www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

ஹெயாருடன் ஸ்-ரீவ் டன்னின் அனுபவங்கள்

முத்தையா முரளிதரனின் பந்துவீச்சுபாணி தவறானது என ஆஸி.நடுவர் டெரல் ஹெயார் முதன்முதலில் தாம் அவ்வாறு செய்யாமல் மௌளனம் காத்தமை குறித்து ஓய்வு பெற்ற நியூஸிலாந்து நடுவரான ஸ்-ரீவ்டன் தனது நூலொன்றில் விளக்கியுள்ளார்.களத்தில் மத்தியில் தனியாக ஒரு நடுவரின் கதை என்பதே இந்நூலின் பெயர். இந்நூலின் ஒருசில பகுதிகள் மாத்திரம் கடந்தவாரம் அவுஸ்திரேலிய பத்திரிகையொன்றில் வெளியாகின.
1995ஆம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியின்போதுதான் முரளியின்பந்துவீச்சு தவறானது என ஹெயர் அறிவித்தார். அப்போது ஸ்கொயர் லெக் நடுவராக ஸ்-ரீவ்டன்் கடமையாற்றினார்.முரளி பந்துவீசிய போது 7 தடவை நோபோல் என அறிவித்தார் ஹெயர். இது குறித்து ஸ்hPவ் டன் கூறுகையில்,ஹெயர் என்னை நோக்கி வந்து அந்த நோபோல்களுக்கு காரணம் பாதத்தில் ஏற்பட்ட தவறுகளஅல்ல என்று கூறினார்.

இலங்கை அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் திரும்பி வந்தஅவர் ஸ்hPவன் பந்துவீச்சு முனையில் நிற்கும்போது முரளிதரனை பந்துவீசச்செய்தார்.பொதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது இயன்றவரை ஸ்டம்புகளை நெருங்கிறிபதே எனது வழக்கம். அப்போது துடுப்பு, கால்கவசத்தில் பட்டு பிடிக்கப்படும் பந்துகள் குறித்து கவனம் செலுத்தமுடியும்.நான் பின்னால் நகர்ந்து நின்றால் முரளியின் கை அசைவுகளை நன்றாகக்கவனிக்க முடியும். ஆனால் நான் எனது நடுவர் வாழ்க்கையில் பழக்கமான முறையையே பின்பற்றினேன்.

அப்போது என் மனதில் பலவாறான எண்ணங்கள் எழுந்தன. முரளிதரன் பந்தை எறிகிறார் என டெரல் ஹெயார் கூறினார். நானும் அவ்வாறு கூறிஹெயருக்கு ஆதரவு அதரிவிப்பதா அல்லது வருட ஆரம்பத்தில் நடந்த மாநாட்டில் நாம் தீர்மானித்தற்கிணங்க நான் என்ன கருதுகிறேனோ அதற்கு ஆதரவளிப்பதா? என்று தடுமாறினேன் என்கிறார் ஸ் ரீவ் டன்.அவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற மாநாட்டில், போட்டியின்போது வீரர் ஒருவரின் பந்துவீச்சுபாணி தவறானது எனக்கருதப்பட்டால் அதுகுறித்து போட்டி மத்தியஸ்தருக்கு நடுவர்கள் அறிவிக்க வேண்டும்.
மத்தியஸ்தர் குறித்த வீரரின் பந்துவீச்சு பாணி அடங்கிய வீடியோ பதிவுகளை ஐ.சி.சி.இற்கு அனுப்புவார் எனத்தீர்மானிக்கப்பட்டது.இந்த நடைமுறை பின்னர் சார்ஜாவில் நடைபெற்ற சுற்றுப்போட்டியொன்றின் போது ஆராயப்பட்டது. இத்தொடரில் டன், ஹெயார், இங்கிலாந்து நடுவர் நைகல் புளுஸ், மத்தியஸ்தரான ராமன் சுப்ரா ராவ் (இங்கிலாந்து) ஆகியோர் முரளியின் பந்து வீச்சு தொடர்பாக கலந்துரையாடலானார்.நானும், ஹெயாரும், நைகலும் முரளியின் பந்துவீச்சில் பிரச்சினையுள்ளதென ஏகமனதாக நம்பினோம்.

இவ்விடயத்தில் நாம் செய்யக்கூடியது என்பது குறித்து இலங்கை அணியின் பயிற்றுநரான டேவ் வட்மோருடன் பேசினோம். முரளியின் பந்துவீச்சு பாணியை சீரமைக்கும் பணியைஇலங்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தோம்.இத்தீர்மானத்தின்படியே மெல்பேர்ன் போட்டியின்போது நான் செயற்பட்டேன். அன்றைய ஆட்டம் முடிந்தவுடன் அறைக்குத்திரும்பியபோது எனக்கும் ஹெயாருக்குமிடையில் சுமுக உறவு இருக்கவில்லை.தனிப்பட்ட ரீதியிலும் நடுவர் என்ற வகையிலும் டெரல் ஹெயார் மீது நான் மதிப்பு வைத்திருக்கிறேன்.

ஆனால், எனது வாதம் என்னவென்றால், அச்சந்தர்ப்பத்தில் முரளி 30 டெஸ்ட் போட்டிகள் வரை விளையாடியிருந்தார். பல்வேறுநடுவர்கள் அவரின் பந்துவீச்சை அவதானித்துள்ளனர். ஒரேயொருவர் தான் அது தவறானது என்று கூறியுள்ளார்.ஆனால், நான் ஹெயாருக்கு ஆதரவளிக்காமை குறித்து ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.அப்போட்டி முடிந்தவுடன் மத்தியஸ்தர் கிறஹம் (நியூஸிலாந்து) தனது ஹோட்டல் அறைக்கு என்னை அழைத்து முரளியின் பந்துவீச்சு தவறானது என ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்டார்.

அடுத்த உலகக்கிண்ணப்போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றுவது குறித்தே நான் அதிககரிசனை கொண்டிருந்தேன் என அவுஸ்திரேலிய அணித்தலைவர் மார்க் டெய்லர் தனது போட்டி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.அது அபாண்டமான குற்றச்சாட்டு. அது என்னை மிகவும் ஆத்திரப்படுத்தியது. இப்போது கூட நான் நடுவராகப்பணியாற்றினால் முரளியின் பந்துவீச்சுதவறானது என போட்டியின்போது கூறமாட்டேன். ஆனால், அவரது பந்துவீச்சு முறையானதாக இல்லையென மத்தியஸ்தருக்கு அறிவிக்கக்கூடும்|| என்கிறார் ஸ்-ரீவ்டன்்.

இதேவேளை எனது பந்துவீச்சுப்பாணி தவறானது எனக்குற்றம் சாட்டப்பட்டபோது எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என அஞ்சினேன் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். விஸ்டன் ஏஸியா கிரிக்கெட்சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே முரளிமேற்கண்டவாறு கூறியுள்ளார்.எனது பந்துவீச்சு விதிகளுக்கு முரனானது என நான் எப்போதும் எண்ணவில்லை.இந்த பிரச்சினையில் இலங்கைக்கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை, அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை அணியினர் அனைவரும் தமது முழு ஆதரவை எனக்கு வழங்கினார். ணதுங்க, எனது கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்றியவர் எனலாம் இவ்வாறு முரளி கூறியுள்ளார்.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]