www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

இன்பத்தமிழ்

ஜெர்மானிய அத்தைகள்

நான் படித்து ரசித்த ஒரு ஜெர்மன் நாவலைப் பற்றிப் பேச ஆசை. இது மொழி பெயர்ப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் டபுள் ஓக்கே.

1946- ஜெர்மனி. இரண்டாம் உலக யுத்த அழிவுகள் இன்னும் நேர் செய்யபடவில்லை. எங்கும் இடிபாடுகள். ஜெர்மனி நான்கு நேசப் படை நாடுகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

அலெக்ஸாண்டர் ஸ்பொரெல் என்ற எழுத்தாளர் எழுதியக் கதைப் பற்றித்தான் நான் இங்குப் பேசப் போகிறேன்.

அதன் கதாநாயகன் அமெரிக்கத் தலைமை அலுவலகத்தில் மொழி பெயர்ப்பாளனாகப் பணி புரிபவன்.

ஒரு நாள் ஒரு ஜெர்மானியன் மிகுந்த ஆவேசத்துடன் அலுவலகத்துக்கு வருகிறான். அவ்னுக்கு ஆங்கிலம் தெரியாது. அமெரிக்கனுக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஒன்றும் தெரியாது. ஆகவே வந்தான் நம் கதாநாயகன் மொழி பெயர்க்க.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சம்பாஷணை நடுவில் கதாநாயகன் மொழி பெயர்த்தது தேனீரில் கலந்தச் சர்க்கரையாக இருக்கும்.

ஜெர்மானியன்: "ஐயா என் பக்கத்து வீட்டுக்காரனுடம் இருக்கும் அவன் அத்தைகள் எனக்கு மிகவும் தொல்லைத் தருகிறார்கள்."

அமெரிக்க அதிகாரி: "என்ன செய்வது ஐயா. என் அத்தைகளை நீ பார்த்ததில்லை என நினைக்கிறேன். ஒவ்வொருத்தியும் ஒரு ராட்சசி தெரியுமா?"

ஜெர்மானியன்:" நாள் முழுவதும் கத்திக் கூச்சல் போடுகிறார்கள்."

அமெரிக்க அதிகாரி: "இது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. அமெரிக்க அத்தைகள் ஜெர்மன் அத்தைகளை விட எவ்வளவோ தேவலை."

ஜெர்மானியன்: "இதை விட மோசம் ஒன்றுண்டு. தினமும் விடியற்காலை என் வீட்டு வாசலில் எச்சம் இட்டுச் செல்கின்றனர்."

அமெரிக்க அதிகாரி (துள்ளிக் குதித்து): "ஜெர்மன் அத்தைகள் கூட அவ்வாறு செய்ய மாட்டார்கள். நான் நம்ப மாட்டேன்.

(கதாநாயகன் பக்கம் திரும்பி): "அத்தை"?

கதாநாயகன் பாவம் மென்று விழுங்குகிறார்.

நடந்தது இதுதான்:

ஜெர்மானியன் புகார் கூறியது பக்கத்து வீட்டுக்காரனின் வாத்துக்களைப் பற்றி. வாத்துக்கு ஜெர்மனில் "என்டெ" என்றுக் குறிப்பிடுவார்கள். கதாநாயகன் அதை ஆன்ட் என்றுக் கூறியதால் வந்த சிறு குழப்பம்தான் அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-1

தமிழ் தலித் இலக்கியப் படைப்பாளிகளுள் மிக முக்கியமானவர் பாமா. இவரது முதல் படைப்பான கருக்கு மூலமாக பரந்த தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். தன் வாழ்க்கையையே சாட்சியாய் வைத்து தலித் மக்களின் அவல வாழ்க்கையை பாசாங்கின்றி பதிவு செய்தவர் அதுவரை பேசப்படாதிருந்த சகலவிதமான சமூக மௌனங்களையும் தனது தனித்துவமான தலித்மொழியினால் கலைக்க முயற்சித்தவர்.
--------------------------------------------------------------------------------
புத்தகம் பேசுது என்னும் இதழுக்கு பாமா அளித்த பேட்டியின் ஒரு பகுதி

பாமா (இந்தியா)


நீங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை (வசவு) எழுதுறதா விமர்சன வட்டாரத்திலே ஒரு முணுமுணுப்பு இருக்கே...?

பாமா படிச்ச பொண்ணுதானே நிறைய கெட்ட வார்த்தைகளை எழுதியிருக்கேன்னு சொல்றாங்க. தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் தான் ஆயதம் எங்களாலே கத்தி வச்சுகிட்டு சண்டை போடமுடியாது. தற்காப்புக்கும் கெட்ட வார்த்தைகள் தான். அடிக்கிறவன் வேணுமானா நல்ல வார்த்தையா பேசலாம் அடிபட்டவன் என்ன வார்த்தையை பேசுவான்? அப்படித்தான் பேசமுடியும். நீங்க எப்படி எங்ககிட்டேருந்து நல்ல வார்த்தையை எதிர்பார்க்கிறீங்க காலம் முழக்க சாதியைச் சொல்லி அடிக்கிறே, பெண்ணுன்னு சொல்லி ஒதுக்குறே, பொருளாதார ரீதியா ஒடுக்குறே, கலாச்சார ரீதியா இழிவுபடுத்துறே இவ்வளவுவையும் தாங்கிகிட்டு நாங்க நல்ல வார்த்தை தான் பேசணும்னா சாத்தியம் இல்லே அப்படி எழுதினா அது உண்மைக்குப் புறம்பா எழுதுற விசயம் தான்.

இப்போது நிறைய பெண் கவிஞர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் பெண்மொழி சமூகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியாதா இருக்கு. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

நிறைய பெண் கவிஞர்கள் பெண் உடல் சார்ந்து, பெண் பிரச்சினைகள், பெண்பாலியல் சார்ந்து நிறைய கவிதைகள் எழுதுறாங்க. அதை நான் குறைச்சு மதிப்பிடல. அதே சமயத்துல பெண்களுக்கு வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் இருக்குதில்லே.. பிரசவம், குழந்தைப்பேறு பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது, வயசுக்கு வருவது இந்த மாதிரி விசயங்கள் இவையெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு தலித் பெண்ணுக்கு பிரச்னைகளே இல்லை. இதைவிட பயங்கரமான பிரச்னைகளெல்லாம் இருக்கு. நிறைமாச கர்ப்பத்தோட வயல்ல குனிஞ்சு நட்டுகிட்டு வர்ற பெண்களை பார்த்திருக்கேன். மரத்திலே தொட்டி கட்டி போட்டு குழந்தை பசியோட கத்திக்கிட்டே கிடக்கும் வேலையை முடிச்சிட்டுதான் பாலுட்டவே முடியும். இப்படியெல்லாம் பிரச்னை இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு இவங்க எழுதுறாங்களேன்னு. ஒருகனமில்லத விசயமாத்தான் எனக்குப்படுது அதனால இதையெல்லாம் சிலாகிச்சு என்னால பாராட்ட முடியல.


உங்கள் தலித் மொழிநடைக்கு நிறைய விமர்சனங்கள் வந்ததில்லையா..?

இதுவரை தமிழ்ப்படைப்பாளிகள் எல்லாம் ஆண் மொழியில் தான் எழுதிகிட்டிருந்தாங்க இவங்க என்னுடைய தலித் மொழியை ஏற்றுக் கொள்வதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. தமிழ் இலக்கிய பிhதாமகர்கள் ஒரு வகையான மொழிநடை சுகமான வாசிப்பு என்று வைத்திருக்கிறார்கள். அதைத்தான் எல்லாரும் கடைப்பிடிக்கணும் என்கின்ற எதிர்பார்ப்பு இவங்களுக்கு இருக்கு. ஏன் ஏன் அப்படித்தான் இருக்கணும்? புதியமொழி, புதியநடை, புதிய சொல்லாடல் இருக்க்கூடாதா? இதை ஏன் இவங்களாலே சகிக்க முடியல்லே இதையே ஆதிக்க சாதியினரோ ஆண்களோ எழுதியிருந்தால் சிலாகித்திருப்பார்கள்.


இன்றைய குடும்ப அமைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

இப்போது இருக்கிற குடும்ப அமைப்பு பெண்கள் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடியது இன்றைய சராசரி வளர்ப்பு முறையில் பெண்குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு கல்யாணக் கவலை வந்துவிடுகிறது. இது மாறணும் பெண் குழந்தைகள் திருமணத்துக்காக வளர்க்கபப்பட வேண்டிய ஒரு பொருள் என்கிற கண்ணோட்டத்தை விட்டு;ட்டு வளர்த்து வந்தோம்னா அது வளர்ந்த பிறகு அதுவே முடிவு செய்து கொள்ளும்.

உங்க கருக்கு நாவல் இலக்கிய வட்டாரத்திலே எந்த மாதிரியான கவனிப்பை பெற்றது?

நான் எதிர்பாராத அளவுக்கு பெரிய வீச்சு கிடைச்சுது. அதன் வடிவம் மொழிநடை, விசயம் எல்லாம் புதிசா இருக்கிறதா பரவலா ஏத்துகிட்டாங்க சில பேர் இது நாவலா? என்ன மொழி நடை இது என்கிற மாதியான விமர்சனத்தை வைச்சாங்க அதைப் பற்றி எல்லாம் நான் பெரிய அளவுக்கு கவலைப்படலே. ஏன்னா நான் இலக்கியவாதிகளுக்காக அதை எழுதல அதனால எனக்கு அது பெரிய விசயமா தெரியல. சர்ச் சைடுலேருந்து பெரிய எதிர்ப்புக்கள் வந்துச்சு அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நடந்தைத்தானே எழுதியிருந்தேன்.


சங்கதி நாவல்லே கடைசி அத்தியாயத்திலே நானு பறச்சியாய் பெறந்தது ரொம்ப நல்ல காரியமாத்தான் தெரியுது. ஆனா எம்புட்டுத் தடவ இந்தச் சாதில பெறந்ததுக்காக வெக்கப்பட்டுக்கிட்டு வருத்தப்பட்டு இருந்திக்கேன்னு நினைச்சு கிட்டேன்னு பெருமையா சொல்லியிருக்கீங்க. நீங்கள் சங்கதியில் வாசகர்களுக்கு சொல்ல வந்த சங்கதி இது தானா?

இந்த மாதியான கஷ்டமான சூழலிலே நாங்கள் இருந்தாக் கூட அதையெல்லாம் உடைச்சிகிட்டு வாழ்ந்து காட்டக்கூடிய பாத்திரப் படைப்புக்கள் அதிலே இருக்கு. அந்தப் பலத்துக்கு காரணம் தலித் பண்பாடு என்பதை கோடிட்டு காட்டுறேன். அந்தப் பண்பாட்டு ரீதியான புரட்சியை செய்யும் போது இந்த மாதிரிப்பட்ட ஒரு கஷ்டத்திலேயும் கூட விடுதலை அடைந்த பெண்களோட சரித்திரம் தான் இது என்கிற மெஸேஜா இருக்கு.


இப்போது உங்களுக்கும் உங்கள் கிராமத்துக்கும் ஆன தொடர்பு எப்படி இருக்கு?

நான் எட்டாவது படிச்சுட்டு 13 வது வயதிலேயே கிராமத்தை விட்டு வெளியே போயிட்டேன். அதுக்கு பிறகு லீவுக்கு போறது தான் அதுக்கு பிறகு நிரந்தரமா அங்கு போய் வாழ்றது இல்லே. நான் பிசிக்கலா இங்க இருக்கேன்னாலும் உணர்வுரீதியா அங்கே தான் இருக்கேன்.. சமூக தளத்திலே இல்லன்னா எழுதுறது கஷ்டம்.

கருக்கு 1992ல் வந்தது சங்கதி 1994ல் வந்தது. இடையிலே நிறைய கதைகள் எழுதியிருக்கீங்களே?

சிறுகதை எழுத முடியும்னு நான் நினைக்கலே அதுக்காக நான் முயற்சியும் பண்ணலே. கருக்கு வந்த பிறகு இந்திய டுடெல தான் இலக்கிய மலருக்காக ஒரு சிறுகதை கேட்டாங்க அப்போதான் அண்ணாச்சி என்கிற கதையை எழுதினேன். அது எல்லோருக்குமே பரவலா புடிச்சிருந்தது. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப தெம்பா இருந்தது. அந்தக் கதை தான் என்னால கதை எழுத முடியும் என்கிற நம்பிக்கையை உண்டாக்கி;ச்சு.

உங்க ஊர் மக்கள் என்ன மாதிரி பீல் பண்ணாங்க?

கடுமையான எதிர்ப்பு வந்தது அது நான் எதிர்பார்க்காத ஒண்ணு. ஊருபேரை மட்டும் மாற்றி எழுதியிருந்தேன். ஆனா லொககேசனை வைச்சு இந்த ஊர்தான்னு புரிஞ்சிருக்கலாம்.மனுசங்க பேரையெல்லாம் அப்படி அப்படியே வைச்சிருந்தேன். பட்டப் பெயரையெல்லாம் வைச்சு எழுதிட்டேன். அது அவங்களுகு;கு கஷ்டமாயிடுச்சு அங்கே ரொம்ப பேருக்கு வாசிக்கத் தெரியாது. வாசிச்ச கொஞ்சப் பேரும் இத எவ்வளவு பேரு படிப்பாங்க என்கிற மாதிரி ஏத்தி விட்டுட்டாங்க நான் வெளியூருல இருந்ததால எங்க அப்பாவைக் கூப்பிட்டு சண்டை போட்டுருக்காங்க எங்க ஊருக்குள்ளேயே நான் போக முடியல.


தொடரும்...

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

ஒரு தமிழ் திரைப்பட இயக்குனரின் திரையுலக வாழ்க்கை

-சஞ்ஜீத்குமார் :மூலம் திசைகள்-

குமரன் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே பார்த்து வந்தான். கும்பகோணத்தருகில், சிறு கிராமம் ஒன்றில் அகல்கள் மட்டுமே படைப்பதை தொழிலாகக் கொண்டாலும், எதிர்காலத்தில் அவன் கரங்களும் சிந்தனைகளும் உலகம் போற்றும் மாபெரும் படைப்புகளைத் தோற்றுவிக்கும் என்பதில் அசுர நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அவை என்னவென்றும், எத்துறையில் என்றும் அவனுக்குத் தெரியவும் இல்லை, தெரிந்து கொள்ளவும் முயற்சி எடுக்கவில்லை. "உலகம் என் படைப்புகளுக்காக காத்திருக்கட்டும்" என்ற செருக்கான சொற்களை அவன் அடிக்கடி அவனுக்குள் சொல்லிக் கொள்வான். சிறிது காலமாக சினிமாவில் அவனுக்கு ஒரு ஈடுபாடு வந்திருந்தது. சாப்ளின், குரோஸவா, பெர்கமன், ரே போன்றோர்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தான். இவர்களது திரைப்படங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கற்பனை திரை உலகுக்குள் வாழ்ந்து வந்தான்.

குமரனின் அகல்கள் கும்பகோணத்தில் மிகப் பிரபலம். கோயில்களில் காணப்பட்ட அனைத்து அகல்களும் குமரன் உருவாக்கியவை. குமரன் தன் அகல்களை செய்ய எந்த அச்சையையும் பயன்படுத்த மாட்டான்; ஆனால் ஒன்றிற்கும் இன்னொன்றிற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது இயலாத காரியம். தன் அகல்களுக்கு உயிர் இருப்பதாகவே கருதினான், அதுவும் அவன் தந்தது. அவன் வாழ்க்கையின் சோகமான தருணங்களிலும் மகிழ்ச்சியான தருணங்களிலும் அவன் செய்த அகல்களை விரல்களால் வருடுவான்; அது அவனுக்கு இனம் புரியாத உணர்வை அளித்தது - ஒருவித நிம்மதி. அவன் ஒரு நாத்திகன் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. குமரனுக்கு இது வேடிக்கையாக இருந்தது, ஏனெனில் அவன் நாத்திகனா ஆத்திகனா என்று அவன் ஒரு போதும் சிந்தித்ததில்லை. பூஜைகளுக்கும், விழாக்களுக்கும் பிறகு அவன் அகல்கள் தூக்கி எறியப்படும். அதை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் மனம் கனமாகிவிடும். அந்த உணர்வு அவனுக்கு பிடித்ததில்லை; கோயில்களுக்குப் போவதை நிறுத்திக் கொண்டான்.

குமரன் தன் இருபத்தி நான்காவது பிறந்த நாளில், சென்னைக்குக் கிளம்பினான். "திரை உலகமே, முக்கிய திருப்புமுனையை நீ நெருங்குகிறாய்" என்று அவனுக்கு சொல்லிக் கொள்ளும் "செருக்கான சொற்கள்" புது வடிவம் பெற்றன. முதல் வருடம் அவன் பல வித்யாசமான வேலைகள் செய்தான், சில சினிமாவுக்கு சம்பந்தமானவை, சில சம்பந்தம் இல்லாதவை - லைட் பாய், ஸ்டுடியோ ஒன்றின் காண்டீனில் சப்ளையர், வெளி வராத திரைப்படம் ஒன்றின் துணை இயக்குனர், ஒரு பெரிய இயக்குனர் நடத்தி வந்த விடுதி ஒன்றின் ரூம் பாய், ஒரு திரை இசைக்குழுவில் தவில் கலைஞன், துணை நடிகன். அந்த நாட்களின் எல்லா இரவுகளையும் சென்னை திரையரங்குகளில் கழித்தான். ஒரு வருடத்திற்கு பிறகு அவனுக்கு இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. எண்பது வயது தயாரிப்பாளர் அவன் கதையை படமாக்க முன் வந்தார், ஒரு நிபந்தனையுடன் - இயக்குனராக அவர் பெயரையும் சேர்க்க வேண்டும். குமரன் முதலில் தயங்கினான். பின்பு, திரைப்படத்தின் இயக்கத்தில் தலையிடாமல் இருந்தால் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்வதாகக் கூறினான். அவன் சிந்தனைகள் படமாக்கப்படுவதை விட வேறொன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. படப்பிடிப்பு துவங்கியது. ஒவ்வொரு காட்சியையும் அணு அணுவாக ரசித்து எடுத்தான். படத்தின் பெயர் "ஒரு நாள்". உலகம் தோன்றிய முதல் நாளில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏற்பட்ட உணர்வுகளையும், நிகழ்வுகளையும், காதலையும், ஆச்சரியங்களையும் உலகம் அழிவதற்கு முந்தைய நாள் இரு காதலர்கள் இடையே ஏற்படும் அனுபவங்களுடன் ஒப்பிடும் கதை. இதுவரை எவனுக்கும் தோன்றிடாத சிந்தனை என்று இறுமாப்பு கொண்டிருந்தான்.

"ஒரு நாள்" வெளிவந்தது. பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. விரசமான திரைப்படம் என்று விமர்சனம் செய்யப் பட்டது. சமுதாயத்தை சீர்குலைக்கும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன். பெருந் திரளாகப் பெண்கள் திரண்டு குமரன் வக்கிர புத்திக்காரன் என முத்திரை குத்தினர். தயாரிப்பாளர் தன்னை இயக்குனர் பதவியில் இருந்து விலக்கிக் கொண்டார். அந்த நாட்களில் கூட்டம் அரங்குகளில் அலைமோதின. சர்ச்சைக்குக் காரணம் காதலர்கள் இணையும் கடைசிக் காட்சி. வார்த்தைகள் இல்லாமல் வெறும் உணர்ச்சிகள் மூலம் காம உருவில், உள்ளுணர்வுகளையும், உறவின் ஆழத்தையும், விரக்தியையும் வெளிப்படுத்தும் காட்சியை, அவன் அவனது படைப்பாற்றலின் சிறந்த வெளிப்பாடாக கருதினான். அந்த காட்சியின் பின்ணணி இசையாக வந்த "அதரங்கள் இணைய ஆன்மா இணைந்தது..." என்ற பாடலையும் அவனே எழுதி இருந்தான். தயாரிப்பாளரின் வற்புறுத்தலால் அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குமரனுக்கு அதில் உடன்பாடில்லை. "ஒரு நாள்" இருபது நாட்களைக் காணவில்லை. தவிர்க்க வேண்டிய படம் என்றும், இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்க்க முடியாத திரைப்படம் என்றும் பத்திரிகைகளிலும், இணையத் தளங்களிலும் வெளியாயின. அதில் நடித்த கதாநாயகிக்கு அதுவே கடைசிப் படமாக அமைந்தது. கதாநாயகன் அதற்குப் பின் பல கோடிகள் சம்பளமாக வாங்கும் அளவிற்கு வளர்ந்தார். "ஒரு நாள்" சில உலகத் திரைப்பட விழாக்களில் இடம் பெற்றது. குமரன் அவை எதிலும் பங்கு கொள்ளவில்லை. "மனித உணர்வுகளை குமரனைவிட எவரும் இதுவரை அழகாக படமாக்கவில்லை" என்று ஒரு ஃபிரஞ்சு நாளிதழில் பிரசுரமாகியது. குமரனுக்கு அதைப் படிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

குமரன் அடுத்த படம் எடுப்பதற்கு தயாராக இருந்தான். "இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்க்க முடியாத திரைப்படம்" என்று சொன்னவர்களுக்கு சவுக்கடியாக இருக்க வேண்டும் என்று ஒரு கதையை தன் மனதில் உருவாக்கினான். கடத்தப்பட்ட காதலியை மீட்கும் ஒரு காதலனின் கதை - வெறும் சம்பவங்களைக் கொண்டு இரண்டரை மணிநேரம் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தான். ஒரு புது தயாரிப்பாளர் முன் வந்தார். "தேடல்" துவங்கியது. அவன் கையாண்ட திரைக்கதை முறை திரை உலகிற்கு புதிது என்று அவன் குழுவினர் அவனைப் பாராட்டினர். ஆறு மாதங்கள் அயராது உழைத்தான். ஒரு பாடல் காட்சிக்கு அகல் விளக்குகளிடையே ஒரு நடனம் அமைத்திருந்தான். அகல்கள் ஒவ்வொன்றையும் அவனே செய்தான். அப்பொழுதும் அகல்களை வருடுவதில் ஒருவித நிம்மதி கிடைத்தது. "தேடல்" வெளிவந்தது. காதலன் காதலியை ஒரு காட்சியிலும் தீண்டவில்லை; காதலியும் அப்படியே. தன்னை வக்கிர புத்திக்காரன் என்று சொன்னவர்களுக்கு அவன் தரும் தண்டனையாகக் கருதினான். தேடல் ஓரளவிற்கு ஓடியது. எவரும் வீட்டையோ, சேர்த்து வைத்த சொத்துக்களையோ விற்கும் அளவிற்கு வரவில்லை. விமர்சனங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. சராசரி திரைப்படம் என்றே அதை மதிப்பிட்டிருந்தனர். ஒரு ஆங்கில பத்திரிக்கையில் மட்டும் தேடலின் திரைக்கதை அமைப்பு "The little girl from WhitesVille" என்ற படத்தின் நகல் என்று எழுதி இருந்தனர். அதன் பின் வந்த விமர்சனங்கள் அனைத்துமே அதனைக் குறிப்பிட்டு சராசரிக்கும் கீழ் என்று மதிப்பிட்டனர். "The little girl from WhitesVille" திரைப்படத்தை சிலர் தேடிப் பார்க்கத் துவங்கினர். தேடல் திரையிடப்பட்ட திரை அரங்குகளில் கூட்டம் குறைந்து கொண்டே இருந்தது. குமரனும் The little girl from WhitesVille பார்த்தான். ஆச்சர்யத்துடன் கோபமும் எழுந்தது. அந்த திரைக்கதை அமைப்பின் சொந்தக்காரன் அவனில்லை என்ற எண்ணம் அவனை மிகவும் வாட்டியது. The little girl from WhitesVille படத்தின் பிரமாண்டமும் அவனை பிரமிக்க வைத்தது.

அவன் மனதில் சில நாட்களுக்கு ஒலித்துக் கொண்டிருந்த சொல் - பிரம்மாண்டம். இம்முறை தயாரிப்பாளரைத் தேடுவது எளிதாகவே இருந்தது. சிலருக்கு தேடல் பிடித்திருந்தது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் படம் என்று பத்திரிகைகளில் செய்திகள் வரத் துவங்கின. படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் அதனை வெளியிடவில்லை. குமரனின் பிரமாண்டமான படம் என்று அனைவரும் குறிப்பிடுவது அவனுக்கு ஒரு போதையை ஏற்படுத்தியது. ஒன்றரை வருட உழைப்பின் பின் "அந்த வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு" வெளிவந்தது. இரு நாட்டவருக்கிடையே நடக்கும் போரினை பிரம்மாண்டமாக எடுத்திருந்தான். குமரன் விமர்சனங்களுக்காக காத்திருந்தான். தாமதமாகவே வெளிவந்தது. யதார்த்த மீறல் என்றும் எந்தெந்த காட்சிகள் எப்படத்தில் இருந்து நகல் எடுக்கப்பட்டன என்று ஒரு பட்டியலே வெளியிட்டிருந்தனர். குமரனுக்கு புதிதாக இருந்தது. மரத்தினைப் பூமியில் இருந்து பிளந்து அடிக்கும் கதாநாயகனைக் கொண்ட படத்தில் எதற்காக யதார்த்ததை எதிர்பார்க்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. அது பாரதப் போரின் நவீன ஆக்கம் என்று ஒருவர் புரிந்து கொணடாலும் தனக்கு வெற்றி என்று காத்திருந்தான். அதே சமயம் அவனது சிந்தனைகளை வேறொருவர் அவனுக்கு முன்பே யோசித்துவிட்டார் என்பது அவனது படைப்பாற்றலுக்கு இழுக்காக கருதினான். நூறு நாட்கள் ஓடினாலும் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அந்த வருடத்தின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் அப்படம் இடம் பெறவில்லை.

ஆறு மாதங்களில், யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் குமரனின் அடுத்த திரைப்படம் வெளிவந்தது -"தேசிய நெடுஞ்சாலை - 47". குமரனே அதைத் தயாரித்தும் இருந்தான்.ஒரு நெடுஞ்சாலை ஓரத்தில் ஆட்டிசமினால் பாதிக்கப்பட்டோ ருக்கான பள்ளி ஒன்றிருக்கிறது.அந்த நெடுஞ்சாலையில் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் மூன்று விபத்துகளை ஒரு சிறுமி காண்கிறாள். அந்த விபத்துகளில் சிக்கி இறந்தவர்கள் யார் என்றும், அவர்களது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை அறிய வேண்டும் என்று ஒரு ஆர்வம் அந்தச் சிறுமிக்கு எழ, அதற்கான விடைகளைத் தேடிச் செல்கிறாள். அந்த மூன்றுமே ஒன்றிற்கொன்று தொடர்புடைய கொலைகள் என்பதை அறிந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடிக்கிறாள் என்பதுதான் கதை. பத்திரிகைகளாலும் மக்களாலும் பெரிதும் ஆதரிக்கப்பட்டது. புதிய கதை, புதிய அணுகுமுறை என்று போற்றப்பட்டது. குமரன் தன் படைப்பாற்றலுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதியிருந்த நேரத்தில், அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

"தேசிய நெடுஞ்சாலை - 47" திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட மனநிலை பாதிக்கப் பட்டோ ருக்கான பள்ளியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவராகக் காட்டி இருக்கின்றனர். இது அந்த ஜாதியை சேர்ந்தோரை இழிவு படுத்துவது போல் உள்ளது. மேலும், இதை அறிவியல் ரீதியாக பார்த்தால், அந்த ஜாதியில் பிறக்கும் குழந்தைகள் இது போல் மன நிலை பாதிக்கப் படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் என்பது போல் மறைமுகமாக சொல்லி உள்ளனர். இது நாளடைவில் அவர்களது சமூகத்தையே சுவடுகளின்றி அழித்துவிடுவதற்கான பயங்கர முயற்சி".

திரைப்படத்திற்கு தடை விதிக்கப் பட்டது. குமரன் முதல் முறையாக வலி என்பதை உணர்ந்தான். படைப்பாளி என்ற அவன் கர்வத்தை உடைத்தது போல் இருந்தது. பித்துப் பிடித்தவன் போல் திரிந்தான். அந்த ஆட்டிசப் பள்ளி சித்தரிக்கப்பட்டதல்ல, உண்மையென்று சொல்லக் கூட அவன் சுயநினைவில் இல்லை. கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்கள், அந்த ஜாதிக்காரர்கள் மிரட்டினார்கள்.

என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்த பொழுது, அகல்கள் அவன் நினைவுக்கு வந்தன. அன்று மாலையே அவன் கிராமத்திற்குக் கிளம்பினான்.அவன் படைக்கும் அகல்கள் எதற்காகப் படைக்கப் படுகின்றனவோ அதற்காக மட்டும் பார்க்கப்படும், வருணிக்கப்படும், ரசிக்கப்படும் என்ற எண்ணம் ஒரு பெரிய ஆறுதலை அளித்தது. அவனது வீட்டை அடைந்தவுடனே அவன் படைக்கும் தொழிலை துவங்கிவிட்டான். நூற்றுக்கணக்கில் அகல்கள் செய்து அடுக்கினான். விரல்கள் சோர்வடைந்த பொழுது மெதுவாக அகல்களை வருடினான், இம்முறை கிடைத்த நிம்மதிக்கு அளவே இல்லை."நான் படைப்பாளி" என்று ஒருமுறை சொல்லிக் கொண்டான்.

*

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

என் சாளரத்தின் வெளியில் .. நீ

-ஆ. மணவழகன் : திண்ணை-
----

நான் உன்னைப் பார்க்கிறேன்..
நீ அழகாக இருக்கிறாய்!
மீண்டும் உன்னைப் பார்க்கிறேன்
நீ அழகாகவே இருக்கிறாய்!

மேகம் மூடிய நீ - வாழ்வின்
சோகம் சூடிய சுவடு என்றான்
ஒருவன்!

நீ தேய்வது ..
நிச்சயித்து நிரந்தரப்படுத்துவது - இப்புவியில்
ஏதுமில்லை என்பதால் என்றான்
ஒருவன்!

நீ வளர்வது..
வந்த துன்பம் வாழ்வில் என்றும்
நிலைப்பதில்லை என்பதால் என்றான்
ஒருவன்!

நீ தேய்வதும் தேய்ந்தும் வளர்வதும்
இன்ப துன்பத்தின் சமநிலை என்றான்
வாழ்ந்து பார்த்த
ஒருவன்!

தன்னுள் களங்கம் வைத்து - அது
உன்னுள்ளும் உள்ளதென்றான்..
வாழத்தெரிந்த
ஒருவன்!

இல்லாமல் போவது
உனக்கும் இருக்கிறதாம்
தேற்றிக்கொண்டான் - தன் தேவையுணர்ந்த
ஒருவன்!

உன்னை,
விட்டெறிந்த இட்லி என்றான்...
வெட்டிப் போட்ட நகம் என்றான்..
சுட்டெறிந்த அப்பளம் என்றான்..
வானிற்குத் தோன்றிய கொப்புளம் என்றான்..
தோழியர் சூழ வரும் மங்கை என்றான்..
தோழர் சூழ வரும் மன்னன் என்றான்..
---- ---- ---- என்றான்..
---- ---- ---- என்றான்..

எப்போதும் போல என் சாளரத்தின் வெளியில் நீ!
எல்லோரும் உன்னைப் பார்க்க - நீ
மட்டும் என்னைப் பார்க்கிறாய்!

நான் நிலவைப் பார்க்கிறேன் - அது
அழகாக இருக்கிறது - அது
அதுவாக இருக்கிறது!

***
ஆ. மணவழகன்
manavazhahan_arumugam@yahoo.com

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

ஒரு நாள் பொழுது

-பொன் சுந்தரராசு (சிங்கப்பூர்) மூலம்:திசைகள்-

1992ஆம் ஆண்டில் ஒரு பிற்பகல் நேரம்.

நியூட்டன் அஞ்சலகச் சேமிப்பு வங்கிக்குள் காலடி வைத்தபோது அவனுக்குத் ஑திக்ஒகென்றது. U வடிவத்தில் வரிசை நுழைவாசல் வரை நீண்டிருந்தது. பணத்தைச் சேமிப்புக் கணக்கில் செலுத்திவிட்டுப் பக்கத்தில் ஑தேக்காஒவிலேயே பகலுணவையும் முடித்துக் கொண்டு அலுவலகத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளேயே திரும்பி விடலாம் என்று திட்டமிட்டிருந்தான்.

஑எல்லாம் கோவிந்தாவாகிவிடும் போல இருக்கே!.ஒ என்று அவன் உள்மனம் அழுதது.

஑இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே. எத்தனை பேரு வரிசையில நிக்கிறாங்க ?..ஒ
தலைகளைக் கணக்கெடுக்க ஆரம்பித்தான்.

஑ஒன்னு, ரெண்டு. மூனு....25. என்னையும் சேர்த்து 26. ஒரு ஆளுக்கு அஞ்சு நிமிசம்னாலும் 75 நிசமாகுமே! அஞ்சு நிசம்கிறது அதிகம்தான். ஑கவுண்டர்லஒ என்ன கதையாப் பேசப் போறாங்க! சீக்கிரம் முடிஞ்சிடும். சாப்பிடத்தான் நேரம் இருக்காது போல இருக்கு. பரவாயில்லே. ஒரு நாளைக்குச் சாப்பிடலேன்னா செத்துப் போயிடுவேனா?..ஒ அவன் தன்னைச் சமாதானப்படுத்தும் போதே வயிறு உறுமியது.

வரிசையில் நிறைய சீனப்பெண்கள், ஆண்கள், சில மலாய்க்காரர்கள், ஒன்றிரண்டு தமிழர்கள். அவனுக்கு முன்னால் ஒரு வௌ஢ளைக்காரனும் வௌ஢ளைக்காரியும் நின்று கொண்டிருந்தார்கள். ஆளுக்கொரு பையைத் தோளில் மாட்டிக்கொண்டு அவர்கள் அலங்கோலமாகக்஢ காட்சியளித்தார்கள்.

஑இவுங்க அழகா இருந்தா என்ன? அவலட்சணமா இருந்தா என்ன? யாராவது குறை சொல்லுவாங்களா! வௌ஢ளைக்காரனாக்கும்!.. இந்தக் கோலத்திலே இந்தியர்கள் மட்டும் நின்னா?..ஒ தொடர்ந்து அவன் அதைப் பற்றிச் சிந்திக்க விரும்பவில்லை.

நிறவேறுபாடுகளை வைத்து மனிதரை எடைபோடும் உலக மாந்தரை மனத்திற்குள் கெட்ட வார்த்தைகளால்஢ திட்டித் தீர்த்தான். ஑இந்தியன்னா இளக்காரமாப் போச்சு!ஒ அவன் உதடுகள் துடித்தன.

஑பரவாயில்லே வரிசையிலே கூட நான்கு இன மக்களும் நிறைந்து பல்லின சமத்துவத்தைப் பறைசாற்றுறாங்க!..ஒ நக்கலாக அவன் மனம் நகைத்துக் கொண்டது.

அவனை ஒட்டி நீண்ட வரிசையில் சொல்லி வைத்தாற்போல மூன்று சீனப்பெண்கள் குட்டை சிலுவார், கையில்லாத டீ சட்டை சகிதம் பேசிக் கொண்டும் உலகத்தில் மிகச் சிறந்த நகைச்சுவையை ரசிப்பது போலச் சிரித்துக் குலுங்கிக் கொண்டும் அங்கே கால் கடுக்க நின்றவர்களின் மனவருத்தத்திற்கு மருந்து தடவிக் கொண்டிருந்தனர்.

஑இந்தச் சீனக் குட்டிங்க பரவாயில்லே. குண்டியை மட்டும் மறைக்கிறா மாதிரி ஒரு சிலுவார், அரைகொறை டீ சட்டை..ஒ என்று அவன் கொச்சையாக எண்ணத் தொடங்கியபோது முன் வரிசையில் ஑டைட் ஸ்கேர்ட்டும் கோட்டும்ஒ மிக நேர்த்தியாக அணிந்து ஑கமகமஒவென அவ்விடத்திற்கு நறுமணத்தை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்த சில சீனப் பெண்களும் அழகிய வங்கி அதிகாரிகளும் அவன் கண்ணில் பட்டனர்.

அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

஑சீனப்பெண்களின் வனப்பும் வாளிப்பும் திறமையும் தொழில் ஈடுபாடும் சுட்டுப் போட்டாலும் மத்தவங்களுக்கு வராது. வில்லாதி வில்லிங்கப்பா!..ஒ

அவன் மனம் பாராட்டுப் பத்திரம் வழங்கியது.

கூட்டம் அவன் எதிர்பார்த்ததைவிட மெதுவாக நகர்ந்தது. மணி ஒன்றரையை நெருங்கியது. டிசுவர்க் கடிகாரத்திற்குக் கீழே ஒரு பல்லி வாலை மெதுவாக ஆட்டிக் கொண்டு எதிரே பறந்து கொண்டிருந்த ஒரு சிறு பூச்சியையே குறிபார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

ஓஎன்னங்க.. சேமிப்பில போதுமான பணம் இருக்கா? இல்லேன்னா டோ ப் ஆப் பண்ணிடுங்க. இன்னிக்கு ஆறாம் தேதி. பியூபி பில், சொத்து வரி, ரேடியோ - தொலைக்காட்சி லைசன்ஸ் கட்டணம் எல்லாம் வெட்டிக்கிற நாளு. ஞாபகம் இருக்குல்லே..ஔ அவன் மனைவி சங்கீதா சங்கீதம் பாடினாள்.

சுடச்சுட காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தவன் கடுப்பாகிப் போனான்.

ஓநிம்மதியா காபி குடிக்க விடுறியா?. வரி, வரி எல்லாத்துக்கும் வரி. கார் வாங்கினா வரி, அதை ஒட்டுனா வரி, வீடு வாங்கினா வரி.. அதில் வசித்தாலும் வரி வாடகைக்கு விட்டாலும் வரி, செத்தாலும் வரிஸஔ என்று கடுப்போடு சொல்லிக் கொண்டு வந்தபோது சடக்கென அவனுக்குச் சந்தேகம் துளிர்த்தது.

உடலை எரிக்கிறதுக்கும் புதைக்கிறதுக்கும் ஑ஜி.எஸ்.டிஒ வசூலிக்கிறாங்களா இல்லையான்னு தெரியலையே!..

ஓஎதுத்துத்தான் வரி இல்லே!.ஔ குரலைத் தாழ்த்தி விடாமல் முணுமுணுத்தான்.

ஓம்.. ம்.. பணம் சம்பாதிக்கிறோமில்லே. வரி கட்ட வேண்டாமா? எல்லாரும்தான் வரி கட்டுறாங்க.ஔ. சங்கீதா தனக்குப் பாதியும் கணவனுக்கு மீதியுமாகப் பேசினாள்.

ஓஏய்! உன் வாயை மூடு. நீ என்ன காலையிலேயே கலாட்டா பண்றே?..ஔ

ஓஅப்படி இல்லே.. உலக நடப்பைத்தான் சொன்னேன்..ஔ என்று சொல்ல நினைத்தாள். அந்த நேரத்தில் ஑ப்பீ.. ப்பீ..ஒ என்று பள்ளிப் பேருந்து சத்தம் கேட்கவே தயாராக நின்ற தன் பத்து வயது மகளைப் பள்ளிக்கனுப்ப வௌதயே சென்றாள்.
வீட்டு நிர்வாகத்தை ஆண்பிள்ளைதான் கவனிக்க வேண்டுமென்பதில் அவன் எப்போதுமே விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை.

அவன் ஑கவுண்டஒரை நெருங்கி வந்துவிட்டான். அவனுக்கு முன்னால் வௌ஢ளைக்கார தம்பதியர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து ஒரு பெண் வங்கி அதிகாரி CLOSE என்ற அறிவிப்பை வைத்துவிட்டு எழுந்து ஒயிலாகச் சென்றாள். மணி இரண்டாக இன்னும் பதினைந்து நிமிடமே இருந்தது.

அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அலுவலகத்திற்குத் தாமதமாகப் போவதை அவன் ஒருபோதும் விரும்புவதில்லை. அது கொடுமையான அனுபவம்! பலரைத் தாண்டி தன்னிடத்திற்குச் செல்வதற்குள் அவமானமே கொன்றுவிடும். ஆயிற்று. அவனுக்கு முன்னால் நின்ற இருவரும் போனார்கள்.

஑அப்பாடா!.ஒ என்று பெருமூச்சு விட்டான். ஐந்து நிமிடம்.. ஏழு நிமிடம் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். என்ன ஆயிற்று?

வௌ஢ளைக்காரனும் வௌ஢ளைக்காரியும் அசைவதாகத் தெரியவில்லை. அவர்கள் வௌதநாட்டு பண நோட்டுகளைக் கையில் பிடித்துக் கொண்டு ஏதோ பண்ணிப் பண்ணிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இடப்புறக் கவுண்டரில் ஒருவரை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தாள் ஒரு சீன இளம்பெண் அதிகாரி. இடையிடையே பேச்சு, சிரிப்பு! இவனுக்கு எரிந்தது.

஑பெரிய தொகை போட்டுக் கணக்கு திறக்கிறான் போல இருக்கு! இல்லேன்னா, அவ ஏன் இந்த இளிப்பு இளிக்கிறா?.ஒ அவனுக்குக் கசந்தது.

வலப்புறக் கவுண்டரில் நீண்ட நேரமாக ஒரு மலாய்க்காரி தன் இரண்டு பிள்ளைகளையும் வங்கியில் மேயவிட்டுவிட்டு அங்கிருந்த ஆண் மலாய் அதிகாரியோடு கதையடித்துக் கொண்டிருந்ததாள்.

஑மலாய்க்காரிங்களுக்கு ஒரு மலாய்க்காரன் கண்ணில படக்கூடாது!.ஒ அவன் பொறுமினான்.

இவனுக்குப் பின்னாலும் வரிசை கொடுக்குப் பிடித்துக் கொண்டுதானிருந்தது. இவன் மகா வெறுப்புடன் தனக்குப் பின்னால் நிற்வரிடம்-

ஓஎன்ன நடக்கிறது? ஏன் தாமதம்?ஔ என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

அந்தச் சீனர், மலாய்ப் பெண்ணைச் சுட்டிக் காட்டி ஓஅவர் புதுக் கணக்குத் திறக்கிறார்.ஔ என்று ரகசியமாகக் கூறினார்.

அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மணி இரண்டாக இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது. ஒரு மணி நேரம் வரிசையில் கால்கடுக்க நின்றும் இன்னும் தன் முறை வரவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில் அவன் கட்டுப்பாட்டை மீறி வார்த்தைகள் ஆங்கிலத்தில் வெடித்துச் சிதறின.

ஓஹலோ! நீங்க என்ன நெனச்சிகிட்டு இருக்கிறீங்க?. ஒரு மணி நேரமா வரிசையில நிக்கிறேன். சிரிச்சி பேசிக்கிட்டு ஜாலியா வேலை பார்க்கிறீங்க. நான் இன்னும் சாப்பிடக் கூட இல்லே தெரியுமா?..ஔ

ஓநாங்க வேலைதான் பார்க்கிறோம். ரெண்டு பேரு புதுசா ஑அக்கவுண்டுஒ திறக்கிறாங்க. கொஞ்சம் பொறுமைங்க ப்பிளீஸ்!.ஒ ஒரு பெண் அதிகாரி அழகாக ஆங்கிலம் பேசினாள்.

ஆனால், அதை ரசிக்கும் மனநிலையிலதான்஢ அவன் இல்லை.

ஓயூ சி.. புது கணக்குத் திறக்கிறதுக்கு ஒரு தனிக் கவுண்டர் இருக்கணும். இந்த மாதிரி எவ்வளவு நேரம் நிக்கிறது? நான் ஆபிசுக்குப் போகணும்மா. இது முட்டாள்தனமா இல்லே!.ஔ

ஆத்திரம் அவன் கண்ணை மறைத்தது. கண்டபடி சத்தம் போட ஆரம்பித்தான்.

உள்ளே இருந்து ஒரு காவலர் அவசரமாக வௌதயே வந்தார்.

ஓமிஸ்டர் கலாட்டா பண்ணாதீங்க. இங்கே எல்லாரையும்தான் கவனிக்கணும். பகல் உணவு நேரத்தில கூட்டமாத்தான் இருக்கும். நெருக்கடியான நேரத்தில வந்தது உங்க தப்பு..ஔ

ஓஎன்னய்யா என் தப்பு? இப்ப வராம, வேலை நேரத்திலேயா வரமுடியும்? எவ்வளவு லேட்டாயிடுத்து.ஔ சுவர்க்கடிகாரத்தைக் காட்டிச் சத்தம் போட்டான்.

கடிகாரத்திற்குக் கீழே வட்டமிட்டுக் கொண்டிருந்த பூச்சியைக் காணவில்லை. பல்லியின் வயிறு புடைத்திருந்தது.

ஓஅது உங்க புராப்ளம். இண்டியன்ஸ் எப்போதும் இப்படித்தான். நேற்றுகூட ஒருத்தன் வேறு ஒரு காரணத்துக்காகச் சத்தம் போட்டான் தெரியுமா?ஔ

ஓஏய்! நீ இண்டியன்ஸ்சைப் பத்திப் பேசாதே. தட்டிக் கேட்க ரோசம் வேணும்..ஔ

ஓகாத்திருக்கப் பிடிக்கலேன்னா நீங்க போகலாம்..ஔ காவலர் குரலில் கடுமை தொனித்தது.

அவனை அவமானம் பிடுங்கித் தின்றது.

"போறேன்.. இங்கே மனுசனா நிப்பான். பிளடி பூல்ஸ்..ஔ என்று சத்தமிட்டவாறே வௌதயேறினான்.

஑எவனாவது எனக்கு ஆதரவா பேசினானா? மடப்பயல்கள். சொரணையே இல்லாத கூட்டம்..ஒ என்று மற்றவர்களையும் விட்டு வைக்காமல் மனத்தில் திட்டுத் தீர்த்தபடியே தன் காரில் ஏறிக் கதவை ஓங்கி அறைந்தான்.

புக்கிட் தீமா சாலையில் திரும்பியபோது அவனுக்குத் தலை சுற்றியது.

டிராபிக் ஜாம்!..

சாலை புதுப்புப் பணி நடந்து கொண்டிருந்தது. வரிசை வரிசையாகக் கார்கள்! சாலை முழுவதும் இடைவௌத இல்லாமல் எங்கும் கார்கள்.

ஓமுன்பெல்லாம் இரவிலதான் சாலை புதுப்பிப்஢புப் பணி செய்வாங்க. இப்ப பகல்லேயே செய்ய ஆரம்பிச்சாட்டாங்க. அநியாயம். இதை எல்லாம் யாரு கேட்கிறது? மடப் ... மவனுங்க!.ஔ அசிங்கமான வார்த்தைகள் தயக்கமின்றி அவன் வாயிலிருந்து கொட்டின.

கதவைத் திறந்து தலையை நீட்டி வௌதயே பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் பகல் நேரச் சூரியனின் பிரதிபலிப்புகள். கண்கள் கூசின.

அந்த இடைவௌத நேரத்தில் ஒருவன் இவனுக்கு முன்னால் தன் காரைச் செருகினான். ஏமாற்றம் தாங்காமல் இவன் ஹாரணை அழுத்தி அமுக்கினான்.

காது ஜவ்வு அழுதது.

முந்திச் சென்றவன் கதவு வழியாகக் கையை உயர்த்திச் சமாதானக் கொடி காட்டினான்.

஑இதை மட்டும் செஞ்சுடுவாங்க. செங்கப் பயல்கள்!..ஒ

அவன் அலுவலகத்திற்குள் காலடி வைக்கும்போது பிற்பகல் மணி மூன்று. வெட்கத்தாலும் ஏமாற்றத்தாலும் அவன் முகம் தொங்கிப் போய் விட்டது.

அவன் தன் நாற்காலியில் சரிந்து ஒரு நிமிடம்கூட ஆகவில்லை. தொலைபேசி கதறியது.

ஓஹலோ!..ஔ

ஓஎன் ஆபிசுக்குக் கொஞ்ச நேரம் வர்றீங்களா?..ஔ மானேஜரின் குரல் கரகரத்தது.

அடுத்த நிமிடம் அவர் முன் அவன் அமர்ந்திருந்தான்.

ஓம்.. பிரபு! ஒரு ஑புரோஜக்ட்ஒ தயாரிக்கச் சொல்லி இருந்தேனே. மூனு மணிக்கு அனுப்பணும்..ஔ

ஓஇன்னும் அரைமணி நேரத்தில தயார் பண்ணிடுறேன்..ஔ

ஓஇப்ப மணி மூனு..ஔ

மௌனம்!..

ஓநீங்க போங்க..ஔ மானேஜர் மேசைமேல் இருந்த ஃபைலைப் புரட்டத் தொடங்கினார்.

பிரபு அடுத்த அரைமணி நேரம் கணினியோடு போராடினான். அவன் வேகத்துக்குக் கணினி ஒத்துழைக்கவில்லை.

பல முறை ஹேங்!

ஓஷிட்..ஔ ஒரு முறை கணினித் திரையைக் குத்த நெருங்கிவிட்டான்.

அவன் எவ்வளவோ போராடியும் நான்கு மணிக்குத்தான் வேலையை முழுமையாக முடிக்க முடிந்தது. அவசரம் அவசரமாகத் தாள்களை வாரி எடுத்து மானேஜர் மேசைமேல் கொண்டு போய் வைத்தான்.

ஓபுரோஜக்டை நான் மூனு மணிக்கே அனுப்பிட்டேன்..ஔ

ஓஎப்படி?..ஔ என்ற வினாக்குறியோடு புருவத்தை நெரித்தபடி அவரை நோக்கினான்.

ஓபுனிதாவையும் செய்யச் சொல்லி இருந்தேன்..ஔ

ஓஎன் மேல நம்பிக்கை இல்லையா? அதை ஏன் முன்னமே எங்கிட்ட சொல்லலே..ஔ என்று சத்தம் போட்டுக் கேட்க நினைத்தான்.

வாயைத் திறக்க முடியவில்லை. உதடுகள் காய்ந்து ஒட்டிக் கொண்டன.

அவன் முகம் கருத்துவிட்டது. கை, கால் மூட்டுகளெல்லாம் கழன்று விட்டதுபோல் உடல் தளர்ந்து தொங்கி விட்டது. வாயடைத்துப் போய் தன் இடத்தில் போய் ஒடுங்கினான்.

஑என் இப்படி இருக்கிறாங்க! இந்தப் பயல்களுக்கு இதயமே கிடையாதா? பதவி வந்தா அதைக் கழற்றிக் ஑கபட்ஒடிலே வச்சுடுவாங்களா? இவன்களுக்குப் பதவிதான் பெரிசு! நாற்காலிப் பைத்தியங்கள்!! மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத மரங்கள்..! ஒ

நெட்டை மரங்களென பாரதி வசை பாடியது நினைவுக்கு வந்து அவனது ஆத்திரத்தைக் கிளறிவிட்டது.

஑புனிதா அடிக்கொரு தரம் கைக்குள்ளே கண்ணாடியை வச்சிகிட்டு உதட்டுக்குச் சாயம் அடிப்பா. மானேஜர்கிட்ட போயி இளிக்கணும்லே!.ஒ

஑மாலினி, வேலை செய்யிற மாதிரி போக்குக் காட்டிகிட்டுக் காதலனுக்கு ஈமெயில் அனுப்பிகிட்டிருப்பா!.ஒ

஑ராபர்ட் ஷேர் மார்க்கெட் நிலவரத்தைச் செக் பண்றதிலேயே பொழுதைப் போக்குவான்!.ஒ

஑சேகர், ஒரு பொம்பள பொறுக்கி! அவனுக்கு எப்படித்தான் ஒரு குணவதி மனைவியா கெடைச்சாளோ!.ஒ

஑இந்த ஆபிசிலேயே நான் ஒருத்தன்தான் யோக்கியன். எவனுக்குத் தெரியுது!.ஒ

பிரபு தன் காரில் மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்தான். அவனைத் தாண்டி பல கார்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தன. சில கார் ஓட்டுநர்கள் ஑ஹாரனைஒ அழுக்கி வழிவிடச் சமிக்கை செய்தனர்.

஑ஏன் இப்படி அவசரப்படுறானுங்க.! ஆக்ஜிடண்ட் ஆகிச் சாகவா?..ஒ

போலிஸ் அகாடமிச் சந்திப்பில் காரை நிறுத்திப் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்தான். இடது பக்கம் திரும்பியவனுக்குத் ஑திக்஢ஒ கென்றது. அங்கு வேலியோரத்தில் பல கிளைகள் விரித்துத் தழைத்திருந்த ஆலமரத்தைக் காணவில்லை. நீண்ட காலத்து மரம். இவன் பேருந்தில் பள்ளிக்குப் போனதிலிருந்து கவனித்து வருகிறான்.

சாலை விரிவாக்கப் பணி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் ஒரு மாதம் பிரபு இந்த வழியில் வராமல் இருந்திருக்கலாம்.

஑ஆலமரத்தை வெட்டி விட்டார்களே! எத்தனையோ பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆயிரம் கைகளுடைய ஆலமரத்தை வெட்டி விட்டார்களே! அடடா, மாலையில் இந்தப் பக்கம் வரும்போது மரம் நிறையப் பறவைகள் அமர்ந்து ஑கீச் கீச்ஒ என்று கூச்சலிடுவது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எவ்வளவு ரம்மியமாக இருக்கும். அந்த அற்புத மரத்தை அழித்துப் பறவைகளை அநாதைகளாக்கி விட்டார்களே!.

அவன் மனம் கனத்தது.

தன் அடுக்குமாடிக் கட்டடத்தை அடைந்ததும் காரை நிறுத்திவிட்டு மின்தூக்கியருகே சென்றான். அங்கே நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தாணர்கள். கதவு திறந்ததும் எல்லாரும் உள்ளே நுழைந்தார்கள் இவன் உட்பட. இவன் செல்ல வேண்டிய 10வது மாடி பட்டனை யாரோ அழுத்தி இருந்தார்கள். அவன் அங்கு நின்றவர்களை நோட்டமிட்டான். இரண்டு பெண்கள்கூட இருந்தனர். எல்லாரும் மாடிகளைக் காட்டும் சிவப்புநிற அறிவிப்பு விளக்குகளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

஑இவனுங்க மனுஷங்க தானா? இல்ல ரோபார்ட்டா? ஏன் மேல் நோக்கியே பார்த்துக்கிட்டு நிக்கிறானுங்க! இதுக்கு முன்னால அதைப் பார்த்ததே இல்லையா? வாயைத் திறந்து பேசுங்கடா! வாய் கொட்டிக்கிறத்துக்கு மட்டும்தானா?ஒ அவன் அங்கு நின்றவர்களைக் கரித்துக் கொண்டிருந்தான்.

பத்தாவது மாடி! பிரபு மின்தூக்கியிலிருந்து வௌதயேறினான். வீட்டையடைந்து தன் அறைக்குள் சென்று ஆடைகளைக் களைந்து வேட்டியைக் கட்டிக் கொண்டு சன்னல்களைத் திறந்து விட்டான். வெகு தாராளமாகக் காற்று உள்ளே வந்தது. வௌதயே நோக்கினான்.

வடக்குச் சிங்கப்பூரின் பகுதிகள் கண் சிமிட்டின. எங்கும் ஔத ஜாலம். இரவு மணி எட்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அடுக்கு மாடிக் கட்டடங்கள்.

ஓதண்ணி சாப்பிடுறீங்களா?. இல்லே சாப்பாடேஸஔ கேட்டுக் கொண்டே சங்கீதா அறைக்குள் நுழைந்தாள்.

ஓதண்ணியா?.. நான் எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன். காபி போடவா, டீ போடவான்னு கேளு. நான் தண்ணி போடுறதில்லே!..ஔ இடைமறித்துப் பிரபுவின் குரல் அலறியது.

சங்கீதா சுதாகரித்துக் கொண்டாள். அவள்஢ பதில் பேசவில்லை.

ஓசங்கீதா, இங்கே பார்த்தியா?.ஔ

ஓஎங்கே?.ஔ

ஓவௌதயேதான். என்ன தெரியுது?..ஔ

ஓநிறைய வௌ஢ளை வௌ஢ளையா அடுக்கு மாடிக் கட்டடங்கதான் தெரியுது. ராத்திரியா இருக்கிறதுனால நெறைய விளக்கு எரியுது.ஔ

ஓஇந்தக் கட்டங்களை எல்லாம் பார்த்தா உனக்கு என்ன தோணுது?.ஔ

ஓநம்ப அரசாங்கத்தைப் பாராட்டத் தோணுது..ஔ

ஓநல்லா பாரு சங்கீதா. நீ சொன்ன மாதிரி நமக்கு முன்னால வௌ஢ளை வௌ஢ளையா தெரியுதே, அது எல்லாம் பூமியிலே இருந்து முளைச்ச கல்லறைகளா உனக்குத் தெரியலை. கல்லறைகள்ல பிணத்தை வச்சு மத்தவங்க மூடுறாங்க. கட்டடத்துக்குள்ளே நம்மை வச்சு நாமே மூடிக்கிறோம். வேடிக்கையா இல்லே! முன்னால பாரு, ஒரு வீடாவது திறந்து இருக்கா. சங்க காலத்திலே எந்த வீட்டுக்கும் கதவே இருந்ததில்லை. ஏன் தெரியுமா?. ஔ

ஓநீங்களே சொல்லுங்க..ஔ

ஓஅப்ப எல்லாம் உதவி கேட்டு யாரும் எந்த நேரத்திலேயும் எங்கேயும் வரலாமாம். இப்ப ஹா..ஹா சுயநலவாதிகள்! தன் தவறுகளை மூடி மறைக்கிறதிலேயே முனைப்புக் காட்டுற கபட வேடதாரிங்க..அவனுங்க ஔதஞ்சுகிறதுக்கு இந்த ஏற்பாடு! எல்லாரும் போலிகள்! எல்லாரும் நடிகர்கள்!!.ஔ

ஓ எல்லாத்தையும் ஏன் தப்பா புரிஞ்சிக்கிறீங்க?.ஔ

ஓநானா? தப்பைத் தப்புன்னு சொல்றேன். அது தப்பா? காரியம் ஆகணும்கிறதுக்காக என்னால ஊமையா இருக்க முடியாது. வேண்டியவனுங்஢கிறதுக்காக என்னால ஒரு கண்ணை முடிக்க முடியாது. ஏமாத்துறாங்கண்ணு தெரிஞ்சும் என்னால ஊமையா இருக்க முடியாது. நான் கொள்ளைக்காரனில்லே, தீவிரவாதி இல்லே, துரோகி இல்லை. வாழ்க்கையைப் பேரம் பேசும் வியாபாரி இல்லே. அநியாயம் நடக்கும்போது தலையைக் கவிழ்த்துக் கொள்ள நான் நோயாளி இல்லே. மனுசன். மனுசனா வாழ விரும்புற மனுசன்..ஔ

பிரபு உணர்ச்சி வயப்பட்டுக் கத்தினான். அவன் போட்ட சத்தம் பல வீடுகளுக்குக் கேட்டிருக்கலாம். சங்கீதா ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் அறையிலிருந்து வௌதயேறினாள். அப்போதாவது அவன் கூச்சல் குறையலாம் என்று அவள் எதிர்பார்த்தாள்.

பிரபு சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியருகே சென்றான். அதில் அவனது முகம் பிரதிபலிக்கவில்லை. அடுக்குமாடி வீடுகளும் மனிதர்களும் ஏனைய காட்டிகளுமே தோன்றின.

விடுவிடுவென ஹாலைத் தாண்டிக் கொண்டிருந்த சங்கீதாவிடம் ஖

ஓஅப்பா ஏன்மா உங்கிட்ட சண்டை போடுறாங்க?..ஔ

கூடத்தில் அமர்ந்து வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த வளர்மதி கேட்டாள். சற்று முன்னர் தன் தந்தை தன்னை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் தன்னறைக்குள் போய்விட்டாரே என்ற ஏகப்பட்ட வருத்தத்தில் குழந்தை இருந்தாள்.

ஓஎன்கிட்டே இல்லேம்மா..ஔ

ஓபின்னே?.ஔ

ஓஉலகத்துகூட சண்டை போடுறாரும்மா!..ஔ

ஓபுரியலேம்மா..ஔ

ஓஉனக்கு இப்ப புரியாதும்மா!..ஔ

சங்கீதா விடைகாண முடியாத பல கேள்விகளோடு சமையலறைக்குள் புகுந்தாள்.

஑கிரீங்ங்ங்ஸஒ அலாரம் அழுதது.

அதிகாலை மணி ஐந்து.

பிரபு துயில் எழுந்தான். மனைவியை எழுப்பிவிட்டான்.

மகளை எழுப்பி உச்சி முகர்ந்து காலை வணக்கம் கூறினான். வளர்மதியின் தலையணையருகே ஓர் இயந்திர மனிதப் பொம்மை கிடந்தது. ஆனால், அது சிறியதாக இருந்தது.

வீட்டில் வழக்கம் போல எல்லாம் சரியாக நடைபெற்றன. பிரபு வீட்டைவிட்டுப் புறப்பட்டுக் காரில் நுழைந்து சிங்கப்பூர் மக்கள் நெரிசலில் கலந்தான்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

எத்தனை முறை காதல் கொண்டேன்?

-நிர்மலா -
கவிதை வரிகளால்
காதல் விதைத்தவனிடம்

இறகாய் குரலால்
தீண்டிச் சென்றவனிடம்

தனித்த வேளையில்
துணையாய் நின்றவனிடம்

தவித்த பொழுதில்
தூணாய் சுமந்தவனிடம்

சிறகை விரித்துப்
பறக்கச் செய்தவனிடம்

சிந்தனைச் சிதறலில்
சிலிர்க்க வைத்தவனிடம்

அழுத கணங்களில்
அமைதி காத்தவனிடம்

அத்தனையும் மெல்ல
மறந்திட செய்தவனிடம்....

துளிகளாய் நனைத்ததெல்லாம்
தேடலைத்தான் தூண்டியது!

மொத்தமாய் நனைய வேண்டும்
அருவியாய் ஒருவன் வேண்டும்.

இந்தக் கவிதை 'புத்தகப் புழு'வில் பாரா வைத்த காதல் கவிதைப் போட்டியில் எழுதியது. செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படத் தலைப்பை இந்த கவிதையில் இன்ஸ்பயர் ஆகித்தான் வைத்திருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்! (நெனைப்புத்தான்).

ஆனா இந்தக் கவிதைக்கு இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?

'... ஓட்டைச் செம்புல குளிக்கிற மாதிரி இவரோட குடித்தனம் பண்றேன். தடேர்னு விழற அருவி மாதிரி நீ கிடைச்சப்போ அருவியை விட்டுட்டு வெளியே வர முடியலை....'

யார் சொன்னது? கண்டு புடிங்க பாக்கலாம். க்ளு தேவையிருக்குமா என்ன?

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

-நிர்மலா -
அவர் எனக்கு அதிகம் பழக்கம் இல்லாத, நெருங்கின உறவினர். அந்த முறை ஊருக்குப் போயிருந்த போது உடல்நலம் சரியில்லாத அவரைப் பார்க்கப் போயிருந்தோம். ஆஸ்பத்திரி அறையைத் தேடிப் போன போது கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அசப்பில் 'மணல்கயிறு' கிட்டுமணியின் மாமனாரைப் போல இருப்பார். நல்ல உயரம். வயசு காலத்தில் நல்ல சிவப்பாயிருந்திருக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சோகையாயிருந்தார். அவரை இதற்கு முன் பார்த்த சந்தர்ப்பங்களில் 'வணக்கம், சௌக்கியமா இருக்கீங்களா?' விற்கு மேல் போனதில்லை. அப்போதும் அதையே அசட்டுத்தனமாகக் கேட்டு, அதற்கு அவர் உடம்பிற்கு என்ன என்று விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மெல்லிய குரலில் சினேகமாக சொல்லிக் கொண்டு போக, கேட்க ஆசையாயிருந்தது.

அப்போது உள்ளே நுழைந்த அவர் மகள் 'இவளுக்கு புஸ்தகம் வாசிக்கறதுல ரொம்ப ஆர்வம்' என்று அவரிடம் சொல்லி விட்டு, என் பக்கம் திரும்பி 'அய்யா கூட நிறைய வாசிச்சிருக்கார்' என்று சொன்ன பிறகு பேச்சில் ஸ்ருதி சேர ஆரம்பித்தது.

நான், கணவர், அவர், அம்மா (அவர் மனைவி), அவர் மகள் எல்லோரும் சேர, பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது. பொன்னியின் செல்வனில் இருந்து அலையோசைக்குப் போன போது கணவரும், அம்மாவும் கழண்டிருந்தனர். அலையோசை நாயகி கடைசியில் ஏரியில் படகு சவாரி போகும் போது அவளுக்குக் கேட்பதாக வரும் அலை சத்தத்தைக் குறிப்பிட்டு 'வாசிக்கும் போது காதுல அலை சத்தம் கேட்டுதுப்பா' என்று அவர் சொன்ன போது 'அட! இப்படி வாசிப்பவரா நீங்க!' என்றிருந்தது.

கல்கியிலிருந்து கொஞ்சம் அங்கே இங்கே என்று அலைந்து பாலகுமாரனுக்கு வரும் போது அவர் மகளும் ஜகா வாங்கி விட்டார். மகளுக்கு அந்தக் கால பாலகுமாரன் பிடிக்காது. சமீபத்திய பாலகுமாரன் எழுத்துகளோடு எனக்கு நெருக்கமில்லை. பெரியவருக்கும் பழைய பாலகுமாரன் எழுத்துகள் மேல் ஒரு மோகம் இருந்தது. நான் நினைவு கூர்ந்ததும் அவர் நினைவு கூர்ந்ததுமாய்... ஒரு நீண்ட சுற்றுக்குப் பிறகு தி.ஜா. முதல் முதலாய் எனக்கு தி.ஜா அறிமுகமானதை நான் சொல்ல, மலர்மஞ்சம், மோக முள், அம்மா வந்தாள்... போதும் என்று நர்ஸ் விரட்டாமல் இருந்திருந்தால் இன்னும் ஓடியிருக்கும்.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசியிருக்கிறோம். இன்னும் பேச வேண்டியது பாக்கியிருப்பது போல இருந்தது. பேசிய வரையில் திருப்தியாகவும் இருந்தது. விடை பெறும் நேரம், அவரைச் சந்தித்ததில் எவ்வளவு சந்தோஷம் என்பதை உணர்த்த ஸ்வாதீனமாகத் தோண்றியது அழுத்தமான ஒரு கை குலுக்கல் தான். நான் கை நீட்ட, அவர் கண்களில் ஒரு தயக்கம் காட்டி, வணக்கம் சொல்லி அனுப்பிய போது... ஆச்சர்யமாயிருந்தது.

அவரை விட்டு விடலாம். வயதானவர். அந்தக் கால மனிதர். ஆனால் அந்த சந்திப்பு சில கேள்விகளைத் தந்தது. ஒரு ஆண் இன்னொரு ஆணை சந்திக்கும் முதல் சந்திப்பே பெரும்பாலும் கை குலுக்கலில் தான் தொடங்குகிறது. ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணைச் சந்திக்கும் போது கூட ஒரு தலையசைப்பு... ஒரு ஹலோ அல்லது வணக்கம் மட்டும் ஏன்? முதல் சந்திப்பிலேயே இயல்பாக பெண்களோடு கை குலுக்கும் ஆண்கள் இல்லையென்றும் சொல்ல முடியாது. ஒருவரைப் பார்க்கும் போது இயல்பாக அப்படி எக்ஸ்பிரஸ் செய்யச் செய்வது எது? அவர்கள் உருவமா? உடை தரும் அனுமானமா? இல்லை வைப்ரேஷன்ஸா? சில நேரங்களில் எவ்வளவு பழகினாலும் விலகியே நிற்கச் செய்வது எது? மரியாதை? கலாச்சாரம்? என்னன்னாலும் நீ பெண்(ஆண்), நான் ஆண்(பெண்)?

ஒருவேளை இப்படி மறுக்கப் படலாம் என்பது தான் முக்கியமான காரணமாயிருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் அதிகம் 30+ களுக்குத்தான். 30+ களோடுதான். அதற்குக் குறைந்த வயதுக்காரர்கள் இவ்வளவு இறுக்கமில்லை என்று தோண்றுகிறது.

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

புதுக்கவிதையின் வழித்தடங்கள்

புதுக்கவிதையின் வழித்தடங்கள் -பொன்னீலன்-

சி. கனகசபாபதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பின் மீதான விமரிசனம்
"தமிழ் கவிதைகள்-மரபும்-புதுசும்"
காவ்யா வெளியீடு
விலை 140

(12.1.04. அன்று சிவகாசி பாரதி இலக்கியச் சங்கக் கருத்தரங்கில் படிக்கப் பட்டது)

19ம் ம் நூற்றாண்டில் மரபு வழிப்பட்ட இலக்கியங்கள் புதிய சமூக உள்ளடக்கத்தின். சேர்மானத்தால் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயார் கின்றன. தெற்கே அரிகோபாலன் (அகிலத் திரட்டு- கவிதை நூலின் சிரியர்) வடக்கே ராமலிங்க வள்ளல் வேதநாயகம் பிள்ளை முதலிய கவிஞர்கள் தமிழ்க்கவிதையை வடிவத்தில் எளிமைப்படுத்தினார்கள் சித்தர்கள் பிற்கால அவ்வையார். இவர்களின்மரபில் தமிழ்க்கவிதையை மக்கள் வாழ்வின் மையப்பகுதிக்கு இவர்கள்நகர்த்த முயன்றார்கள். சாமான்ய மக்கள் வாழ்வின் எழுச்சிக்காகக் கவிதையை உழைக்கச் சொன்னார்கள். இப்புதிய சூழலால் இவர்கள் கவிதைகளில் மரபை யொட்டிய வடிவப் புதுமை உண்டாயிற்று . கவிதை மக்களுக்கான தாய் மக்களுடன் உரையாடுவதாய் எளிமையும், தெளிவும், வேகமும் பெற்றது. இசை என்னும் சிறுகசைத்து எழுத்தறியாத மக்களின் தெருக்களில் எல்லாம் கூடப் பறந்து திரிந்தது. புதிய ஜனநாயக மனித நேய உருவாக்கத்திற்கு இது பெரும் பங்களிப்பு செய்தது.
இக்காலத்தில் இன்னும் இரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. சைவத் திருமடங்களிலும் சமூகத் தலைவர்கள்களின் இல்லங்களிலும் சிறைப்பட்டுக் கிடந்த தமிழ்ச்செவ்விலக்கியங்கள் உ.வே.சா மற்றும்பெரியோர்களின் அயராத உழைப்பால் சிறைக்கதவுகளைத் திறந்து வெளியே வரத் தொடங்கின. மேல் நாட்டு நாகரீகம் திக்கம் செய்யாத அன்றைய சூழலில் தமிழ் நாட்டு வீட்டோரங்களில் எல்லாம் நாட்டுப் புறப்பாடல்கள் இசை எழுப்பிக் கொண்டிருந்தன.

இந்த நேரம் வெள்ளைக்காரன் திறந்து வைத்த மேற்குக் கதவு வழியாக மேற்கு இலக்கியங்கள் நாட்டில் நுழைந்து கலாசாலைகளின் வழியாகப் படித்தவர்களைப் பற்றின. இந்த நாற்சந்தியின் ஒற்றைத் திரட்சியாக பாரதியின் கவிதை உதயமாயிற்று. அதன் ஒளி எல்லா திசையிலும் பரவிற்று சங்க இலக்கியத்தின் செவ்வியல் தாக்கமும், சித்தர் மரபின் திக்க எதிர்ப்புக் குணமும், பாரதியில் சங்கமித்தன. நாட்டு பாடலின் நளினமும் மேற்றிசைக் கவிஞர்களின் புதுமையும் அவனில் ஒன்றிணைந்தன. இதன் விளைவாக, தேசத்தை தேசத்து மக்களை மக்களின் விடுதலையைப் பாடச் சொல்லிக் கவிதா தேவியை அவன் பணித்தான். எழுத்தறிவு இன்றி இருந்த பெருவாரியான மக்களுடன் உரையாடச் சொல்லி அவளுக்கு பாரதி மக்கள் மொழியைக் கற்றுக் கொடுத்தான். இசை இறகுகளையும் வழங்கினான்
நாற்றிசைக் கலவையால் பாரதியின் கவிதை யிரம் ரூபங்களில் புதிது புதிதான செய்திகளோடு வெளிப்பட்டது. பழைய யாப்பு முறையிலும் வந்தன. நாட்டர் மரபிலும் வந்தன . அன்றைய மேற்கத்தியப் புது மரபிலும் உதித்தன. சித்தர் மரபிலும் வந்தன

மரபார்ந்த விழுமியங்களையும் எழுதினார் பாரதி. புதிதாக உதித்தெழும் தேசியத்தையும் எழுதினார். நூற்றுக் கனக்கான ண்டு ஒதுக்கப் பட்டு கிடக்கும் மக்கள் விடுதலையும் எழுதினார்.ஷெல்லியை உள்வாங்கி எழுதினார். விட்மனை உள்வாங்கி யும் எழுதினார்..வேத வடிவிலும் எழுதினார். நவீன வேத வடிவிலும் எழுதினார். அவர் காலத்தின் தமிழ் இலக்கியத்தில் அவர் சொல்ல முயலாமல் விட்டு விட்டது பெரிதாக எதுவும் இல்லை என்று துணிந்து கூற முடியும்

பாரதிக்கு பின் பாரதி தாசனாக வீரியமாக உருவான பாரதி தாசன் பாரதியின் சமூகப் பார்வையை ழப்படுத்தி வளர்த்தார். பாரதி தாசனிடம் தமிழ் தேசிய உணர்வும் சம தர்மச் சிந்தனையும் ஒன்று கலந்துசமூகத்தின் எல்லா முடிச்சுகளுக்குள்ளும் புகுந்து வெடித்தன
பாரதியின் இசை மரபை அவர் தொடர்ந்தார்.பாவேந்தரின் வாரிசுகளாகக் கம்பதாசன் கண்ணதாசன் வாணீ தாசன் என ஒரு தொடர்ச்சி இன்றைய வைர முத்து வரை வளர்ந்து வருகிறது.பாரதியின் இன்னொரு கிளையாக நாமக்கல்லாரும் சவுந்தராகைலாசமும் அவர்கள் வாரிசுகளும் வருகிறார்கள்.
இதனோடு இணைந்து சில வேளைகளில் முரண்டும் ரகுநாதன் தமிழொளி பட்டுக் கோட்டையார் , கே.சி.எஸ் அருணாசலம் பரிணாமன் என்று ஒரு நீரோடை வளர்ந்து கண்டிருக்கிறது. இன்னொரு புறம் நா .பிச்சமூர்த்தி, சி. மணி, மயன், வல்லிக் கண்ணன் பசுவய்யா, தேவதேவன் என்று ஒரு நீரோடை பாய்ந்து கொண்டிருக்கிறது. இதுவே புதுக்கவிதை என்னும் புதிய நீரோடை.

எழுபதுகளிலே இந்தப் புதுக் கவிதையும் இரண்டு கிளை ஓடைகளாக யிற்று. செல்லப்பா, மயன், நகுலன், அரூப் சிவராம்,பசுவய்யா,தேவதேவன் போன்றவர்கள் ஒரு பக்க மாகவும், சிற்பி, மீரா, அப்துல் ரகுமான், புவியரசு, காமராசன், கந்தர்வன்,மேத்தா,பரிணாமன் எனத் தொடரும் ஒரு கிளை மறுபக்கமாகவும் பாயத்தொடங்கியன. 80களுக்குப் பிறகு எல்லாக் கிளைகளுமே சிறு சிறு வாய்க்கால்களாகப் பிரிந்தது.பெண்ணியம் தலித்தியம்,தேசியம்,சூழலியம் எனத் தேவைப் பட்டவர்களைச் சென்று சேரும் பயணத்தில் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இவை மேலும் கிளை பிரியும் மக்களை மேலும் நெருங்கும் என்ற தெளிவு நமக்கு உண்டு.அவரவர் கவிதை அவரவர்க்கு.ஜனநாயக யுகத்தின் பொதுத்தன்மை இது.மனிதர்களும் பலவிதம் .கவிதைகளும் பலவிதம் திக்க மோ தீண்டாமையோ இதில் இல்லை, இருக்கவும் கூடாது எந்த மரபும் யார் மீதும் திக்கம் செலுத்தக் கூடாது. செலுத்தவும் முடியாது.
பாரதியின் கிளைகள் வளரத் தொடங்கிய காலத்தில் பாரதியிலிருந்து தொடங்கியதனாலும், புதுக்கவிதையானது பாரதியிலிருந்து முற்றிலும் முரண்பட்டு இருண்மையும் அகச் சிதைவும் பெற்று மக்களிடம் இருந்து விலகிச் சென்றது,பாரதி யுகத்தில் முறுக்கேறி நின்ற போர்குணத்தை சமூகத்தை புரட்டி போடத் துடித்த புரட்சிகர உள்ளடக்கத்தை இக்கவிதை மரபு இழந்தது மட்டுமல்ல,மௌனவாசிப்பு என்னும் தங்கக் கூண்டுக்குள் சிறைப்பட்டது..அதன் போஷகர்களோ வீரியமான மக்கள் கவிதைகளைத் தீண்டத் தகாதவை ன்மா இல்லாதவை என்று நேரடியாகவே எதிர்த்தனர். அதன் இருப்பை மறுத்தனர். .கவிதை உலகில் இதனால் பெரும் சர்ச்சை உருவாயிற்று. இந்த சர்ச்சையின்
தீவிரத்தில் மரபுக் கவிதை செத்துப் போயிற்று என்று ஒரு கோஷ்டியாரும் புதுக் கவிதை கவிதையே இல்லை என்று ஒரு கோஷ்டியாரும் கச்சை கட்டி எழுந்தனர். தலைகளோடு தலைகள் மோதின பேனாக்கள் ஒன்றோடு ஒன்று உரசித் தீப்பொறிகள் உதிர்ந்தன. வசவுகளும் சொல்லெறிகளும் நிகழ்ந்தன.ந.பிச்சமூர்த்து,சி.சு செல்லப்பா மயன், நகுலன் போன்றவர்கள் ஒரு பக்கம் என்றால் எதிர்பக்கம் தொ.மு.சி ரகுநாதன் கலாநிதி சிவத்தம்பி பேராசிரியர்,நா.வானமாமலை ,கே.சி.எஸ் அருணாசலம் முதலியோர் யுதம் தாங்கினார்கள் .இரண்டு பக்கமும் சேதாரம் உண்டு.ரகுநாதன் ,கே.சி எஸ் முதலியவர்கள் கடைசிவரை தங்கள் நிலையிலிருந்து மாறவில்லை. மறுபக்கத்திலும் இது போண்றவர்கள் உண்டு. ரகுநாதன் முதலியவர்கள் அன்றைய புதுக்கவிதையின் உள்ளடக்கத்தை மட்டுமல்ல உருவத்தையும் கேலி செய்தார்கள்.வானமாமலை முதலியவர்கள் ரம்ப காலப் புதுக்கவிதையின் உள்ளடக்கத்தையும் மக்கள் வாழ்விலிருந்து அது விலகிப் போன ஒடுங்கிய நிலையையும் எதிர்த்தவர்கள். எழுபதுகளில் மக்கள் கவிஞர்கள் தோன்றி புதுக்கவிதையைச் சமூகப் போராட்ட களத்துக்கு இழுத்து வார்த்ததும் வானம் பாடிகளாகப் புதுக்கவிதைகள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியதும் புதுக்கவிதையிலும் பாரதி மரபைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்தினார்கள். புதுமைப்பித்தன் பாணியிலான நெகிழ்ந்த கவிதை ஏராளமாக எழுதியும் ரகுநாதன் கடைசிவரைத் தன் புதுக்கவிதை எதிர்ப்பைக் கைவிடவில்லை
ரகுநாதன் மட்டுமல்ல மரபுத் தமிழில் உள்ளும் புறமும் நனைந்து போன தமிழ்ப் பேராசிரியர் பெருமக்களில் பலரும் கூட சமூக வாழ்வில் சரியாக ஒட்டாமல் மிதந்து நிற்கும் இந்தப் புதுக்கவிதைகளை அலட்சியப் படுத்தினார்கள்
இந்தச் சூழ்னிலையில் தான் உருவாகிறார் சி. கனகசபாபதி . புதுக்கவிதை சூழலில் உருவானவர் அல்ல அவர். மரபார்ந்த கல்லூரிக் கல்விச் சூழலில் உருவானவர். னால்தன் விசால அறிவால் தேடித் திரட்டிக் கொண்ட ங்கில இலக்கிய புலமையால் முயன்று ஏற்படுத்திக் கொண்ட விமர்சனக் கூர்மையால் புதுக்கவிதையின் வருங்காலம் பற்றிய தெளிவால் ரகுநாதன் எதிர்ப்புக்கு விரிவாக , நுட்பமாக ழமாகப் பதில் சொல்லுகிறார். இந்தப் பதில்களின் தொகுப்பே சி. கனகசபாபதி கட்டுரைகள் என்னும் இந்த நூல்
பாரதியில் இருந்து புதுக்கவிதை தோன்றுவதை அவர் விளக்குகிறார். பாரதியின் புதுக்கவிதை உருவாக்கத்தில் வேதக்கவிதைகளின் தாக்கத்தையும் விட்மனின் தாக்கத்தையும் விளக்குகிறார். பாரதி புதுக்கவிதையின் உள்ளடக்கங்களில் காணும் மரபார்ந்த தன்மையையும் புதுமையும் விளக்குகிறார்.பாவேந்தர் கவிதை அழகை விளக்குகிறார். பாவேந்தர் கவிதைகளிலே இசையின் தாக்கம் குறைவு என்று அவர் சொல்லும் கருத்துக்கள் விவாதத்துக்குரியவை. இசைக்குள் அடங்காதவை என நான் கருதியிருந்த பாவேந்தரின் கவிதைகளை பல புலவர்கள் இசையோடு பாடியதை நானே செவியாரக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
தொடர்ந்து ந. பிச்சமூர்த்தியையும், சி .மணியையும் தர்மூ அரூப் சிவராமையும் அவர்களின் கவிதை வழியே சித்தரித்துக் காட்டுகிறார்.சி. க இந்த இடத்தில் பாரதிக்குப்பின் பாரதி உந்தல்க் கவிஞர் களால் படைப்பு நிலை ஒரு தேக்க நிலையில் போன தடத்திலே போய்க்கொண்டிருக்க இதுக்கு எதிர்முனையில் பிறந்த படைப்புத் துளிர்ப்பே தமிழில் புதுக்கவிதை என்று அதன் பிறப்பிடத்தைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டுகிறார். கவிதை கண் வழியே புகவேண்டும் என்னும் புதுக்கவிதையின் அடிப்படைக் கோட்பாட்டை விளக்குகிறார். வழித்துணை , பெட்டிக் கடை நாரணன் , காட்டு வாத்து போன்ற கவிதைகளின் ஒவ்வொரு எழுத்தையும் சொல்லையும் அடியையும் அனுபவித்து அனுபவித்து சிலாகிக்கிறார்.பாரதி தாசன் கவிதையில் புறநோக்கு மிகுந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார். னால் அதன் தொடர்ச்சியாக ஜீவாவையோ,கே.சி.எஸ் அருணாசலத்தையோ, அவர்களின் வாரிசுகளையோ மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. பட்டுக்கோட்டையின் கவிதைத்திறன் பற்றிப் பேசுகிறார். சங்கக் கவிதைகள் பல இசைக்குள் மடங்காத சொற்சித்திரங்களே என்கிறார். எல்லை மீறிய இசைக்கனம் கவிதையே அமுக்கும் என்கிறார். சங்கப் பாடல்கள் முழுக்கப் புலவர்கள் அகவிப் பாடிய இசை வரிகளே என்னும் கலாநிதி கைலாசபதியின் ய்வு முடிவுகளை இவ்வாறு சி.க மறுக்கிறார்.இது விவாதத்துக்குரியது.சிலம்பின் இடையுரைகள் புதுக்கவிதைகளே எனவும் விளக்குகிறார் சி.க
எழுபதுக்குப்பிறகு வந்த மனித நேயப் புதுக்கவிஞர்களையும் அவர்களின் கவிதைகளையும், மனித நேயக் கோட்பாட்டையும் அதன் வரலாற்றையும் விளக்குகிறார்.சி. க , குபராவின் கவிதைகளையும் , அவற்றி¢ன் தொடர்ச்சியாகப் பல கவிதைகளையும் மதிப்பீடு செய்கிறார். வடிவங்களைக் கொண்டும், கருத்து நிலைகளைக் கொண்டும் புதுக்கவிதைகளை நுட்பமாக பிரித்துக் காட்டுகிறார். வகைப்படுத்துகிறார்.புதுக்கவிதை ஓசை துறந்து , ஓவியத்தை ஒட்டிக் கொண்டதை சுட்டுகிறார்.நூலகவசதி மிக்க நவீன காலத்தில் ஓசை தேவை இல்லை என்கிறார். இக்கருத்தும்விவாதத்திற்குரியதே . கவிதை மரபுகளை மீறிய கவிதை புரட்சியாளர்கள் போல இசை மரகளை மீறிப் புதுமை படைக்கும் இசைப் புரட்சியாளர்களும் பலர் இன்று தோன்றி விட்டார்கள் எந்தக் கவிதையும் இசையில் இசையும் அளவுக்கு இசை பழைய இசை இலக்கணத்தை உடைத்து விசாலப்பட்டு விடது என்று நிரூபித்தார். எம்.பி சீனிவாசன். இன்று கவிஞர் என்.டி ராஜ்குமார் தன் புதுக்கவிதைகளை இசையோடு படிக்கிறார். திலகபாமாவின் கவிதைகள் மேடை தோறும் சிறகசைத்து நம் இசைச் செவிக்குப் பறந்து வந்து கொண்டிருக்கின்றன.
கேரளப் புதுக்கவிஞர்கள் பலர் இசையைத் துறக்கவில்லை .இசை அவர்களையும் இணைக்கிறது.
இருபதாம் நூற்றாண்டுப் புதுக்கவிதையைப் புரிந்து கொள்வதற்கு அதன் போக்குகளில் தெளிவு பெறுவதற்கு இந்த கட்டுரைகள் மிக அருமையான வழிகாட்டிகள். புதுக்கவிதை இலக்கணம் பற்றி¢ய ஒரு அடிப்படையான நூலாகக் கூட இதைக் கொள்ள முடியும் மொத்ததயும் பார்க்கும் போது புதுக்கவிதையின் நுட்பங்களி¢ல் தோய்ந்த புதுக்கவிதை வரலாற்றில் தேர்ந்த ஒரு வலிமையான வழக்கறிஞரின் விவாதக் குரலில் இ ந்நூல் அமைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும சிரியர் இலியட் முதல் ரென்னி வேலக் வரையிலான மேற்கத்தியப் படைப்பாளிகளின் மற்றும் விமர்சகர்களின் உதாரணங்களையும் கவி¨திக் கோட்பாடுகளையும் வைத்து இந்த தமிழ்ப்புதுக்கதைகளை மதிப்பீடு செய்வதும் பொருத்தமானதே .அந்த உதாரணங்களோடுதான் அவை ஒட்டும்.அந்த அளவு கோலுக்கு உள்ளேதான் அவை அடங்கும்

நூலைத் தொகுத்து வெளியிட்ட காவ்யா சண்முக சுந்தரம் அவர்களும் தொகுப்புக்கு பெரிதும் உதவிய சி.க வின் வாழ்க்கைத் துணை திருமதி லட்சுமி கனகசபாபதி அம்மாவும் , நூல் உருவாக்காத்தின் போது கடுமையாக உழைத்த கவிஞர் திலகபாமாவும் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்.புதுமைப் பித்தனை அவருடைய படைபாளுமையை த் தமிழிலக்கிய வரலாற்றில் நிரந்தரப் படுத்திடத் தோன்றிய " புதுமைப் பித்தன் வரலாறு" என்னும் ரகுநாதன் நூல் போல் சி. க அவர்களின் நினைவை அவருடைய விமரிசன அருமையைத் தமிழிலக்கியப் பரப்பில் நிலை நிறுத்தும் நினைவுச் சின்னமாக இந்த நூல் நிலைத்து நிற்கும்

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

சிக்காத மனம்

-திலகபாமா
தூங்க மறுத்த கண்களுக்கும், ஏங்கித் தவிக்கும் நெஞ்சத்திற்கும் பதில் சொல்ல முடியாது இமைகளை இழுத்து மூடிய படி கிடந்தாள் தீபா.மூடிய கண்களுக்குள் தெரிந்த இருளுக்குள் ஒளிர்ந்த வளையங்களுக்கிடையில் இரு கண்கள் வந்து சிரித்து போனது. பல இடர்களை தாங்க வலிமை தந்த கண்களது.இதயங்களற்று இயந்திரமாகிப் போன மானிடர்கிடையில் என் இதயம் பூக்க செய்கின்ற கண்களது.இருக்கின்ற காதலை உணர்த்தமுடியாது, இல்லை உணர்த்தத் தேவையில்லை யென உணர்ந்தபடி போகிற அவசர உலகில் இன்னுமுமென்னை வருடிக் கொடுத்தபடி எனை சாகாமல் வைத்திருக்கின்ற கண்களது. பல நேரங்களில் என் வாழ்க்கை படகு காற்றைக் கிழித்துக் கொண்டு பயணப்பட தென்றலில் அசைந்து கொண்டிருந்த பாயது.
திரு விழாவிற்கு கட்டியிருந்த மைக்செட் அலறலில் அவள் மௌன மனம் விழித்துக் கொண்டது. அன்றும் இதே திருவிழா ஓலம்தான். அத்தை மகள் பாண்டிச் செல்வி என்கிற செல்வியும் இவளும் வருடம் ஒருமுறை பங்குனி மாத மாரியம்மன் திருவிழாவில் சந்திக்கிற சந்தோசங்களை சிந்தித்தபடி சிரிப்பும் பேச்சுமாக..
இன்றைய படிப்பு ,நாளைய வாழ்க்கை இப்படி எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி இருந்த கிராமத்து வாழ்க்கையில் இளமையே குளுமைதான். பெரியவர்கள் அறியாது கிசுகிசுத்த மரக்கிளைகளில் டும் சிட்டுக் குருவிகளாய் டும் மனதுடன்.கடந்து செல்லும் ஒவ்வொரு பால்குடமோடு வாசல் வரை போய் பின் மச்சுக்குள் வந்து அடங்கினாலும் சிறகடித்து பறந்த மணங்களோடு மலரும் பூக்களாய்.....
பாட்டியின் 5 பிள்ளைகளின் குடும்பமும் சேர்ந்ததில் இருக்க படுக்க இடமில்லாது போன சின்ன பழங்காலத்து வீடு. னால் எல்லோர் மனங்களும் விசாலமாய் இருந்ததனால் ஒருவரை ஒருவர் இடித்தபடி , னால் புழுக்கமில்லாதுஇருந்த நேரம்.
எங்கள் சந்தோசம் காண மழை வந்தது. எங்கள் உள்ளங்களில் இருந்த பிரகாசம் கண்டு பொறாமையால் நின்று போனது மின்சாரம்.
கம்பி கேட்டு மட்டும் இழுத்து விட்டபடி பெண்கள் உள்ளேயும் ண்கள் வெளியேயும் படுத்தபடி பழங்கதைகள் அவரவர் வயதொத்தவர்களுடன் பேசியபடி
மழையில் நனைந்தபடி ஓடி வந்த உருவம் அவளையும் நனைத்துப் போடும் என்று அறியாது அவளும் செல்வியும் பள்ளிக்கதைகளும் ,கல்லூரிக்கதைகளுமாக....
உருவம் கண்டு தீக்குச்சி உரசி மெழுகுவர்த்தி பற்ற வைத்து அத்தை உயர்த்திப் பிடித்து என்ன தியாகு இந்நேரம்?" என கேட்க
"காலேஜ் முடிஞ்சு கிளம்ப நேரம் யிடுச்சு சித்தி, மழை வேற"
" சாப்பிட்டியா?"
"இல்லையே சித்தி ஒரே மழை எங்கேயும் இறங்க முடியலை"
படுத்திருந்த பெண்கள் தாண்டி வரமுடியாத நிலையில் சாப்பாடு பரிமாறல் வாசலிலேயே ஒரு ஸ்டூல் போட்டு
படுத்திருந்த தீபா, செல்வி தலைக்கு மேலே சாப்பாடு பாத்திரங்கள் பறந்தபடி பரிமாறப்பட்டு...
கேலி பேசி அழுத்துப்போயிருந்த இருவரும் வந்திருப்பது தீபாவிற்கு முறைப்பையன் என்றதும் மெல்ல செருகிக் கொண்டிருந்தகண்கள் பிரகாசமாக இருளில்ம் ஒளிர்ந்தது. கிசுகிசு பேச்சுக்கள் குலுங்கும் சில்லரை சிரிப்புகள்மீண்டும்.....
பேச்சிலிருந்து யார் எவர் என்று காதுகள் தீட்டியபடி கிரகித்துக் கொண்டனர், இதுவரை பார்த்திராத ஒரு தூரத்துச் சொந்தம், இருளில் இப்பொழுதும்காணமுடியாது தூங்கிப்போனார்கள்
காலை வேளையில் இரவு வெள்ளிகளைத் தொலைத்த வானமாய் இவர்களூம் நடந்தது மறந்தபடி வேலைகளில் ஆனால் புதிதாய் வானில் உதித்த பகலவனாய் அவன் எதிர் வந்த போது கூசும் கண்களுடன் நிலம் பார்த்தபடி மலர்ந்த தாமரையாய் அவள் ஏன் மாறினாள்?
குதி போட்டபடி இருந்த அவளது நடை இப்பொழுது ஜதி போடும் நடனமங்கையின் பதிவுகளாய் ஏன் ஆனது?எப்பொழுதும் தன்னை வெளிப்படுத்தியபடி இருந்த அவள் இப்பொழுது அவளை மறைத்துக் கொள்ள ஏன் இத்தனை பிரயத்தனம் எடுத்துக் கொள்கிறாள்சட்டென நிமிர்ந்து எதிராளியைப் பார்க்கும் அவளாது ஞானச் செருக் கொண்ட கண்கள் எதைத் தொலைத்தோமென தேடுகிற பாவனையில் தவிக்கிறதே ஏன்?

24வருட வாழ்வில் 24 மணி நேரப்பொழுது சொற்பம் தான். னால் அந்த 24 மணி அவளின் மிச்ச பொழுதுகளையும் க்கிரமித்துக் கொண்டாதென்னவோ உண்மை
பேசிக் கொள்ள முடியாத உறவுகள் அவை,பார்வையில் பரிமாறியது எதை. தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் சந்தித்து சந்தித்து மீண்ட கண்கள் சாயங்காலக் கூடு திரும்பும் பறவையாய் அவரவர் வீடு திரும்ப எத்தனித்த போது சூழல்கள் மீறி நிலை குத்தி ஒன்றோடொன்று நின்றது இன்னமும் கண்களூக்குள்
திசை மாறி,இரை தேடி எத்தனை தூரம் கடந்தாலும் கூடவே வரும் கண்களாய் அவை எப்பொழுதும் அவள் துயர் துடைத்தபடி உயர் படிதனில் ஏற்றியபடி. சிரமங்கள் வரும் போது சிந்தனைக்குள் வந்து சிரித்து போகும் கண்களால் இவள் மனமும் சிரித்து விடும்.
பருவங்கள் மாறுகையில் பறந்து செல்லும் பறவையாய் பறந்தாலும் பயணத்தில் பின்னோக்கி செல்லும் மரமாய் இல்லாது , கூடவே வரும் நிலவாய் எட்டா தூரத்தில் எப்படி அந்தக் கண்களால் தொடர முடிகிறது
ஒவ்வொரு முறையும் இதழ் விரித்து மலராய் மலரும் எண்ணம் வரும் போதெல்லாம்,மணம் அறியாது காம்பொடிக்கப் படுகையிலும் தரவாய்காயம் தடவும் அந்தக் கண்கள்....

சுரீர் சுரீர் என கொசுக்கடி தாங்காதுமுழித்துப்பார்க்கையில் அணைந்திருந்தது கொசுவர்த்தி சுருள்
கொசுக்கடிக்குப்பயந்து மேலே கிடந்த பிள்ளையின் கை நகர்த்தி எழுந்து, அலுப்பில் அயர்ந்திருந்த கணவன் குமாருக்கு போர்த்தி விட்டு கொசுவர்த்தி சுருள் பற்ற வைத்து படுக்கையில் விழுந்தாள்
அறையெங்கும் மூச்சு விட முடியாத நெடி. நெடி தாங்கச் சொல்லும் கொசுவின் கடி. திணறல்களோடு தூங்க மீண்டும் கண் மூடினாள் இருளுக்குள் ஒளிர்ந்த வளையங்களுக்கிடையில்...........

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

விழிகள் -சிறுகதை:திலகபாமா

விழிகளுக்கு நான் அடிமையாக நேர்ந்த கதையை நினைத்துப் பார்க்கின்றேன். நினைவுகளின் ஒரு பக்க நுனியெடுத்துப் பிடித்தபடி அதன் ஆரம்பம் தேட மெல்ல நகர்கிறேன். என் நகர்தலில் என் பாவாடை சட்டைப் பருவம் வந்து நிழலாட.....

அந்த குறுகலான சந்தில் நெருக்கலான வீடுகள், உயரம் குறைவான

நிலைப்படிகள். மாலை நேர மஞ்சள் வெயில், தன் பங்குக்கு வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்களோடு போட்டி போட்டுக் கொண்டு தன் கோலத்தை பூமி மேல் எழுதிக் கொண்டிருந்தது சந்தின் முடிவில் இருந்த

தண்டவாளத்தில் ரூளால்ரயில் காற்றில் புகைக் கோலமிட்டபடி போய்க் கொண்டிருக்க, குதியாட்டமும் கையாட்டலுமாகசந்தோசத்தில் திளைத்திருந்த பிள்ளைகள் கூட்டம்.

கருவேலஞ்செடிகளும், எருக்கஞ்செடிகளும் நிறைந்திருக்க, கருவேலஞ்செடிகளின் இலைகளில் சமைப்பதாய் பாவணை செய்து கொண்டிருந்த பெண் குழந்தைகள், எருக்கஞசெடியில் பட்டுப் புழுக்களை தேடி சேகரித்து கொண்டிருந்த குழந்தைகளின் கூட்டம் எல்லாம் தாண்டி ஈரமாயிருந்த தெருவில் பாவாடை நனையாது நான் தூக்கிச் செருகிக் கொண்டு நடந்த அந்த மஞ்சள் வெயில் மாலை வேளை நினைவில் வந்து

போனது. எழுவது வயது ஆச்சியும் நானும்.. வயது தன் வருகையை அவர் கைகளில் செதுக்கியிருந்த சுருங்கிய தோலை நிமிண்டிக் கொண்டே என் கேள்வி

எங்கே ஆச்சி போறோம்?

இங்கே ஒரு பெரியாச்சி இருக்காங்கடா. எனக்கு அக்கா அவங்களை பார்க்கப் போகிறோம்.

உங்களுக்கு அக்கா இருக்காங்களா? தங்கச்சி , தம்பி எல்லாம் இருக்காங்களா ஆச்சி?

இருந்தாங்கடா,

ஒரு தம்பி, தங்கச்சி.. .. இப்ப இல்லை இறந்துட்டாங்க. இந்த அக்கா மட்டும் தானிருக்காங்க

வாழ்வைப் போல் எங்கே குறுகும், எங்கே திரும்பும் என்றறியா தெருவில் போய்க் கொண்டே இ;ருக்க பெரிய பழைய மரக்கதவொன்றின் அருகில் வந்து நின்றோம்.

"பூவேய்,.. ..மல்லி, முல்லை ... . .. ..

என்று தெருவில் வித்துக் கொண்டு போக எங்கிருந்தோ ஒரு குரல்

எனக்கும் பூவு? குரல் வரும் திசைதேடி, அது என்னால் அனுமானிக்க

முடியாததாய்......

அதே நேரம் யாருமே அந்தக் குரலை, பூக்காரி முதற்கொண்டு கண்டு

கொள்ளவில்லை என்பதுமெனை யோசிக்க வைக்க, திரும்பித் திரும்பி நான்

தேட, நாங்கள் நின்றிருந்த வாசலின் கதவடியில் ஒரு துளை இருக்க அதில்

கண் ஒன்று முளைத்திருந்தது .இ;ங்கிருப்போர் எல்லாருக்கும் மிகப் பழக்கமாயிருந்த குரல் போலும் அது.....

குழந்தைகள் தங்கள் விளையாட்டில் மூடிய கண்களோடு கோடுகளை மிதிக்காது செல்லாக்குகளை மிதிக்க நகண்டு கொண்டிருந்தார்கள். பையன்களோ சிமெண்ட் பாலங்களுக்கிடையில் கிட்டிப் புள் வைக்க தோண்டியிருந்தார்கள்.கிட்டிப் புல்கள் தாக்குமோ பயந்தில் அந்த வழியாக வந்த யாவரும் யோசித்த படி நடக்க. யார்

காதிலும் விழாத அந்த குரல் எனக்கு மட்டும் மிகத் துல்லியமாகக் கேட்டது. பேசியது கண்கள் என நான் உணர்ந்ததாலா?

கண் பேசியது,

நான் காசு தரேன் பூ வாங்கிக் கொடு

இமைக்கும் கண்கள் பேசியதாய் தோற்றம் தர, கண்கள் பேசுகிறது

என்கிற எண்ணத்திலிருந்து நான் மீளவே முடியாது தவித்துக் கொண்டிருக்க, ஓட்டை வழியா இ;ரு விரல்கள், விரல்களுக்கு நடுவில் செல்லாமல் போயிருந்த அலுமினிய மூன்று பைசா காசொன்று.

இந்த உலகிலிருந்து அந்த பேசிய விழிகள் அந்நியப்பட்டிருக்கும் கால இ.டைவெளியை காட்டி நிற்க,

இ;ந்தா எனக்கு கொஞ்சம் பூவாங்கிக் கொடு.

பொறு கதவு திறக்க குமார் வரட்டும் வாங்கலாம்

அதட்டலா இ;ல்லையா என்று தீர்மானிக்க முடியாதவாறு ஆச்சியிடமிருந்து பதில் வர,

விளையாடிக் கொண்டிருந்த எதிர் வீட்டுப் பிள்ளைகள் இவ்வுலகு மறந்து தன்னுலகில் நிலைத்திருக்க, அவர்களில் ஒரு பெண்ணை அழைத்தார் ஆச்சி,

பாப்பா, குமார் அன்னாச்சியைப் போய் கூப்பிட்டு வர்றியாப்பா?

ஒரு ஆச்சி வந்திருக்கேன்னு போய் சொல்லு.

சரி பாட்டி.

சொல்லி விட்டு ஓடினாள் வாசலில் காலட்டியபடி விளையாடுபவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். மாமாவை கூப்பிடப் போன பிள்ளையால் விடுபட்ட இ;டம் எவ்வளவு விரைவாக நிரப்பப்பட்டுவிட்டது.

பொரிகடலை வாங்கிக் கொடேன்

மெல்லப் பயம் நீங்கி விழிகளை ஏறிட்டேன் புருவம் அற்ற விழிகள்

விழிகளுக்கு முன்னால் அந்த 3 பைசா நாணயம் நின்று கொண்டிருந்தது. விழிகளின் மொழி, ரூளால்ல்லை விழியின் மொழி புரிய ஆரம்பித்த முதல் தருணம்

இ;துதான். ஆம் இ;ப்போ பேசிக் கொண்டிருந்தது விழிதான். அந்த விழி ஒரு முழு மனிதமாகவே காட்சி தந்து கொண்டிருந்தது ஆச்சர்யம் தந்தது விழி பேசியது என் பேச்சு கேட்டது விழிகளுக்கு, விழி நீட்டி காசு தந்தது , விழியாலேயே பெற்றுக் கொள்ள விழைய, விழி பார்க்க மட்டும் முடியும் எனபது போய் எல்லாமாகி இ;ருந்த விழி.

குமார் என்றழைக்கப்பட்ட மாமா வந்து கதவைத் திறக்க அதிர்ச்சி காத்திருந்தது. விழியையே ஒரு ஜீவனாக அதுவரை தரிசித்திருந்த என் விழிகள் உள்ளிருந்த உண்மையை ஒப்புக் கொள்ள மறுத்தது. எலும்பும் தோலுமாக, உடைகள் ஏதுமின்றி, அதற்கான உணர்வுகள் ஏதுமின்றி இ;துவரை பேசிய விழிகளுக்கும் , விழிதனின் இளமைக்கும் சம்பந்தமில்லாத உருவம் முதன் முறையாக ஒரு மனிதரை ஆடையின்றிப் பார்த்த மனதுக்குள் பாய்ந்திருக்க உறைந்திருந்தேன் நான் வாசலோடு. உள்ளே சென்றிருந்த மாமாவும் ஆச்சியும் எல்லாம் சகஜமாக எடுத்தபடி உள்ளே போயிருக்க கொஞ்ச நேரம் முன் வரை நான் பார்த்திருந்த இளமை விழிகளைத் தேடியபடி செய்வதறியாது நின்றிருந்தேன்.....மனிதனின் உயிர்ப்பு மொத்தமும் விழிகளில் தேக்கி வைக்கப் பட்டிருக்க, விழிகளில் எனக்கு காதல் பிறந்திருந்தது

உள்ளே வாம்மா

மாமா அழைக்க போவதா வேண்டாமா , தரையோடு தரையாகக் கிடந்த உருவத்தைத் தாண்ட முடியுமா பயம் பற்றிக் கொள்ள, அதற்குள் மாமா சேலை எடுத்து அவர் மேல் போட்டு மூட முயற்சிக்க, ஒரு மகன், அந்த நிமிடம் தாயாகி நின்றதும், தாய் குழந்தையானதும், உறவுகளை நாம் என்ன தான் தீர்மானித்து வைத்திருந்தாலும்,

நம்மிடையே ரூளால்ருக்கும் மனிதம், உருவாக்கும் உறவுகள் எத்தனை வித்தியாசமானவை. நம்மால் தீர்மானித்து வைத்திருந்தவைகளை சிதைக்கக் கூடியவை. அந்த சிதைவுகளும் கூட சுகமானவை....

என்ன சித்தி செய்ய எத்தனை செய்தாலும் மேலுக்கு அவங்க ஒண்ணும் போட்டுக்கிறதில்லை.சொல்லி முடித்த வினாடிகளில் எறியப்பட்ட சேலை மாமா

முகத்தில் வீழ்ந்து கைகளில் வழிய

அக்கா பலகாரம் சாப்பிடுக்கா

ஆச்சி அன்போடு உபசரிக்க அதை அவுங்க வாங்குகின்ற இ;டைவெளியில் நான் விலகி ஆச்சியிடம் போய்ச்சேர எத்தனிக்க என ;இ;டம் பெயரல் அவருக்குள்

என்ன செய்ததோ தெரியலை. என்ன நடக்குதுன்னு நான் யோசிக்குமுன் தூரப்போய் விழுந்தேன். என் கண்களுக்கருகில் பாதவிரல்கள்.ஒரு நிமிட யோசனையில் தான் நான் எங்கிருக்கிறேன் என்று புலப்பட்டது. அடுத்து யோசித்தேன் என்ன நடந்தது?.மாமா தூக்கி விட முயல,

ஆச்சி அடி பட்டிருச்சாப்பா

என கேட்க மனதுக்குள் நடந்தது ஓடியது. நான் உள்ளே வர முயலவும் பெரிய ஆச்சி எத்திவிட விழுந்திருக்கிறேன் கால்களுக்குள். பயங்களோடும் பிரமிப்போடும்,கொஞ்சம் முன் வரை கைகளாகவும் வாயாகும் இ;ருந்திருந்த விழிகளை நிமிர்ந்து பார்த்தேன். பார்வையின் வலு எனக்கு விழுந்த உதையின் வலியில் தெரிந்தது. விழிகளை விடுத்து முதல் முறையாக கைகள் நீண்டன.

இந்தா பலகாரம் சாப்பிடு

வாங்க நெருங்க பயந்த எனைப் பார்த்து விட்டு

நான் எத்துன பிள்ளைக்கு கொடு.

அதட்டலோடு நீட்டப்பட்ட பலகாரம். நடுங்கிய விரல்களோடு வாங்கியதை வாயில் போடத் தோன்றாது விரல்களுக்குள் பத்திரப்படுத்த , விரல்களில் பிசுபிசுப்பு

சரி போவமா? சித்தி.

மாமா கேட்க கதவைத் தாளிட்டு வெளியே வர , கதவுக் கடியில் மீண்டும் விழிகள் எல்லாமுமாய் மாறியிருந்தன.. இ;து எனக்குள் நுழைந்த முதல் விழிகள்.தொடர்ந்து என்னுள் விழிகள் பதித்த சுவடுகள் காலம் வந்து அலைகளாய் கழுவிச் செல்ல நினைத்தாலும் அழியாத தடங்களாய்.....

ஆச்சியின் சுருங்கிய தோல்கள் , கிள்ளக் கிடைத்த சைகள் மறந்து

போயிருக்க, மறக்காது நின்ற ஸ்பரிசங்கள்... ஆச்சி, எங்கள் வீட்டுக்கு முன்புறம்நட்டு வைத்து விட்டு போயிருந்த மாஞ்செடி கையூன்றி வேரூன்றி வருகிற மாசியில் மரம் தழைக்க மழை பெய்து விட்டால் சிம்போடு பூவும் விட்டு , கடந்து சென்ற காலங்களில் நமக்கென்று எஞ்சி நின்ற கனிகளை தந்து விட்டு போகக் கூடும் காற்றில் சலசலத்து மரம் சிரிக்க, என் கையிருந்த குடத்து நீர் சிரித்த படி வேரில் விழுந்தது.. எல்லாரும் ஒரு நாள் எனைப்போல் குடத்துள்ளிருந்து வெளியே வீழ்ந்து மண்ணில் கலந்து வேரில் நுழைந்து, பூவாகி மனமாகி, கனியாகி ருசியாகி , ஏகாந்தமாக வேண்டுமென சொல்லிச் சிரிக்க அந்த மூன்று காசும், விழியும், மல்லிகைப் பூ கேட்கும் குரலும் மனசுக்குள் நின்று போக , காலங்கள் கரைகின்றன. ஆடித்திரிந்த காலங்கள் மறைந்து , பயந்தடங்கிய

காலங்களும் மாறி பாதை தேடத்துவங்கும் பருவங்கள் வந்தன. இன்னமும் கருவேலஞ்செடிகளும் எருக்கஞ்செடிகளில் பட்டுக் கூடுகளூம் மட்டும் மாறாது. கல்லூரி விடுதிகள் நோக்கி பறக்க ஆரம்பித்திருந்த காலமிது. அடுத்த வாரம் கிளம்புவதற்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அன்று வீட்டுக்கு வந்தார். உடல்தனில் குறைந்து போன கம்பீரம் குரல் தனில் நிலைத்திருந்தது.. கூடத்திற்கும் வாராந்தாவிற்கும் இடையில் நின்றவர் அழைக்க நான் வேலையை போட்டு விட்டு யாரென்று பார்க்க வந்தேன். வேட்டி , சட்டை, நரை விழத் துவங்கியிருந்த வயது, யாரென்று தெரியவில்லை, இல்லை பார்த்திருக்கிறேன். நினைவு வரவில்லை . எட்டாத நினைவுகளோடு நானிருக்க,

அம்மா இல்லையாடா

கேட்டபடி உள்ளே வந்த படி சொன்னார்.

நான் குமார் மாமாடா, அம்மா இருக்காங்களா?

பொட்டில் அடித்தமாதிரி ஏதேதோ குறிப்பாய் நினைவுக்கு வர

கூப்பிடுறேன் மாமா. உட்காருங்க.

இன்னமும் நினைவு வராதவளாக சம்பிரதாயமாக சொல்லிப் போனேன். பெயர் மட்டும் தெரியுமே என்று உணர்த்திக் கொண்டே இருக்க, தெளிந்திருந்த குட்டையின் அடியில் முழ்கியிருந்த விசயங்கள் மேலெழும்பின. அவர் குரல் குழப்பியிருந்தது. இந்தக்குரல்.. இந்தக் குரல்.. நினைவுகளின் ஆழத்தின் நுனி எடுக்க முடியாது யோசனைகளோடு நடந்தேன். அம்மா பின் கட்டில் வேலையா இருக்க வேகமாகப் போகும் எண்ணம் மனதிருந்தும் கால் நடக்க மறுத்தது, நினைவுகளில் கனங்களோடு. மோதிக் கொண்டதுணர்ந்த போது தான் அம்மா இருக்குமிடம் வந்திருப்பது தெரிய,

என்னாம்மா முழிச்சு கிட்டே வந்து மோதுற.

மேலும் கீழுமாய் அம்மா பார்க்க

குமார் மாமா வந்திருக்காரும்மா.

இதோ வருகிறேன். அம்மாவிடம் அவசரம் தொற்றிக் கொள்ள, அரைத்திருந்த மசாலாவை அடுப்படியில் வைத்து விட்டு ஓட்டமும் நடையுமாய் வந்தாள் அம்மா.

வாங்கண்னா, நல்லாயிருக்கீங்களா

நல்லாயிருக்கேம்மா

அண்ணி பிள்ளைகள் எப்படி இருக்காங்க

எல்லா நல்லா இருக்காங்க. இது நம்ம பாப்பாவாடா

எனைப் பார்த்து கேட்க நான் இன்னமும் எங்கு பார்த்திருக்கிறேன் அறிய முடியாது குழம்பியபடி சே. அம்மாவிடம் யாருன்னு கேட்காம போனோமே, யோசனையோடு தண்ணி எடுத்து வந்து வைக்க

அண்ணிக்கு இப்பதான் அப்பாடான்னு இருக்கும்

அம்மா சொல்லமாமா தண்ணி தம்ளருக்குள் தேடிய படி பேசினார்.

ஆமா அவளும் அழுத்து போயிட்டாள்ல, அம்மாவை கடைசி காலத்தில சமாளிப்பது கஸ்டமாயிட்டது

ம்..ம்.. இப்பதான் நினைவுக்கு வருது. ஆச்சியோட விரல் பிடித்துப் போன நினைவுகள் வந்தலை மோதின..

பெரியாச்சி ....

அம்மாவுக்கு வருகிற ஞாயிறு சாமி கும்பிடரோம்பா, வந்திடுங்க, மாப்பிள்ளை எங்கே? . சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன்

ஏதேதோ இருவரும் பேசி வருத்தப் பட்டார்கள், நிம்மதி பெருமூச்சு விட்டார்கள், மகிழ்ந்தார்கள் எதுவுமே எனக்குள் நிற்காது விழி வந்து முன்னாடி நின்றது.

ஞாயிறு எல்லாரும் பயணமானோம் ஆச்சி சாமி கும்பிடுதலுக்கு.

மாமா வந்து சொல்லி போனதிலிருந்து மனசு கனத்து கிடந்தது ஏன் இப்படி ஆனது ஆச்சிக்கு? கேள்வி அரிக்க, அம்மாவிடம் கேட்டுப் பார்த்தேன். அம்மாவுக்குள் இதுவரைக்கும் அதுமாதிரி கேள்விகள் ஏன் இல்லாதிருந்தது என்று கூட ஒரு கேள்வியும் சேர்ந்து கொண்டது

எனக்குள் தெரியலைம்மா, எனக்கு விபரம் தெரிஞ்சதிலிருந்து இப்படித்தான்

இருக்காங்க.

அம்மாவுக்கு அதற்கு மேல் ஆர்வமில்லை. பயணம் சீக்கிரம் முடிந்து போனது. எனக்குள் இருந்த கேள்வியின் நீளங்களால்.

ஆமாம் பயணம் என்றால் எப்போதும் உல்லாசமாய் கழியும் என் பொழுதுகள் இந்தமுறை ஒரு வித அழுத்தங்களோடு பயணித்தது அழுத்தமான மௌனங்கள் .இல்லை

இல்லை அது என்ன மௌனம்.. .. மனக் கேள்விகளின் பேரிரைச்சல் . பதிலுரைக்க முடியாது திகைத்துக் கொண்டிருந்தேன். எல்லாரையும் போல ஏன் ஆச்சியால

சந்தோசமா வாழ முடியலை? ஏன் வாழ முடியலை என்கிற கேள்விகள் ஏன் என் அம்மா போன்றவர்களுக்குள் எழும்பாமல் போனது. .சே… ஒரு கேள்விக்கும் பதில் தெரியலை.மனத்தில் ஒரு இயலாமை சூழ சன்னலில் பார்வை நிலைத்திருந்தது முகத்தில் வீசும் காற்று முடியை கலைத்துப் போட கைகுட்டை எடுத்து முடிகளை ஒன்று சேர்த்து கட்டினேன் தூங்கியிருபேனோ? விழிப்பு வந்த போதுதான் தூங்கியிருந்தது தெரிந்தது.ஊர் வந்து சேர்ந்திருந்தோம் பேருந்து நிலையத்திற்குரிய இரைச்சல், மெல்லிய நாற்றம் கண் விழிக்குமுன்னரே புலன்களை வந்தடைந்திருந்தது இறங்கி ரிக்ஷா பிடித்து குமார் மாமாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீடு நெருங்கவும் ரிஷாவை நிறுத்தி இறங்கி கூலி கொடுத்து அனுப்பி விட வீட்டுக்குள் உறவினர்கள் கூட்டம் இருந்தது..சேலையை உதறி முந்தியை செருகி அம்மா தனை தயார் செய்து கொண்டார்.அம்மாவின் பார்வை என் மேல் விழ பல் மெல்ல கடிபட்டது. உள்ளிருந்து வார்த்தைகள் எனக்கு மட்டும் காதில் விழும் படியாய்

தலைல கட்டியிருக்கிற கர்சீப்பை அவுருடீ. ரௌடி மாதிரி இருக்கு

உள்ளிருந்து மாமா வாசலுக்கு விரைந்து வர அவர் வருவதற்குள் அம்மா உதிர்த்த அவசர வார்த்தைகள்.ஒரு கையால் தலையை கோதுவது போல் சடையை

கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்தேன். கண் முன்னிருந்த வீட்டுக்குள் கவனம் இருந்தது இது பெரியாச்சி வாழ்ந்த வீடாம். மன நிலை சரியில்லைன்னப் புறம்தான் மூடிய அந்த சின்ன வீட்டுக்குள் அடைத்திருக்கிறார்கள். ஆச்சி எப்படியெல்லாம் அந்த வாழ்க்கையை நேசித்திருப்பாள் காலங்கள் போன பின்பும் குழையாதிருந்த பழமை சொன்னது. செருப்பை கழற்றி உள்ளே நுழைந்தோம்,. திண்ணையிட்ட வீடு. திண்ணை கம்பிகளால் மறைக்கப் பட்டு பச்சை நிற வர்ணம் அடித்திருந்தார்கள். இப்போ இந்த வர்ணம் யாரும் அடிப்பார்களா சந்தேகம் தான். வீடுகள் பூராவும் உறவுகள் சிரித்திருக்க, அந்த காலத்து பூக்கள் தரை அவர்களை விட அழகாய் சிரித்தது. பிரிந்த உறவை சாக்கிட்டு இருக்கின்ற உறவுகள் சேர்ந்திருந்தன. நடுக்கூடத்தில் ஆச்சி படம் மாலையிட்டு விளக்கேற்றி படையல் வைக்கத் தயாராக. என் மனதில் நின்று போன ஒடிசலான கன்னங்களோ வயோதிகத்தை எழுதிய தோலோ படத்தில் இல்லை கருப்பு வெள்ளையில், வெளிறிய நிறத்தில் ஜாக்கெட் சாம்பல் நிறத்தில் மடிப்பு வைத்து கட்டாத சேலை , பிண்ணணியில் பெரிய மாடங்களுடன் கூடிய கட்டடங்கள், வரைந்திருக்கிறார்கள் படத்தை என்று உணர்த்திய போதும், கண்கள், ம் நான் பார்த்த பேசிய விழிகள் என்று எனக்குள் உணர்த்த இப்போதும் அந்த விழி எனைப் பார்த்தது மூன்று காசு நீட்டி மல்லிபூ கேட்குமோ.நினைவு உதறி எல்லாருக்குள்ளும் ஐக்கியமானேன் கூட்ட இரைச்சலில் இருந்தும் ஏதோ தனித்து நின்றிருப்பதாய் இருந்தேன். கூடம் தாண்டியிருந்ததும் முற்றம். மேலே கம்பியிட்டு வெயில் உள்ளே வந்து கொண்டிருந்தது. பழைய வீடு புதிய நாகரீகத்திற்குள் புகுத்திக் கொண்டிருந்தது. இருந்தும் பழமையின் வயோதிகம் எத்தனை மறைக்கப் பட்டிருந்தாலும், அழகான உணர்வோடு தெரிந்தும் கொண்டிருந்தது. சுவரெங்கும் ஆச்சியின் திருமண புகைப்படம் , சந்ததிகளின் கல்யாண புகைப்பட வரிசைகள் வரிசையாக இருந்தது .எல்லாப் படங்களிலும் மனிதர்கள் புகைப்படங்களுக்கான சிரிப்பை ஏந்தியிருந்தார்கள். ஆச்சிக்கு ஏன் இப்படி னது எனக்குள் கேள்வி இன்னமும்

எனக்குள். ஆச்சியோட பிள்ளைகள் எல்லாரும் வந்திருந்தனர். குமார் மாமா எல்லாரையும் வரவேற்பதும், வேலைகளை தன் மகனுக்கு உத்தரவிடுவதுமாக

இருந்தார்.

நடுக்கூடத்திலிருந்து படிக்கட்டுகள் மாடிக்கு போனது. மாடி பலகடைப்பாக இருக்க,

அந்த காலத்து வீடு தந்த ஆர்வம் மேலே தயக்கத்தோடு ஏறினேன். பலகடைப்பு தாண்டி உள்ளே ஒரு மச்சு மிகச் சிறிய இருட்டான அறை. எதிர்த்திருந்த சன்னலிலிருந்து சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது கீற்றாய் விளக்கு பொத்தானை நான் தேடித் தொட அறை வெளிச்சத்திற்கு வந்திருந்தது. பழைய சாமான்கள் அறையெங்கும். மெத்தைகள் தலையணைகள், ஒரு பெரிய பித்தளை அண்டா, நிறமிழந்து கறுத்துப் போய் இருக்க அதனுள் சின்ன சின்ன சில பித்தளை சாமான்கள், இன்று உபயோகத்தில் காண முடியாத சாமான்கள் அவை. சுவருக்குள் பதிந்திருந்த சின்ன மர அலமாரி. மெல்லத் திறந்தேன். புத்தகங்கள் என்ன புத்தகங்கள் ,வரிசையாக பார்க்க உள்ளே ஒரு சின்ன குறிப்பேடு, சிட்டை புத்தகம் இருக்க திறந்து பார்த்தேன் நடுங்கும் விரல்களோடு யாரோ எழுதியிருந்தார்கள். தேதி 28.3.50 என்று இருக்க ஆர்வம் தொற்றிக் கொண்டது எனக்கு.. காலை 200 மாலை 400 என்று பால்கணக்கு இருக்க. ஆச்சி எழுத்தோ? கேள்வி மனதுள்.தொடர்ந்து திருப்ப அழிந்த சில எழுத்துக்களோடு சில வரிகள் வாசிக்க கிடைத்தன

மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை

அழகு தங்க மாப்பிள்ளை

அழிந்திருந்த சில வரிகள் தொடர்ந்து

யானை மேல ஏறச் சொன்னா

பானை மேல ஏறுவாரு

ஓடும் ஆத்தில குளிக்கச் சொன்னா

ஓணானை தேடி திரிவாரு

பாடல் வரிகள் தொடந்து நான் திருப்ப, நோட்டு முழுவதும் எழுத்தால் நிரப்பப்பட்டு இருந்தது. ஒரு வேளை என் கேள்விக்கு இதில் விடை இருக்குமோ? ஆரம்ப பக்கத்தை தேடினேன்

என்னால இனி தாங்க முடியாது

என்று ஆரம்பமாயிருந்த முதல் வரியே நெஞ்சில் குறு குறுப்பு தர மெல்ல வெளியே எட்டிப் பார்த்தேன்.கீழே ஒரே சிரிப்பும் பேச்சும், அவசரங்களுமாய் இருக்க மீண்டும் அறைக்குள் ஒரு துணி மெத்தை மீது வெளிச்சம் நன்கு படும்படி அமர்ந்து கொண்டேன் வாசிக்க தொடங்கினேன்.

என்னால் இனி தாங்க முடியாது . மனசு கிடந்து தவிக்குது. யார் கிட்டேயும்

இது பற்றி பகிர்ந்துக்கிட முடியாது. ரெண்டு நாளா ஒரே அழுத்தம் நெஞ்சுக்குள். ஒரு

பிராண்டல் .குளிர் காய்ச்சல் போல் அடிக்கடி தூக்கிப் போட்டது உடம்பு. கோவத்தில்

பிள்ளைகளிடம் கத்தியிருக்கிறேன் தப்புன்னு தெரிஞ்சும். மனசுக்குள் ஒரே அல்லாட்டம். திரும்ப திரும்ப பழசை ஏன் நினைக்கிறேன்னு கேக்கிறாரு அவரு. மறக்க கூடிய விசயமா அது. மறக்க முடியலைங்கிறது எவ்வளவு கொடுமையான நிஜம். அவருகென்ன லேசா சொல்லிட்டு போயிடுராரு. பாதிக்கப் பட்டது

நானில்ல. எவ்வளவு முரண்பாடு தப்பு செய்த அவருக்கு ஒருவித பாதிப்பும் இல்லை. ஒரு ஆணின் தவறு எவ்வளவு பெரிய பாதிப்புகளை பெண்ணுக்குள் நிகழ்த்துகிறது. அந்த ஆணை சார்ந்து இருக்க நான் பழகியிருப்பதாலா, அவரின் தவறுகள் என்னை ஏன் பாதிக்கிறது.. யோசனைகளில் கிறுகிறுக்கிறது என்னிக்கும் போல அன்னிக்கும் நான் ஏன் தூங்கியிருக்க கூடாது. தூங்கியிருந்தா இந்த மன உளைச்சலுக்கு நான் ளாயிருக்க வேண்டாமில்ல. என்னைக்குமில்லாம அன்னைக்கு ஏன் முழிச்சிட்டு இருந்தேன். ஒரே வயிற்று வலி அன்று. வேறொரு சமயமா இருந்தா இந்த மாதிரி நேரங்களில் ஆழ்ந்து தூங்கி விடுவேன்.. கீழ் வீட்டுல அத்தை மாமா தூங்கி ரொம்ப நேரமாச்சு. இன்னமும் அவர் வேலை முடிச்சு வரலை வந்திடுவாருன்னு கொஞ்ச நேரம் படுக்கைல புரண்டு பார்க்கிறேன். தூங்கவும் முடியலை. காத்திருப்பின் எரிச்சலும் வயிற்று வலியும் எழுப்பி விட எழுந்து கூடத்திற்குள் இறங்கும் படிக்கட்டில் வந்தமர்கின்றேன் கீழே போனா அத்தை எழுந்துகிடுவாங்க. பிறகு தூங்குமா அவன் வந்திடுவான்னு வற்புறுத்துவாங்க. அவங்களை எழுப்பி விட்டுடக் கூடாதுன்னு படிக்கட்டுலேயே அமர்கின்றேன். காத்திருக்கிறேன். மனி 10.30 வலி தாங்காது முழங்காலில் தலை வைத்து படுத்தபடி , கால்களை இறுக்கிக் கொள்கிறேன். ஏதோ ஒரு சலனம் காதுகளில் விழ, என்ன சத்தம் யோசிக்கலானேன். சமையல் கட்டு இங்கிருந்து பார்க்க நன்கு தெரிந்தது. அதன் கதவில் என் கண்கள் நிலைத்து திரும்பியது. .திருப்பி மேலே பார்த்தேன். குழந்தை ஆடாது கட்டிலுக்கு பக்கத்தில் இட்ட தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான்.தொட்டில் அடியைப் பார்த்தேன் . இன்னமும் நனைக்கவில்லை.பிறகு சத்தம் எங்கிருந்து.திரும்ப சமையல் அறைக்கதவில் என்கண்கள் தானாகவே போய் நிற்க, கதவு மெல்லத் திறந்து சத்தம் வராது சட்டென மூடியது. நிஜமா, பிரமையா, யோசிக்கு முன் வெள்ளை நிறம் கதவு இடைவெளியில் இருந்து மெல்ல தன்னை உள்ளிழுத்துக் கொண்டது. படபடவென்று நெஞ்சு அடிப்பது என் காதுகளுக்கு முரசோசையாக கேட்டது. கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது . வேகமா எழுந்து ஓடி கதவைத் திறந்து கை தானே விளைக்கப் போட, அவரும் வேலைக்காரியும். மூவரும் உறைந்து போய் நிற்க.

தண்ணி கேட்டு வந்தேன்

மெல்ல அவர் பேச்சை இழுக்க

சரி மேலே போங்க..

என்னிடமிருந்து தெறித்து விழுந்த வார்த்தைகள். சடாரென வெளியேறி அவர் மேலே போயிருந்தார். வேலைக்காரியோ குனிந்த படி நின்றிருந்தாள். நல்ல காரியம் செஞ்சிருக்கே சொல்லி விட்டு, நானும் படியேறினேன் வேலைக்காரி காரணம் சொல்லாது நின்று விட்டிருந்தாள். இப்போ மூன்றாவது குழந்தை தொட்டிலில். மாமா போன வருடம் போயிட்டார். இன்னமும் அன்னைக்கு என்ன நடந்தது, ஏன் நடந்தது அவர் மனம் திறந்து பேசலை. கேட்டு நான் செய்யப் போவதென்ன.. நானும் கேட்டுக்கலை. ரெண்டு நாள் நான் கொடுத்த தனிமை பொறுத்துக் கொள்ள முடியலையா? ஏன் ஏன் ன்னு எனக்குள்ள யிரம் கேள்விகள். வயது 40 ஐத் தொடவும், உறவுகளில் இருந்த ஆர்வம் குறைந்து போயிருந்தது. வயது காரணமா ஆர்வமில்லைன்னு தெரிஞ்சாலும் மனது கிடந்து கஸ்டப்படுது. ரெண்டு நாள் பொறுத்துக் கொள்ளாதவருக்கு இப்பொ எனை தொடந்து உதாசீனப்படுத்துவது எப்படி சாத்தியமாயிற்று. எப்படி சொல்ல , எப்படி பேச , எங்களுக்குள் உறைந்து போயிருக்கிற ஒரு கறுப்பு பிரதேசம் சமீப காலமா மிக அழுத்தமா எங்க இரண்டு பேருக்கிடையில் அமர்ந்திருந்தது..

உதாசீனங்களையும் தாங்க முடியாது, நெருக்கத்தையும் தவிர்க்க முடியாது, சமீப

காலமா மனசு குழம்புது. தாங்காம எழுதுறேன்..

அதற்கு மேல் சில பக்கங்கள் காணாமல் போயிருந்தன. எழுதவில்லையா? ஆச்சியே கிழிச்சிடாங்களா? தானா அழிஞ்சதா? இல்லை தாத்தா கிழித்திருப்பாரோ? கீழே இருந்து குரல் கேட்டது சாமி கும்பிட வாங்கன்னு எழுந்தேன் வேகமாக. அந்த சிட்டைப் புத்தகம் என் முந்தானை மடிப்புக்குள். இழுத்து நான் செருக எனக்குள் புதைந்து கொண்டது. லைட்டை நிறுத்தி வெளியேற மோதிக் கொண்டேன் குமார் மாமாவின் பையன் எனை விட ஒன்றிரண்டு வயது மூத்தவராக இருக்கலாம். மோதிய வேகத்தில் நிமிர்ந்தேன் இருட்டுக்குள்ள என்னா செய்யுறீங்க? கேட்டபடி விளக்கை போட்டு பித்தளை அண்டாவிலிருந்து அரிவாளை எடுத்து

சாமி கும்பிடப் போறாங்க. வாங்க கீழே

சொல்லியபடிக் இறங்க நானோ அந்த விழிதனில்; நிலைத்திருந்தேன். விழி மல்லிப்பூ கேட்டு காசு நீட்டியது. ஊர் வந்திருச்சு எழுந்திடுமா . அம்மா எழுப்பி விட பதறி அடித்து எழுந்தேன். முந்தானையை மட்டும் விட மனமில்லாது. அதற்குள் சிட்டை புத்தகம் இல்லை. ஒரு வேளை போகும் வீட்டில் அது கிடைக்குமோ? மீண்டும் கேள்விகள்…. பதிலில்லா கேள்விகள்..

ரெண்டு விழிகள் மட்டும் சிரித்தது கண் முன்னால் பதில்களாய்

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

கவிதை :பாட்டி கதை

-திலகபாமா: சிவகாசி-
வடை சுட்ட பாட்டி இறந்த பின்னும்

கதை சொன்ன முப்பாட்டனுக்கப்புறம்

மூணு தலைமுறை கல்லூரி போன பின்னும்

இன்னும் கண்ணில் படுகின்றன

காகங்கள் வடையோடும்

காலடியில் பல நரிகளோடும்



காகம் மனம் திறந்து

பாடும் கானம் சுகந்தமென்று

காத்திருப்பதாய்

எச்சில் ஒழுக நரிகள் கதைக்க

வடை பறிபோகும் பயத்தில்

கால் மாற்றியும் அலகு மாற்றியும்

நரிகளுக்காய் பாடித் தொலைக்கும் காகங்களை

முட்டைக்குள் சிறை இருக்கும்

நாளைய காகங்கள் கேலி செய்கிறது

இத்தனை பிரயத்தனங்களோடு

நரிகளுக்கேன் நம் கச்சேரி என்று



திறக்கின்ற பாடல்களின் போது

வடைகளோடு காகமும்

விழுந்து விட வேண்டுமென்ற

பிரார்த்தனைகளோடு நரிகளும்

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

எழுத்து வன்முறை

-திலகபாமா (mathibama@yahoo.com)-

தீவிர இலக்கியம் , சிற்றிதழ்களில் இலக்கியம் என்ற பெயரில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது?. இந்த வார்த்தைகளை சொல்பவர்கள் இலக்கியமாக எதை நிறுவப் பார்க்கிறார்கள்? “ காலச் சுவடுக்கு கண்டனம்” தெரிவித்த அதே மாதத் தொடர்ச்சியில் உயிர்மையில் கட்டுரை, புதிய பார்வையில் அதே தினுசில் கவிதை கள் தொடர்ந்து கைக்கு வந்த சில கவிதைத் தொகுப்புகள் யவனிகா ஸ்ரிராமின் “ கடவுளின் நிறுவனம்,” இன்று என் கைகளில் கிடைத்த “புது எழுத்து” என எல்லா பத்திரிக்கைகளுமே பின் நவீனம் என்கின்ற பெயரிலும் நவீனம் எனும் பெயரிலும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

வார்த்தைக்ளுக்குள்ளும் வார்த்தைகளில் வழிய விட்ட வக்கிரங்களோடும் இருக்கும் எழுத்துகளையே பிரசுரித்து அதன் பத்திரிக்கை போக்கை தீர்மானிக்கின்றனவா? இல்லை இலக்கியங்களில் பாதைகளையே தீர்மானிக்கின்றனவா?

உனக்கேன் அக்கறை? சூழ இருக்கும் நண்பர்களின் அறிவுரை கேட்கிறது எனக்கு உனது சக்தியை விரயம் செய்ய வேண்டாம் காலம் தீர்மானிக்கும் எது நல்ல இலக்கியமென்று?

காலம் தீர்மானிக்கும் உண்மைதான் . அந்த காலத்திற்கு நாம் தந்து விட்டு போவது தான் என்ன? நூறு ஆண்டுகள் கழித்து பாரதியை படித்து மகிழ்கின்றோம்.. அவனது வார்த்தைகளின் வழி அந்த கால போராட்ட வாழ்வை சிந்திக்கின்றோம். பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த காப்பியங்கள் , சங்க இலக்கியங்கள் வாயிலாக நாகரீகங்களை, வாழ்வியல் முறைகளை உணர்ந்து கொள்கின்றோம் அதே உணருதல்களையும், பெருமையையும் சொல்லும் படியாக பல தலைமுறை கடந்தும் வாசிப்பவர்கள் நினைத்து சிந்திக்கும் படியாக, இந்த எழுத்து இருக்குமா? எல்லா காலத்திலும், அந்த அந்த காலத்தில் இலக்கியம் எதுவென்று தீர்மானிக்கின்ற அளவு கோள்களும், விமரிசகர்களும் இருந்த படியே தான் இருந்திருக்கின்றனர் . எல்லா எழுத்துகளும் இலக்கியமாக அரங்கேறி விட முடியாது.

யாருக்கும் எதுவும் எழுத உரிமை உண்டு தான் . யார் கையையும் பற்றி எழுத விடாது செய்து விட முடியாது தான் ஆனால் எழுத்து என்று வந்து அச்சுக்கு வந்த பின் விமரிசிக்க நிராகரிக்க அதே அளவு உரிமை வாசகனுக்கும் சமுதாயத்திற்கும் உண்டல்லவா?

ஒடுக்கப் பட்ட மனிதனின் வலியும் வாழ்வும் இப்படித்தான் இருக்கின்றது, ஆகவே அதன் வழி வந்த எழுத்து இப்படித்தான் இருக்கும் என்று சொல்பவர்களுக்கும் ஒரு வார்த்தை.

ஒடுக்கப் பட்ட மனிதன் , சாதி சார்ந்தோ, பால் சார்ந்தோ இருப்பினும் , யாருக்கு கஞ்சிக்கு போராடும் வாழ்வு விட்டு காமத்தின் பின்னால் செல்ல நேரமிருக்கின்றது. நடுத்தர வர்க்கமோ, மேட்டுக் குடியோ எல்லாத்திலும் வலியவன் ஆதிக்கம் செலுத்துவதும், எளியவன் தாழ்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் விடயங்களே. உணர்வு தளத்தில் மனிதன் ஆதிக்க மனோபாவங்களை தொலைக்க வேண்டி செயல்படுவதும் அதற்கு தேவையான கருத்தாக்கங்களை உருவாக்குவதும் தான் இலக்கியத்தின் தேவையாக இருந்து வந்திருக்கின்றது.. ஆயிரத் தெட்டு உணர்வுப் பிரச்சினைகளின் நெருக்கடியில் நௌ¤ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு மீண்டு வருவதற்கான வழியைப் பேசுவதை விட்டு உணக்கான இலக்கியம் இது. உனக்கான வார்த்தைகள் இவை என்று இலக்கியத்திலும் அவர்கள் மேலே வந்து பொது நிலையில் கலந்து விட விடாத போக்கு தான் நிலவிக் கொண்டிருக்கின்றது.

இன்னமும் சொல்லப் போனால் இவர்கள் மேலே வந்து விட்டால் போராடுவதாய் பாவலா காட்டி பணமும் புகழும் சேர்க்க நினைக்கும் கூட்டத்திற்,கு வேலை இல்லாமல் போய் விடும் எனும் பயம் இவர்களுக்கு இருக்கின்றது.

பாலியல் வார்த்தைகளை வக்கிரங்களாக வெளிப்படுத்தும் கலாப் பிரியா தொடங்கி( பெண்ணுறுப்பை சொல்லும் வார்த்தைக்கு , கருப்பை என்று அர்த்தம் கொள்கிறாராம். இவரது தற்போதையை தொகுப்பான வனம் புகுதலிலும் , நெடுகிலும் இதே வார்த்தைகள். நல்ல நவீனம் தான். ஒரு முறைதான் நிகழும் அற்புதம் கலாப் பிரியா எனும் அடை மொழி வேறு ) யவனிகா ஸ்ரீராம் , அன்பாதவன், கண்டராதித்தன், ப்ரேம்-ரமேஷ் லஷ்மி மணி வண்ணன் , சங்கர ராம சுப்ரமணியன், ஜீ. முருகன், இவர்களை வளர்த்து விடும் காலச் சுவடு, உயிர்மை, புது எழுத்து, ஆசிரியர்கள் இவர்கள் எல்லாம் தங்கள் பெண் குழந்தைகளின் முன், மனைவியின் முன் உரத்து இந்த எழுத்துக்களைப் படிக்க இயலு,மா?

நக்கீரனும் சங்கப் பலகையும் இல்லாத காலத்தில் எது எழுதினாலும் இலக்கியம் என்று ஆகி விடுமா? காலம் தீர்மானிக்கின்ற போது தீர்மானிக்கட்டும். வாழும் காலத்தில் எது இலக்கியம் என்று நாம் ட்தீர்மானிக்க வேண்டாமா? டூன்றைக்கு விமரிசகர்கள் ஒன்று பேராசிரியர்களாகவோ? அல்லது அந்த அந்த குழுவைச் சேர்ந்த ஒரு சிலராகவோ இருக்கின்ற பட்சத்தில், இலக்கியம் எதுவெண்று அடையாளம் காட்டக் கூடிய விமரிசகர்கள் போய் சிலரைத் தூக்கவும், பிடிக்காதவர்களைப் போட்டு உடைக்கவும், மௌனங்களை எதிர்ப்புகளாய் சொல்பவர்களி ன் மௌ நங்கள் சம்மதமாய் முகம் மாற்ரி கண்பிக்க பட்டபடியும் பயன் பட்டுக் கொண்டிருக்கின்றன.

நச்சு இலக்கியம் நசிவு இலக்கியம் என்ற வார்த்தைகளை கொண்டு பேசிய ஜீவாவின் வழி வந்தவர்களோ அவர்களது இயக்கங்களும் கூட இந்த போக்குகளை கண்டு பாராமுகமாகவே இருந்து வருகின்றன.

“ நாச்சார் மட விவகாரத்திலும்”, எம்.ஜி. சுரேஷின் “சிசிஃபல்ஸ்” கதையில் மட்டுமல்ல எழுத்து வன்முறை . ஒரு சமுதாயத்தை , அதன் போக்கை பிரதி பலிக்க வேண்டிய எழுத்து , விதி விலக்குகளை தூக்கிக் கொண்டு பேசுவதும், எல்லா விடியல்களுக்கும் தானே காரணம் என்று கொக்கரிப்பதும் கூடத்தான் எழுத்து வன்முறை.

என் பார்வையில் உண்மையில் இந்த எழுத்துக்கள் எல்லாமே ஒட்டு மொத்தமான இன்னுமொரு விசயத்தையும் சேர்த்தே செய்து வருகின்றன.. பெண்ணை உடல் சார்ந்த பொருளாகவே பார்ப்பதையும், நுகர்பொருளாகவே அவள் உணரப் படுவதையுமே தான் நிறுவிக் கொண்டிருக்கின்றன.” நூறு இளைஞர்களைக்கொடுங்கள் “ இந்தியாவையே மாற்றிக் கட்டுகிறேன் என்பது விவேகானந்தரின் மிக முக்கிய அறைகூவல். ஆனால் இன்று இலக்கிய வாதிகளின் மத்தியில் ஊரறிந்த இரகசியமாக உலவிக்கொண்டிருக்கும் ஒரு கவிஞரும், பத்திரிக்கை ஆசிரியருமான ஒருவரின் அறைகூவல் என்ன தெரியுமா? “ நூறு அழகிய பெண்களைக் கொடுங்கள் , கவிதாயிணிகளாக மாற்றிக் காட்டுகின்றேன் என்பது. இவர் போன்றவர்கள் உருவாக்கிய கவிதாயிணிகள் தான் பெண் உறுப்புகளை எழுதுவதையே கவிதை என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆரம்பத்தில் நெருப்பை நெஞ்சில் சுமந்து எழுதிய ஒரு சில பெண் கவிஞர்களையும் கூட இவர்கள் தன் எழுத்து போக்குகளின் பக்கம் திருப்பி இன்று இவர்களே போட்டு மிதிக்கின்றார்கள் . பாவம் இந்தப் பெண்கள் இவர்கள் கீழே போடத்தான் தூக்குகின்றார்கள். என்று அறியாமல் அவர்களை சார்ந்தே இருக்கின்ற தவறைச் செய்கின்றார்கள் பெண் சுயமாக வெளிக் கிளம்பி விடக் கூடாது. அவள் படுக்கை யறையிலும், அடுப்படியிலும் இருப்பதே சுகம், அதை பற்றியே பேசினால் போதும் என தீர்மானித்து வலை விரித்து வைக்கிறார்கள். ஆக மொத்தத்தில் பெண்ணுக் கெதிரான சதி அவர்களே அறியாமல் நடத்தப் பட்டுக் கொண்டே இருக்கின்றது

மொத்தத்தில் புதிய சமுதாயம், முற்போக்கான விசயங்களை சிந்தித்து விடக் கூடவே கூடாது என்று யாருடைய கைக் கூலியாகவோ சில சிற்றிதழ்களும் சில எழுத்துக் காரர்களும் இயங்கி வருகின்றனர்.

அறியப் பட்ட எழுத்தாளர்கள் கூட புத்தகம் போட்டு விட்டு அதை, கையை கடிக்காத அளவுக்காவது விற்று காசாக்கி விட பிரம்ம பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, இது போல் திசை திருப்பும் எழுத்துக்களைக் கொண்டு வருபர்கள் மட்டும், வழ வழ தாளில் பிரம்மாண்டமாகவும், கெட்டி அட்டையில் அதிக செலவிலும் புத்தகம் போட்டுக் கொண்டிருப்பது எப்படி சாத்தியமாகின்றது. இவர்களுக்கு எங்கிருந்து அதற்கான பண வசதி கிடைக்கின்றது. . நிச்சயமாக அவர்களது சொந்த உழைப்பில் விளைந்த காசில் அவை புத்தகமாகுவதில்லை. யாருடையா காசிற்கோ அவர்கள் விலை போகிறார்கள்

பண்டிகை காலங்களில் கடைகளில் அறிவிக்கப் படுகின்ற தள்ளுபடி எனும் வார்த்தை போல நவீனம், பின் நவீனம், தீவிர இலக்கியம் எனும் எந்த வார்த்தையும் இவர்களில் எழுத்துக்களினால் அர்த்தம் தொலைத்த படியே தான் இருக்கின்றன.

இந்த எழுத்துக் கெதிராக எழுத்து வடிவத்தில் மட்டுமன்றி தீவிர செயல் பாட்டின் மூலமும் களையெடுக்கும் முயற்சியை நாம் தொடங்கியே தீர வேண்டும்.

சிற்ரிதழ்கள் கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் எல்லாவற்றையும் பிரசுரிக்காது, தங்களது பத்திரிக்கைக்கான கொள்கைகளை வடிவமைக்கட்டும். ( காலச் சுவட்டில் எனது கண்டனக் கடிதம் வெளியாகியிருந்த அதே இதழிலும் , எதற்காக கண்டணம் தெரிவிக்கப் பட்டதோ அதே தினுசில் ப்ரேம் ரமேஸின் கவிதை, எதிர்ப்புகளில் குளிர் காய்வதை விட்டு திருத்திக் கொள்ள முயலாத் தனம்)பத்திரிக்கைகளுக்கு விளம்பரமும், பண உதவியும் செய்பவர்கள் அந்த பத்திரிக்கை சரியான விசயங்களை பேசுகிறதா என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கட்டும். . வக்கிரங்களை எழுத்தாக வெளிப்படுத்துபோது எதிர்ப்பை வாசகர்களூம் விமரிசகர்களும் தயை தாட்சண்யமின்றி தெரிவிக்கட்டும், எதிர்ப்பில் குளிர்காய முடியாத வகையில்

வாழ்வில் இருளும் ஒலியும் தான் நிஜம், உண்மையை பேசுகின்றேன் என்பதற்காக இருளை பேசிய படியே இருப்பதை விட இருளை வெல்வதற்கான போராட்டமே வாழ்க்கை. அதை பேசுவதே இலக்கியம் . அந்த இலக்கியம் ஆதிக்க மனோபாவங்களூக்குள்ளும், உத்திகளூக்குள்ளும் சிக்காது உண்மைகளையும் உண்மை உய்ய வேண்டிய வழிகளையும் பேசட்டும். புனிதங்கள் மேட்டுக் குடிக்கு மட்டு மல்ல. எல்லாருக்குமானதாய் உருவெடுக்கட்டும்.

அனுப்பியவர் வெப்தமிழன்

1 கருத்துக்கள்

 

அனைத்து உரிமைகளு&#