எத்தனை முறை காதல் கொண்டேன்?
-நிர்மலா -
கவிதை வரிகளால்
காதல் விதைத்தவனிடம்
இறகாய் குரலால்
தீண்டிச் சென்றவனிடம்
தனித்த வேளையில்
துணையாய் நின்றவனிடம்
தவித்த பொழுதில்
தூணாய் சுமந்தவனிடம்
சிறகை விரித்துப்
பறக்கச் செய்தவனிடம்
சிந்தனைச் சிதறலில்
சிலிர்க்க வைத்தவனிடம்
அழுத கணங்களில்
அமைதி காத்தவனிடம்
அத்தனையும் மெல்ல
மறந்திட செய்தவனிடம்....
துளிகளாய் நனைத்ததெல்லாம்
தேடலைத்தான் தூண்டியது!
மொத்தமாய் நனைய வேண்டும்
அருவியாய் ஒருவன் வேண்டும்.
இந்தக் கவிதை 'புத்தகப் புழு'வில் பாரா வைத்த காதல் கவிதைப் போட்டியில் எழுதியது. செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படத் தலைப்பை இந்த கவிதையில் இன்ஸ்பயர் ஆகித்தான் வைத்திருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்! (நெனைப்புத்தான்).
ஆனா இந்தக் கவிதைக்கு இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?
'... ஓட்டைச் செம்புல குளிக்கிற மாதிரி இவரோட குடித்தனம் பண்றேன். தடேர்னு விழற அருவி மாதிரி நீ கிடைச்சப்போ அருவியை விட்டுட்டு வெளியே வர முடியலை....'
யார் சொன்னது? கண்டு புடிங்க பாக்கலாம். க்ளு தேவையிருக்குமா என்ன?








0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு