|
இவ்வார
வலைப்பூ சஞ்சிகையின் ஆசிரியர் கண்ணன் அவர்கள் கணணித் தமிழ் பற்றியும்
தமிழ் மொழி பேசும் வெளிநாட்டவர்கள் பற்றியும் சுவையான தகவல்களைத்
தந்துள்ளார்,தமிழ் மொழி பேசும்வெளிநாட்டவர் எனும் போது முக்கியமாக
நினைவுக்கு வருபவர் வீரமாமுனிவர்.
தமிழைக் கற்றுப்புலமையுறத்
தேறியதோடு நூல்களையும் எழுதியவர் அவரது பரமார்த்த குருவும் சீடர்களும்
என்ற நூல் இன்றளவும் நினைவில் நிற்பது
அத்துடன் பல்வேறு வட்டாரங்களில்
வழங்கும் தமிழின் பேச்சு வழக்கு அல்லது மொழிப்பிரயோகம் பற்றி யாழ்
இணையத்தில் சுவையானதொரு விவாதம் நடைபெற்றது முக்கியமாக எழுந்த கருத்து
ஈழத்துத் தமிழ் தான் சுத்தத் தமிழா? என்பது பல்வேறு
வாதப்பிரதிவாதங்கள் மத்தியில் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து
ஈழத்துத் தமிழர்களின் தமிழில் ஆங்கிலக் கலப்பு குறைவு அதே போன்று இன்று
தாய்மொழிக்கல்வி இணையவழித் தமிழ் என்பவற்றில் ஈழத்துத் தமிழர்கள் பெரும்
பங்காற்றி வருகின்றனர் என்பவையாகும் |