1995 மோதல் தடுப்பு ஒப்பந்தம்.
-Nitharsanam.com-
இலங்கை அரசாங்கத்தினாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலும் குறித்துரைக்கப்பட்ட ஒரு காலப்பிரிவு தொடர்பாக மோதல்களை நிறுத்திக் கொள்வது குறித்த ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. மோதல்களை நிறுத்துவதனை செயற்படுத்துவது தொடர்பான ஏற்பாடுகள் பின்வருமாறு:-
1. இக்காலப்பிரிவின் போது இரு தரப்பினரும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இவ்விதம் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒப்பந்தத்தை மீறும் ஒரு செயலாக கருதப்படும்.
2. பாதுகாப்புப் படையினரும்ää எல்.ரீ.ரி.ஈ. இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தற்பொழுது தாம் நிலை கொண்டிருக்கும் இடங்களில் தரித்திருக்க வேண்டும். அந்த இரு தரப்பினருக்குமிடையில் 600 மீற்றர் இடைவெளி இருந்து வருதல் வேண்டும்ää எவ்வாறிருப்பினும்ää ஒவ்வொரு தரப்பினரும் தமது பதுங்கு குழிகளில் இருந்து வெளியில் வந்து சுமார் 10 மீற்றர் பிரதேசத்துக்குள் நடமாட முடியும். இரு தரப்பினருக்குமிடையில் ஆகக் குறைந்தது 400 மீற்றர் இடைவெளி இருந்து வருதல் வேண்டும். எந்த ஒரு தரப்பினரும் தடை செய்யப்பட்டிருக்கும் பிரதேசங்களில் பிரவேசித்தால் அது ஒரு தாக்குதல் செயலாகக் கருதப்படும்.
3. கடற்படையும்ää விமானப் படையும் வெளி நாட்டு ஆக்கிரமிப்புக்களிலிருந்து நாட்டின் இறைமையையும்ää பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அவற்றின் சட்டப10ர்வமான கடமைகளிலும் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும். இந்தப் படைகள் எந்த விதத்திலும் எல்.ரீ.ரி.ஈ இயக்கத்திற்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டாது. குறித்தொதுக்கப்பட்ட பிரதேசங்களில் சட்டரீதியாகவும்ää நேர்மையான விதத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இடைய10று விளைவிக்கப்பட மாட்டாது.
4. ஏதேனும் ஒரு அரசியல் குழுவுக்குää கட்சிக்கு அல்லது எவரேனும் ஒரு நபருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நாசகார வேலைää குண்டுவெடிப்புää கடத்தல் என்பன கொலைகளாகக் கருதப்படும்.
5. (அ) ஒப்பந்தத்தின் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் இருந்து வந்தால் அவை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கெனää ஒப்பந்தத்தை மீறுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குழுக்களை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களை யாழ்ப்பாணம்ää மன்னார்ää வவுனியாää முல்லைத்தீவுää மட்டக்களப்புää அம்பாறை ஆகிய இடங்களிலும் தேவையெனக் கருதப்படும் ஏனைய இடங்களிலும் அமைத்துக் கொள்ள முடியும்.
(ஆ) இந்த ஒப்பந்தத்துக்கு இணங்கி உள்ள எவரேனும் ஒரு தரப்பினரால் ஒரு முறைப்பாடு முன்வைக்கப்பட்டால்ää உடனடியாக செயற்பட்டு அந்த சச்சரவுகள் குறித்து விசாரணைகள் நடத்திää அவற்றைத் தீர்த்து வைப்பது இக்கமிட்டிகளின் பொறுப்பாக இருந்து வரும்.
(இ) இக்குழுக்களில் கனடாää நெதர்லாந்துää நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும்ää சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஓய்வு பெற்ற நீதிபதிகள்ää சமயத் தலைவர்கள் மற்றும் நாட்டின் ஏனைய முன்னணிப் பிரஜைகள் ஆகியோர் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கப்படுதல் வேண்டும். பரஸ்பர இணக்கத்தின் பேரிலேயே அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
(ஈ) ஒவ்வொரு குழுவும் 5 உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்து வர முடியும். இரு உறுப்பினர்கள் அரசாங்கத்தாலும்ää இரு உறுப்பினர்கள் எல்.ரீ.ரி.ஈ இயக்கத்தினாலும் ஒரு உறுப்பினர் வெளி நாடொன்றினாலும் நியமனம் செய்யப்பட முடியும். நியமனம் செய்யப்படும் வெளிநாட்டு உறுப்பினர் இதற்குத் தலைமை தாங்குவார்.
(உ) தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பிரயாணங்களை மேற்கொள்ளும் சுதந்திரத்தை ஒப்பந்தத்துக்கு இணங்கியிருக்கும் இரு தரப்பினரும் உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.
(ஊ) இக்குழுக்கள் துரிதமாகவும்ää பாரபட்சமற்ற விதத்திலும் செயற்படுவதற்கு வகை செய்யும் விதத்தில் அவற்றுக்குத் தேவையான வசதிகளை பரஸ்பர இணக்கத்தின் பிரகாரம் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.
6. இலங்கைக்கும் போர் இடம்பெற்று வரும் பிரதேசங்களிலுள்ள எல்.ரீ.ரி.ஈ தலைவர்களுக்குமிடையில் செய்திப் பரிமாற்றத்தை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டும் என்ற விடயம் இங்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. இதன் காரணமாக பிரச்சினைகளை உள்நாட்டு ரீதியில் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு அத்தலைவர்களுக்குக் கிடைக்கும்.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு