Sarnath இல் அசோகச் சக்கரவர்த்தியால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் உயர்ந்த து}ணின் உச்சியில் ?Lion Capital? வைக்கப்பட்டிருந்தது. இந்த ?Lion Capital?இன் மேற்புறமாக நான்கு சிங்கங்கள் நாலு திசைகளையும் பார்த்தவண்ணம் அமர்ந்துள்ளன. இவை இருக்கும் தளத்திற்குக் கீழே இருக்கும் உருளைக் குற்றியின் சுவரில் ஆண்யானை, ஆண்குதிரை, ஆண்சிங்கம், எருது என்பவைகள் தம்மச் சக்கரத்தால் பிரிக்கப்பட்டு அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த ?Lion Capital? எவற்றினை அடையாளப்படுத்துகின்றது என்பதை, இன்றுவரை ஆராய்வாளர்கள் ஆராய்ந்தறியவில்லை, அவர்களால் அறிய முடியவில்லை.
இவற்றினைப் போலவே, இந்தோனேசியாவின் Boru Buddur(பெரும்புத்தூர் ? ) என்ற இடத்துக் கோயிற் சிற்பங்களில், போதிசத்வவின் கதையானது சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதிலும், போதிசத்வவுடன் ஆண்யானை, ஆண்சிங்கம், ஆன்குதிரை, எருது என்பவைகள் காணப்படுகின்றன. ஆனால், ஆராய்வாளர்களால் இவை எவற்றை அடையாளப்படுத்துகின்றன என்பதை அறியமுடியவில்லை.
ஆனால், வட இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பண்டைய நாணயங்களும், இலங்கையின் தென்பகுதியான Ruhunu பகுதியில் 1998ஆம் ஆண்டுக் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்து, மற்றும் நாணயங்களும், இந்த நான்கு மிருகங்களும் எவற்றை அடையாளப்படுத்துகின்றன என்பதை அறியப் பெருதும் உதவுகின்றன.
கந்தரோடையில் காணப்படும் தமிழ் புத்தசமயத்தடன் தொடர்புடைய சின்னங்கள்

கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட நாணயம்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கந்தரோடையில், ஒரு பக்கத்தில் ஆண்சிங்கத்தைக் கொண்டிருக்கும் நாணயத்தின் மற்றப் பக்கத்தில், வட்டத்தினுள், சதுரத்தின் முலைகளில் வைக்கப்பட்டதுபோன்று வைக்கப்பட்ட நான்கு குத்துக்ளும் காணப்படுகின்றன இதுபோன்ற நாணயங்கள், அநுராதபுர, Akkurugoda (1998), மற்றும் இடங்களிலும் கிடைத்துள்ளன. இவற்றின் விபரங்களையும், படங்களையும், ஒருவர் Ceylon Coins and Currency?(1924); H.W. Codrington இன் நூலின், Plate II இலும், ?Ruhuna ? An ancient Civilization Re-visited? (1999)@ Osmond Bopearachchi & Rajah M. Wickremesinghe; Coin Nos: H.27, 28,& 29 இலும் காணலாம்.
பூநகரிப் பகுதியில் சென்ற தசாப்தத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒருவகை நாணயத்தின் ஒரு பக்கத்தில் குதிரையும், வட்டத்தினுள் நான்கு குத்துகளும் காணப்படுகின்றன. இதன் படத்தினை ஒருவர், ?பூநகரி ? தொல்; பொருளாய்வு? (1993) ப. புஷ்பரட்ணம் பக்கம்-53 இல் காணலாம்.

குதிரையும், வட்டத்தினுள் நான்கு குத்துகளும்
இலங்கையின் வட பெருநிலப்பகுதியின் வீரபாண்டியன்முனை என்ற இடத்தில, ஒரு பக்கத்தில் எருதின் அடையாளத்தையும், மறுபக்கத்தில் வட்டத்தினுள் இருக்கும் நான்கு குத்துகளைக்கொண்ட அடையாளமும் உள்ள செப்பு நாணயம் அண்மைக்காலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் படத்தினை ஒருவர் ?Ancient Coins of Sri Lankan Tamil Rulers?(2002)@ P. Pushparatnam, Page ?77 இல் காணலாம்.

இவைகளிலிருந்து, இந்த நாணயங்களில் வட்டத்தினுள் இருக்கும் நான்கு குத்துகள் பொதுவாக இருக்கும் நிலையில், ஆண்சிங்கமும், ஆன்குதிரையும், எருதும் ஒன்றையே குறிக்கவேண்டும் என்பது தெளிவாகிறது.
இது சாத்தியமாவதாயின், ஆண்குதிரையும், ஆண்சிங்கமும், எருதும் மூன்று சமூகங்களைக் குறிக்காது, ஒரு குறிப்பிட்ட பெரிய மனிதனையே அடையாளப்படுத்த வேண்டும். அப்படியானால், ஆண்சிங்கத்தாலும், ஆண்குதிரையாலும், எருதாலும் அடையாளப் படுத்தப்பட்ட அந்த பெரியோன், நான்கு விடயங்கள் ஒன்றிணைக்கப்பட்டவொரு தொகுதி யுடன் தொடர் பானவனாக இருக்கவேண்டும்! இப்படி, நான்கு விடயங்கள் ஒன்றிணைக்கப் பட்டவொரு தொகுதியுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள ஒரு மனிதன் யார்? அந்த நான்கு விடயங்கள் ஒன்றிணைக்கப்பட்ட தொகுதி என்ன? இவற்றை ஆராய்ந்தறிவதே, இங்கு மிக முக்கியமான விடயமாகும்.
இதைப்போலவே, நாணயத்தின் ஒருபக்கத்தில் வட்டத்தினுள் மூன்று குத்துகளையும், மறுபக்கத்தில் ஆண்யானை, ஆண்சிங்கம் என்பவைகளைத் தனித்தனியே கொண்ட நாணயங்களும் இலங்கையின் வட, தென் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆண்சிங்கமும், ஆண்யானையும் குறிப்பிட்ட ஒரு பெரியோனை அடையாளபடுத்தவேண்டும் அப்பெரியோன் மூன்று விடயங்களைக் கொண்டவொரு தொகுதியுடன் தொடாபுடையவனாக இருக்கவேண்டும்.
இந்தநிலையில், இந்த நாணயங்கள், ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது என்பவைகள் குறிப்பிட்டவொரு பெரியோனை அடையாளப்படுத்துகிறது என்பதையும்@ அப்பெரியோன் நான்கு விடயங்களைக் கொண்டவொரு தொகுதி, மூன்று விடயங்களைக் கொண்டவொரு தொகுதி என்பவைகளுடன் தொடர்புடையவன் என்பதை வலியுறுத்து கின்றன.
இவற்றை உறுதிப்படுத்தும்வகையில், தென்னிலங்கையின் Akkurugoda யில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு வகை நாணயங்களில் Bope. Coin No:F.8 இல், ஒருபக்கத்தில் ஆண்யானையும், மற்றப்பக்கத்தில் ஆண்குதிரையும் காணப்படுவதுடன் No:A.8 இல், ஒரு பக்கத்தில் ஆண்யானையும், ஆண்;குதிரையும் காணப்படுகின்றன@ Coin No: E.23, ஒரேபக்கத்தில் ஆண்யானையும், எருதும் காணப்படுகின்றன வன்னிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயத்தின் ஒருபக்கத்தில் எருதும், மற்றப் பக்கத்தில் ஆண்யானையும் காணப்படு கின்றன.
ஒட்டுமொத்தத்தில், ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது என்பவைகள் ஒரு பெரியோனை அடையாளப்படுத்துகின்றன அவன் நான்கு விடயங்களைக் கொண்டவொரு தொகுதியுடனும், மூன்று விடயங்களைக் கொண்ட தொகுதியுடனும் தொடர்புடையவனாக உள்ளான். இது, இந்த இரண்டு தொகுதி விடயங்களும், அவடைய போதனையுடன் தொடர்பானதாகவே இருக்கமுடியும் என்ற முடிவுக்குவர நிர்ப்பந்திக்கிறது. அப்படியாயின், இப்படியான தொகுதி விடயங்கள் எந்தப் போதனையில் காணப்படுகின்றன?
இப்படியான தொகுதிகளை நாம் பௌத்த போதனையிலும் காணமுடியும். பௌத்தமானது மும்மணியினால் ஆனது (Triple-gem) புத்த(ன்) மணி, தம்ம(ம்) மணி, சங்க(ம்) மணியினால் ஆனது. பௌத்தத்தின் அடிப்படையானது, நான்கு பெரும் உண்மைகளாகும் (the Four Noble Truths).
ஆகவே, ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது என்பவைகளால் அடையாளப்படுத்தப்பட்டவன், புத்தபெருமான் ஆகும்!
இதை நாம் மேலதிக ஆதாரங்களுடாக உறுதிப்படுத்தவேண்டும். இதனை இரண்டு வழிகளில் செய்யமுடியும். ஆவையாவன:
1. ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது என்ற அடையாளங்களுடன் நாணயங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், சிற்பங்கள், ஏனையவைகளில் காணப்படும் வேறு அடையாளங்கள் புத்தபெருமானுடனும், பௌத்தத்துடனும்தான்; தொடர்பானவையா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்துவது@
2. இலக்கியங்கள், நூல்களில், புத்தபெருமான் இந்த நான்கு ஆண் மிருகங்களாலும் அடையாளப்படுத்தப்பட்டு விபரிக்கப்பட்டுள்ளாரா என்பதை ஆராய்ந்தறிவது.
இவற்றுள் முதவாவதானது, எம்மைப் புத்தபெருமானும், பௌத்தமும் எப்படியெப்படிப் பௌதீக ரீதியாக அடையாளப்படுத்தப்படலாம் என்பதை ஆராய்ந்தறிய நிர்ப்பந்திக்கிறது.
இவை பற்றி அடுத்த பகுதியில் ஆராய்வோம் அதற்கு இணையத்தளம் ஊடக மீண்டும் சந்திப்போம் அது வரை சிந்திப்போம்.
இங்கு ஆராயப்பட்டவை பற்றி ஏனையோருக்கு அறியக் கொடுங்கள். உங்களது கருத்துக்களையும், ஆய்வுகளையும் இந்த இணையத் தளமூடாக முன்வைத்து, வாதியுங்கள். அறிவியலே இலங்கையில் சமூகங்களை நிலைக்க வைக்கும், முன்னேற வைக்கும், மேன்மையான மனித வாழ்க்கையை அமைக்க வைக்கும்.
Abimānasingha(m) Sitthāwathai Uthayakumār(a) B. Sc. (Mech. Eng),
Ex- Legionnaire ( Legion Etrangere- Francaise)