www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

இந்து சமயத்தின் தனித்துவ மேன்மை இகழப்படும் அவலம் தடுக்கப்படுமா?

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்று அருட்பாடலில் குறிப்பிடப்படுவது போன்று இன்று உலகமெங்கும் வியாபித்து விளங்கிக்கொண்டிருக்கின்றது எமது சைவ சமயம்.இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமன்றி நேபாளம், மொறீசியஸ் போன்ற பல நாடுகளில் எழுச்சியுற்றுக் காணப்படுகின்றது இந்துமதம்.இயற்கை எழில் கொஞ்சும் மருதநிலம், குறிஞ்சிநிலம் போன்ற இடங்களில் அமைதியான சூழலில் சைவாலயங்கள் இருப்பது போன்று உலகில் சனநெரிசல் மிகுந்த நகரங்களான லண்டன், ரொறொன்டோ போன்ற இடங்களிலும் பல சைவாலயங்கள் தலைநிமிர்ந்து சைவம் வளர்க்கப்படுகின்றது.

மனிதன் எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரையறைக்கள் நின்று வழிகாட்டுவது சைவசமயம்.இயற்கை வடிவிலே இறைவகை;காண்கின்ற சமயம் சைவசமயம். அன்று சிக்காகோ மாநாட்டில் இந்து சமயத்தின் மேன்மையை உலகத்துக்கு அறிவித்தார் சுவாமி விவேகானந்தர்.இறைவனின் அனுக்கிரகம் பெற்ற சைவகுரவர்களாகிய நாயன்மார்களினால் பாடப்பெற்ற தேவார,திருவாசகங்கள், திருப்திகங்கள் சைவசமயத்தவர்களின் வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன.இந்து மதத்தில் கூறப்படுகின்ற புனிதமான ஆத்மீக நெறியானது மேலைத்தேசத்து மக்கள் பலரையும் ஆட்கொண்டிருக்கின்றது என்பது உலகறிந்த விடயம்.

உதாரணமாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சுவாமி தந்திரதேவ மகராஜ் இந்து மதத்தின் ஆத்மீக நெறியில் நாட்டம்கொண்டு, காவியுடை தரித்து திருகோணமலையில் ஆசிரமம் அமைத்து தேவார, திருவாசகங்களின் பொழிப்புரைகளை அழகு தமிழில் சிறுபிள்ளைகளுக்கு விளக்கிக்கூறுகின்ற புனிதமான பணியைச் செய்துகொண்டிருக்கின்றார்.சைவசமயத்தின் தத்துவங்களைக்கூறுகின்ற நுல்களில் ஒன்றாகிய சைவ சித்தாந்தம் பிற மத்தைச் சேர்ந்த கல்விமான்களினாலும் பல்கலைக்கழகங்களில் ஆய்விற்குட்படுத்தப்பட்ட பெருமையைப் பெறுகின்றது.ஆகவே, தற்காலத்தில் சைவசமயத்தின் மேன்மையானது அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.
 

யாழ்ப்பாணமும் சைவசமயமும்
தமிழ் மொழியையும் சைவசமயத்தையும் அவற்றுக்கேயுரித்தான கலாசார பண்பாட்டு இயல்புகள் குன்றாத வகையில் வளர்த்த பெருமைக்குரிய மண் யாழ்ப்பாண மண் ஆகும்.அந்நியராட்சிக்காலத்தில் சைவாலயங்கள் இடிக்கப்பட்டு சைவாலயம் அடிமைத்தளையினுள் சிக்கிக் கொண்டிருந்த காலத்தில், நல்லை நகர் ஆறுமுகநாவலர் அவர்கள் சைவசமயத்தையும் தமிழ் மொழியையும் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றி மீண்டும் மேன்மையுறச் செய்தார்.அத்துடன், கடந்த கால யுத்த அனர்த்தங்களின்போது யாழ். குடாநாட்டுக்கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் வறுமை நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி அரைக்கிலோ அரிசிக்கும் கால்கிலோ பருப்புக்கும் எமது சைவசமயம்பேரம் பேசப்பட்ட நிலையும் யாழ் மண்ணில் நடைபெற்றிருக்கின்றது.

"பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும் இறக்கும்போது சைவசமயத்தவர்களாகவே இறப்போம் என்ற உறுதியுடன் செயற்பட்ட குடாநாட்டுக் கிராமங்களில் வாழும் ஏழைச் சைவமக்களை யாழ் மண்ணில் சைவசமய வரலாறு என்றும் மறந்துவிட முடியாது.ஆகவே, யாழ். மண்ணுடன் இரண்டறக்கலந்துவிட்ட சைவசமயத்தை ஒருபோதும் பிரிக்கமுடியாது என்பதை வரலாறு நன்கு உணர்த்தியுள்ளது. ஆனால், இவ்வாறு பல முனைப் போராட்டங்களின் உடாக எழுச்சியுற்ற சைவசமயத்தின்மேன்மையானது தற்காலத்தில் யாழ்.குடாநாட்டில் பேணிக்காக்கப்படுகின்றதா என்பது கேள்விக்குரிய விடயமே என்பதை நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சைவாலயங்கள்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று ஒளவையார் பாடியதபோன்று அரிது அரிது அமைதியான சைவாலயங்களை;க காண்பது அரிது என்ற நிலையே தற்காலத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன.நான் பெரிது, நீ சிறிது என்ற விதண்டா வாதங்கள் வளர்ச்சிஅடைந்து, கடவுள் யாருக்குச் சொந்தம் என்ற நிலையில் நீதிமன்றப்படியேறி வழக்காடுகின்ற சைவாலயங்களே கூடுதலாகக் காணப்படுகின்றன.அமைதியைப் பேணவேண்டிய ஆலயங்கள் சில சந்தர்ப்பங்களில் சமர்க்களங்களாக மாறுகின்றன.ஊரின் நடுவே அமைந்திருந்த கோயில்கள் காரணமாக சமூக ஒற்றுமை பேணப்பட்ட அந்தக்காலம் ஆலயப்பிரச்சினைகள் காரணமாக இரத்த உறவுகள் பிளவுபட்டிருப்பது இந்தக்காலம்."குளிக்கப்போய்ச் சேறு பூசும் நிலiயில் மாற்றம் வருமா?சமூக ஒற்றுமையைக் குலைக்கின்ற சைவாலயப்பிரச்சினைகள் அடுத்த சந்ததிக்கும் கையளிக்கப்படுமா?

சைவ ஆலயங்களில் மிருகபலிகள்கொலை, களவு போன்ற பஞ்சமாபாதகங்களைச் செய்யக்கூடாது என்பதனைத் திடமாக வலியுறுத்துகின்ற சமயம் எமது சைவசமயம்.ஆனால், அண்மையில் வலிகாமம் பகுதியில் உள்ள சைவாலயம் ஒன்றில் எண்ணுறு ஆட்டுக்கடாக்கள் பலியிடப்பட்டதாக பத்திரிகைச்செய்திகள் தெரிவிக்கின்றன.இந்துமத வளர்ச்சியில் அக்கறையுள்ள பலபொது அமைப்புக்கள் குடாநாட்டில் இயங்கிக்கொண்டிருந்த போதிலும் சில ஆலயங்களில் நிகழும் மிருகபலிகள் தொடர்பாக மறுப்பு அறிக்கை எதுவும் தெரிவிக்காது மௌனம் சாதித்தமை மிகவும் கவலைக்குரி யவிடயமே. மௌனம் சம்மத்தின் அறிகுறியாகவும் இரக்கலாம்.

புதையல் பெறுவதற்காக குழந்தைகளை நரபலி கொடுத்ல், கணவன் இறந்தபின் மனைவியை உடன்கட்டை ஏற்றுதல் தேர்தலில் அரசியல் வாதிகள் தோற்றல் ஆதரவாளர்கள் தமக்குத் தாமே தீ மூட்டித்தற்கொலை செய்தல், சினிமா நடிகைகளுக்குக் கோயில்கட்டிப் பூசை செய்தல் போன்ற பகுத்தறிவற்ற செயற்பாடுகளுள் சைவாலயங்களில் மிருகபலிச் செயற்பாடுகளும் அடக்கப்படுகின்றன என்பதை சைவசமயத்தவர்கள் என்று போலி வேடம் தரித்த சில பழமைவாதிகள் அறியாமல் இருப்பது மனவேதனைக்குரிய விடயமே.

சைவாயங்களின் சமூகத்தொண்டு
விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரண்டு சைவாலயங்கள் மட்டும் சமயத்தொண்டுடன் சமூகத்தொண்டையும் இணைத்து முன்மாதிரியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.ஏனைய பெரும்பான்மையான சைவாலயங்களில் சமயத்தொண்டுக்கும் சமூகத்தொண்டுக்கும் இடையே நீண்டதொரு வெற்றிடம் காணப்படுகின்றமையை நாம் நன்கு அவதானிக்கலாம்.கடந்த கால யுத்த அனர்த்தங்களின்போது கொடிய வறுமையால் வாடிய கிராமப்புறத்து ஏழைச்சைவமக்களிடம் சைவசமயத்தின் மேன்மையானது அரைக்கிலோ அரிசிக்குப் பேரம் பேசப்பட்டதற்குப் பிரதான காரணம் சைவாலயங்களின் சமூகத்தொண்டு பின்னடைவாகவுள்ளதே என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை ஆகும்.

திருவிழாக்கள்
பரம்பொருளின் பெரும்புகழைப்பாடி பணிதலன்றிப் பிறவார்த்தை யாதொன்றும் பேசற்க ஆலயத்துள்என்ற வாசகம் பெரும்பான்மையான சைவாலயச்சுவர்களில் காணப்படுகிறது.ஆனால், உண்மையில் நடப்பது என்ன? திருவிழாக்காலங்களில் ஆலயச்சூழலானது புனிதத்தன்மையிழந்து களியாட்ட, கேளிக்கைக்குரிய இடமாக மாற்றப்பட்டுகின்றது.குளிக்கப்போய் சேறுபூசும் நிலை கூடுதலாகக் காணப்படுகின்றது. மேலைத்தேச மக்களாலும் போற்றப்படுகின்ற சைவ சமயத்தின் மேன்மையானது இகழப்படும் அவலநிலையே ஏற்படுகின்றது.சைவசமயத்தவர்களுக்கே உரித்தான கலாசாரப் பண்பாடுகள் நடை, உடை பாவனை மூலம் ஏளனம் செய்யப்படுகின்றன.

சைவசமயத்தின் மேன்மையை பேணிக்காக்கவேண்டிய இன்றைய இளம் சமுதாயமே சில சந்தர்ப்பங்களில் சைவசமயத்துப் பாரம்பரியத்துக்கு ஒவ்வாத உடையணிந்தும் ஆலயச் சூழலை நண்பர்கள் கூடிக்கும்மாளம் அடிக்கும் கேளிக்கைக்குரிய இடமாக மாற்றுவதும் மிகவும் கவலைக்குரியது.ஆகவே, இனியாவது சைவசமயத்தின் மேன்மை பேணிகாக்கப்படுமா?

வடகோவை சிவநேசராசன்
நன்றி உதயன்(29-08-2003)

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]