|
January 16, 2004
நாகரிகம் கண்ட அனைத்து மனித இனமும் அண்டத்தைப் பற்றியும்
கோள்களைப் பற்றியும் தேடுதல் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன.
அதில் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் நடந்துவரும் பல்வேறு
வகையான வியக்க வைக்கும் ஆய்வுகள் புதிய விஷயங்களை நாளுக்கு நாள்
அறிவித்துக் கொண்டிருக்கின்றன. புதிய விஷயங்கள் நமக்குக்
கிடைக்கும் போது அதில் அடிப்படையிலேயே எதிர்பார்ப்பும்
ஆச்சரியங்களும் சேர்ந்தே வருகின்றன என்பதுதான் உண்மை.
பூமிக்கு மிக அருகிலிருக்கு
நிலவில் கால் பதித்ததோடு(?) நின்று விடவில்லை மனிதனின் ஆர்வம்.
மற்ற மற்ற கோள்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சிகள்
வெகு துரிதமாக தொடர்ந்து நடந்து வருகின்றன. அதிலும் கடந்த சில
வருடங்களில் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வரும் செயற்கைகோள்
எண்ணிக்கை, அதோடு வேற்று கிரகங்களுக்கு அனுப்பப்படும் ரோபோட்
இயந்திரங்கள் போன்றவை இதனை நிரூபிப்பவனவாகவே இருக்கின்றன.
12 வருடங்களாக பல கோள்களைச் சுற்றி வந்த Voyager-II இதில்
முக்கியமான ஒன்று. பூமிக்கு வெளிச்சுற்றில் உள்ள ஏனைய 5
கிரகங்களில் 4 கிரகங்களுக்குச் சென்று இறுதியாக 1989ல் Neptune
அடைந்தது Voyager-II. இந்த மிகப்பெரிய கோளச் சுற்றுலாவிற்குப்
:-) பிறகு பூமிக்கு அருகிலிருக்கும் ஏனைய கிரகங்களைப் பற்றிய
பயனுள்ள கற்பனையற்ற உணமைத் தகவல்களைப் பெற முடிந்தது அறிவியல்
உலகில் நிச்சயமாக ஒரு சகாப்தம் என்றே சொல்ல வேண்டும்.
நிலவுக்குச் செல்ல வேண்டும்; அங்கு மனிதன் கால் வைத்து நடக்க
வேண்டும்; அங்கு உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய
வேண்டும் என்ற எண்ணம் ன்றியதற்கும் செவ்வாய் கிரகத்திற்குத்
தொடர்ந்து பல ஆய்வு போட்கள் அனுப்பப்பட்டு வருவதற்கும்
அடிப்படையில் ஒற்றுமையைக் காட்டக்கூடிய சில விஷயங்கள்
அடங்கியிருக்கின்றன. மனிதனுக்கு பூமிக்கு அருகிலிருக்கும் மற்ற
கோள்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து
கொள்வதில் தீவிர அவா இருக்கின்றது.
ஆழ்மனத் தேடலோடு விஞ்ஞானமும் சேர்ந்து கொள்வதால் இது அறிவியல்
தேடலாக பெயர் ண்டுவிடுகின்றது. அடுத்ததாக, மிக அற்புதமான வகையில்
வியக்க வைக்கும் வகையில் வளர்ந்து வரும் கணினி இயந்திரத்
ழில்நுட்பம் அண்டங்களை கணினி இயந்திரத் தொழில்நுட்பத்தின்
துணையோடு அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை
வழங்கியிருக்கின்றது. பற்பல விண்வெளி முயற்சிகள் தோல்வி
கண்டிருக்கின்ற நிலையிலும், இவ்வகை ஆராய்ச்சிகள் தொடர்ந்து
நடந்து கொண்டேயிருப்பதற்கு இதுதான் அடிப்படையில் காரணமாக
இருக்கின்றது.
பூமியில் இடம் இல்லாத போது, அல்லது பூமி மனிதர்கள் வாழ்வதற்குத்
தகுயில்லாமல் போகும் போது வேற்று கிரகங்களுக்குச் சென்று
வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்குமா என சிந்திக்கும் மனிதர்கள்
இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த மனதில் எழும்
எண்ணத்தைக் கடந்து, நிலவிலும் மற்றும் அருகிலுள்ள மற்ற
கிரகங்களிலும் நிலங்களை வாங்கி இப்போதே நாம் சொத்துக்களைச்
சேர்ப்போமே என்ற முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும்
தொடங்கியிருக்கின்றன.
அமெரிக்கரான டென்னிஸ், MoonEstates.com வழி இங்கிலாந்து மக்கள்
இந்த நிலங்களை வாங்க முடியும் என்று அறிவித்து வலைபக்கத்தின் வழி
இந்த விற்பனையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த
வலைப்பகத்தில் உள்ள தகவலின் படி, நிலவில் உள்ள ஒரு ஏக்கர் நிலம்
16.75 இங்கிலாந்து பவுனுக்குக் கிடைக்கின்றது. இந்த சுவையான
தகவலைத் தெரிந்து கொள்ள http://www.moonestates.com சென்று
பாருங்களேன். |