லக்ஸ்மன் கதிர்காமரின் மரணம் உணர்த்தும் செய்தி
- ஈழமுரசிற்காக வன்னியிலிருந்து வேனில்:Sankathi.com -
கடந்த 12ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை சந்திரிகா குமரணதுங்கா நடத்திய முக்கிய சந்திப்பொன்றில் கலந்துகொண்ட கதிர்காமர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச நினைவு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு ஒன்றில் கலந்து கொண்டார்.சங்கதி அந்நிகழ்வை முடித்துக் கொண்டு அவரது தனிப்பட்ட இல்லமான கொழும்பு புல்லர்ஸ் ஒழுங்கையிலுள்ள இல்லத்திற்கு வந்தார்.சங்கதி அங்கே அவரை நோக்கி 'புல்லட்ஸ்" காத்திருப்பதை அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.சங்கதி வந்தவர் அவரது நீச்சல் தடாகத்தில் நீராடினார்.சங்கதி நீராடிவிட்டு விஜயராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்ல ஆயத்தமாகியபோது இரவு மணி 10:40.சங்கதி அப்போதுதான் அவரை எதிர்பார்த்து காத்திருந்த "புல்லட்ஸ்" சினைப்பரில் இருந்து சத்தமின்றிப் பாய்ந்தது.சங்கதி
லக்ஸ்மன் கதிர்காமர் மயங்கிச் சரிந்தார்.சங்கதி அவரது தலையிலும் மார்பிலிலும் இருந்து இரத்தம் வழிந்ததை பார்த்தே அவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருந்ததை அவரது மனைவி புரிந்துகொண்டார்.சங்கதி உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கதிர்காமரின் உயிர் அவசர சிகிச்சை பலனின்றிப் போனதால் இரவு 12.00 மணியளவில் பிரிந்தது.சங்கதி
குறிபார்த்து சுடும் துப்பாக்கியிலிருந்து ஓசையின்றிப் பாய்ந்து வந்த மூன்று குண்டுகளில் இரண்டு சரியாக அவரது தலையையும் மார்பையும் துளைத்திருந்தது.சங்கதி அதனால் கதிர்காமரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது.சங்கதி
இறக்கும் போது கதிர்காமருக்கு 73 வயது.சங்கதி 12-04-1932 இல்; யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த தமிழ் கத்தோலிக்கர்களான சாமூவேல் கதிர்காமர்ää பாரிமலர் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த லக்ஸ்மன் கதிர்காமர் தனது ஆரம்பக் கல்வியை கண்டியில் பிரபலம் வாய்ந்த திருத்துவக் கல்லுரியில் கற்றார்.சங்கதி பின்பு இலங்கை பல்கலை கழகத்தில் சட்டம் பயின்று பட்டதாரியாக வெளியேறினார்.சங்கதி 1953ம் ஆண்டு இங்கிலாந்தில் சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்றார்.சங்கதி லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலை கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் புலமை சார்ந்த பல அமைப்புக்களில் பல உயர் பதவிகளை லக்ஸ்மன் கதிர்காமர் வகித்தார்.சங்கதி அத்தோடு அனைத்துலக அமைப்புக்கள் பலவற்றிலும் பொறுப்பான பதவிகளை அவர் வகித்தார்.சங்கதி
கதிர்காமரின் கல்வியும் புலமையும் நிபுணத்துவ ஆற்றல்களும் இலங்கையில் காலங்காலமாக தமிழ் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வரும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு முற்று முழுவதுமாக துணைபோக உதவியதே சோகமான விடயம்.சங்கதி
சிறிலங்காவின் தற்போதய அரசுத் தலைவியின் தாயரும் முதற்பெண் பிரதமருமான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகின்ற போதும் மறைந்த நிலன் திருச்செல்வமே லக்ஸ்மன் கதிர்காமரை சந்திரிகாவிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.சங்கதி
1994ஆம் ஆண்டு சந்திரிகா அரசுத் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட போது இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என அடித்துக் கூறினார்.சங்கதி இனப்பிரச்சினை என்று எதுவுமே இல்லையென அப்போது ஏனைய சிங்களத் தலைவர்கள் கூறிவந்த போது சந்திரிகாவின் இந்த கருத்து தமிழ் மக்களுக்கு அவர்மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.சங்கதி விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடாத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக அறிவித்த சந்திரிகா தனது அமைச்சரவையில் லக்ஸ்மன் கதிர்காமர் என்ற (தமிழ் தெரியாத) தமிழரை வெளிவிவகார அமைச்சராக நியமித்ததும் தமிழர்களின் பிரச்சினைக்கு சமாதான தீர்வொன்றை காண்பதற்கான ஒரு நல்லெண்ண சமிக்கையாகவே பலர் இதனைக் கருதினர்.சங்கதி
ஆனால்ää காலப்போக்கில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அனைத்துலக ரீதியில் செயற்பாட்டாளராக- பரப்புரையாளராக லக்ஸ்மன் கதிர்காமர் பயன்படுத்தப்பட்டார்.சங்கதி
அனைத்துலக நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இணைத்து தடைசெய்ய கடந்த பதினொரு ஆண்டு காலமாக லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட முயற்சிகள் அவரது பணிகளில் அதி உயர்வானதாக கருதக்கூடியன என சந்திரிகா தற்போது கூறியுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.சங்கதி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக உலகம் முழுவதும் பறந்து பறந்து பரப்புரைகளை மேற்கொண்டவர் கதிர்காமர்.சங்கதி விடுதலைப் புலிகளை பல நாடுகள் பயங்கரவாத அமைப்பென முத்திரை குத்தி தடைவிதித்தமைக்கு தானே காரணகர்த்தா என வெளிப்படையாகவே கூறி பெருமையடைந்தவர் இவர்.சங்கதி
தமிழ் மக்கள் சிறிலங்கா வான்படையினரால் தமிழர் தாயகத்தில் குண்டுவீசி கொல்லப்பட்ட சம்பவம் ஒன்றை ஜ.நாசபை கண்டித்த போது ஜ.நாவிற்கு எதிராக கதிர்காமர் சீற்றம் கொண்டார்.சங்கதி நுளம்பிற்கு மருந்து தெளிக்கும் வேலையை மட்டும் ஜ.நா பார்த்தால் போதும் இலங்கையின் உள் விவகாரங்களில் அது தலையிடத் தேவையில்லையென அவர் காட்டமாக கருத்து தெரிவித்தார்.சங்கதி (எனினும் கதிர்காமர் கொல்லப்பட்டமைக்கும் ஜ.நா செயலர் தற்போது கண்டணம் தெரிவித்துள்ளார்)
இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு அனுசரணை வழங்கும் நோர்வே தரப்பினரையும் கதிர்காமர் கடுமையாக விமர்சித்திருந்தார்.சங்கதி
கதிர்காமர் தனது சட்ட நிபுணத்துவம்ää புலமைää ஆற்றல் என்பனவற்றை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவே பயன்படுத்தினார்.சங்கதி நேர்மை என்பதற்கு அப்பால் - ஒருவன் கொலையாளி எனத் தெரிந்திருந்தும் அவனுக்காக வாதாடும் ஒரு சட்டவாளனைப் போலவே கதிர்காமர் சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் பக்கம் நின்றார்.சங்கதி
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அனைத்துலக தளங்களில் சிங்களப் பேரினவாதம் தமிழர் ஒருவரையே கருவியாக பாவித்தமை நுட்பமான ஒடுக்குமுறையின் ஒருவடிவம் எனலாம்.சங்கதி இதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் துணைபோனமை உச்சமான துரோகம் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.சங்கதி
மிக உச்சப்பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருமனிதர் அவரது பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே கொல்லப்பட்டமை அவரைப் போன்ற ஏனையோர்களுக்கும் நல்லதொரு படிப்பினையாகும்.சங்கதி
விடுதலைப் புலிகள் இந்த கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லையென அறிவித்துள்ளனர்.சங்கதி
எது எவ்வாறு இருப்பினும் இதனை ஒரு மாபெரும்; துரோகத் தனத்திற்;கு கிடைத்த தண்டனையாகவோ அல்லது எவ்வித துரோகத்தனத்திற்கு துணை நின்றாலும் தமிழனை கருவியாக மட்டுமே சிங்களப் பேரினவாதம் பயன்படுத்தும் என்பதன் விளைவாகவோ தான் கருத முடியும்.சங்கதி
தமிழ் மக்களது நியாயமான உரிமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் பரப்புரை செய்வதில் மட்டும் கதிர்காமரின் பணி மட்டுப்படுத்தப் பட்டிருக்கவில்லை.சங்கதி சிறிலங்கா படைத்துறைக்கு ஆயுதங்களை உலக நாடுகளிடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கும் பாதுகாப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் பல முயற்சிகளை கதிர்காமர் மேற்கொண்டார்.சங்கதி
இலங்கைதீவில் சிங்கள மக்களைப்போல் சுதந்திரமாகவும் உரிமையுடனும் தங்கள் தாயகத்தில் வாழ்வதற்காக போராடிவரும் தமிழர்கள் இதுவரைகால தங்கள் போராட்டத்தில் போராளிகளும் பொதுமக்களுமாக 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இழந்திருக்கின்றனர் மேலும் ஆயிரக்கணக்கான உயிர்களை சிங்கள பேரினவாத வெறிக்கு பலிகொடுக்க தமிழ்மக்கள் தயாராகவில்லை.சங்கதி
கதிர்காமர் போன்றவர்கள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் துரோகத்திற்கு துணைபோகாமல் இருக்க வேண்டும் என்பதே கதிர்காமருக்கு ஏற்பட்ட முடிவு கூறும் செய்தியாகும்
நன்றி: ஈழமுரசு







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு