www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சிரிப்பு

காமெடி வியாழன்

-நாமக்கல் சிபி -
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட இளா, தேவ், ஜொள்ளுப்பாண்டி ஆகியோர் புடைசூழ கம்பீரமாக ஆலோசனைக் கூடத்தினுள் நுழைகிறார் கைப்புள்ளை.

நாகை சிவா: "சங்கம் கண்ட மன்னன், சங்கத்து சிங்கங்களுக்கெல்லாம் அண்ணன், மாவீரன் டெலக்ஸ் பாண்டி....வருகிறார் பராக்...பராக்..."

கைப்புள்ளை: "இரு இரு.... அதான் வந்துட்டம்ல....எதுக்கு இப்படி ஒரேயடியா ஃபீல் பண்ணி கூவுற! யோவ் தேவு, கூட்டப்போறது ரகசியக் கூட்டம்னு தெரியும்ல..எதுக்கு இப்படியொரு பில்டப்பு!.."

நாகை சிவா: "ஹி..ஹி..தலை பழகிடுச்சு தலை...!"

கைப்புள்ளை : "ம்ஹூம், தேவையான நேரத்துல ஒரு பயலும் கண்டுக்காதீங்க.. எப்ப தேவையில்லயோ அப்பப் பார்த்து பிட்டா போடுவீங்க..."

தேவ் : " அட அதை விடுங்க தலை... வந்த வேலையைப் பார்ப்போம் முதல்ல"

கைப்புள்ளை: "ஆங்க்.. சரி.. நாம இப்போ இங்கே எதுக்குக் கூட்டியிருக்கோம்னா..."

இளா : "என்ன கூட்டியிருக்கோம்னா"

கைப்புள்ளை: " அதாவது இந்த ரகசியக் கூட்டத்தை எதுக்குக் கூட்டியிருக்கோம்னா..."

இளா: "என்னா ரகசியக் கூட்டம் கூட்டியிருக்கோம்னா"

கைப்புள்ளை: "ஏம்பா! இளா என் கிட்டயேவா! இல்லை என்கிட்டயேவான்னு கேக்குறேன்..
கண்ணுங்களா... இப்பவே எனக்குக் கண்ணைக் கட்டுதே....கொஞ்சம் சொல்ல விடுங்கப்பா..
தேவு! நாஞ்சொல்லுறது சரிதான"

தேவ்: "என்னா சொல்லுறது சரிதான.."

கைப்புள்ளை: "ஆஹா கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா..."
சட்டென்று கோபமாகி
"சே! என்ன இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு! ராஸ்கல்ஸ்..என்னை சொல்ல விடுவீங்களா மாட்டீங்களா?"

நாகை சிவா: "என்ன சின்னப்......."
கைப்புள்ளை திரும்பிப்பார்க்கவும்...."ஸாரி தலை.."

கைப்புள்ளை: ஆள் காட்டி விரலை தன்னை நோக்கி வைத்தவாறே "இது தேவையா, இது தேவையா... எனக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும்"

அதற்குள் "என்னது இன்னும் வேணுமா?" என்று பார்த்திபனின் குரல் கைப்புள்ளைக்கு மட்டும் கேட்க....

கைப்புள்ளை: "வந்துட்டான்யா..இங்கயும் வந்துட்டான்யா...வாயப் புடுங்க இங்கயும் வந்துட்டான்யா"

பாண்டி: "தலை, யாரு வந்துட்டாங்க?, இங்க நம்மளைத்தவிர வேற யாரும் இல்லையே!"

கைப்புள்ளை: "இல்லை பாண்டி, இப்போ பார்த்திபனோட சத்தம் கேட்டுதே?"

பாண்டி: "தலை, ரிலாக்ஸாவுங்க.. இங்கயாவது பார்த்திபன் வர்றதாவது.. எல்லாம் மனப் பிராந்தி"

கைப்புள்ளை: "என்ன சொன்னே.. மனப் பிராந்தியா..? ஏன் பிரம்மைன்னு சொல்லுறது.. அதை விட்டுட்டு இப்போ ஏன் பிராந்தி, ரம்முன்னெல்லாம் சொல்லுறே.. அங்க பாரு பிராந்தின்னவுடனே இளா எல்லாத்தையும் மறந்துட்டு எங்கயோ யோசிக்கிறதை..."

"யோவ் இளா... இங்க பாருய்யா... என்னா எல்லாரும் இன்னிக்கு ஓவராப் போறீங்க, பேசி வெச்சிகிட்டு கலாய்க்கறீங்களா? எல்லாரையும் சஸ்பென்ஸ் செஞ்சிடுவேன்..ராஸ்கல்ஸ்.. ஆமா கலாய்த்தல்னவுடன்தான் ஞாபகத்துக்கு வருது, அந்த நாமக்கல் சிபி என்ன இன்னமும் காணோம்"

தேவ்: "தலை, தளபதியார் எப்பவுமே கொஞ்சம் லேட்டாத்தான் வருவாரு, ஆனா லேட்டஸ்டா வருவாரு, ...இப்ப வந்துடுவாரு....அட..அதோ வர்றார் பாருங்க"

அதற்கும் நாமக்கல் சிபி.. தப தபவென மூச்சிரைக்க "தலை...தலை.." என்று கத்தியவேறே ஓடிவருகிறார். அவரைத்தொடர்ந்து பின்னாலேயே இன்னும் நாற்பது ஐம்பது பேர் ஓடிவருகின்றனர்.

கைப்புள்ளை: "யோவ் சிபி, என்னய்யா அச்சு ஏன் இப்படி ஓடி வர்றே..?"
எண்று முழுசாய்க் கேட்டு முடிப்பதற்குள் பின்னால் ஒடிவந்த அந்த கூட்டம் கைப்புள்ளையைச் சுற்றி வளைத்து, ஒரு அரை மணி நேரம் குமுறு குமுறென்று குமுற்கின்றனர்,

ஒரு வழியாய் அவர்கள் அடித்து களைத்தபின் குமுறுதலை முடித்துக் கொள்ள, பரிதாபமாய் எழுத்து நின்று ஒன்றும் புரியாமல் விழிக்கும் கைப்புள்ளையிடம்

"இனிமேல் இப்படியெல்லாம் கேட்டே நடக்குறதே வேற? கேள்வி கேக்குறானாம் கேள்வி? கையை ஒடச்சிடுவோம்..ஆமா?"
என்று எச்சரித்துவிட்டு அனைவரும் வெளியேற்கின்றனர்.

கதிகலங்கிப்போயிருக்கும் கைப்புள்ளை அப்படியே சுற்றிலும் ஒரு நோட்டம் விட ஆங்காங்கே பீரோவுக்குள், பெஞ்சு, மேசைக்கடியில் ஒளிந்து கொண்டிருந்த சங்கத்து சிங்கங்கள் எல்லாரும் ஒவ்வொருவராக வெளியில் வருகின்றனர்.


கைப்புள்ளை: "அம்ம...அம்ம..." என்றவாரே நிமிர்ந்து அனைவரையும் ஒரு முறை முறைத்துவிட்டு

"யோவ் சிபி என்னய்யா நடக்குது இங்கே, யாரு இவிங்கெலாம், எதுக்கு வந்தாங்க, அடிப் பின்னியெடுத்தாங்க, போயிட்டே இருக்காங்க? ராசா சிபி! சொல்லுப்பா, ஐய்யோ உடம்பை ரணகளமாக்கிட்டாங்களே..ரணகளமாக்கிட்டாங்களே"

இளா: "இவெங்க எல்லாரும் வலைப்பதிவர்கள்தான்..நிறையப் பேரை நமக்கு முன்னாடியே தெரியும்"

கைப்புள்ளை: :"வலைப்பதிவர்களா... அவங்களுக்கேன் என் மேல இப்படியொரு கொலைவெறி?"

சிபி: "ஹி..ஹி.. அது ஒண்ணும் இல்லை தலை! அங்கங்கே பின்னூட்டங்கள் மூலமா கொஞ்சம் குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்டு வெச்சேன்.. அதுலதான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாங்கன்னு நினைக்கறேன்"

கைப்புள்ளை: "குண்டக்க மண்டக்காவா..என்ன நீயும் பார்த்திபன் மாதிரி ஆயிட்டே...அப்புறம் ஏன் டென்ஷன் ஆவ மாட்டாங்க... ஆமா நீ கேட்டக்காக என்னை ஏன் ராசா தேடி வந்து அடிக்கணும்?"

பெருசு:"அதை நான் சொல்லுறேன் தலை. தளபதி எல்லா இடத்திலயும் போய் தான் கேட்டதா அந்த கேள்விகளைக் கேக்கலை, நீங்க கேட்டதாத்தான் கேட்டுகிட்டிருந்திருக்காரு"

கைப்புள்ளை:"ஓ! அதானா சங்கதி.. யோவ்..சிபி நீ நல்லா இருப்பய்யா...நீ எந்த ரேஞ்சில கேட்டு வெச்சேன்னு எனக்கு நல்லா புரியுது..ஆமா வந்த அத்தனை பேருமே அடிக்கலை போல இருக்கே.. கொஞ்சம் பேரு தனியா நின்னுகிட்டு "ஆங்க் அப்படித்தான், நல்லா உதை.. அங்க மிதி..சூப்பர்னெல்லாம்" சத்தம் போட்டுகிட்டு இருந்தாங்களே அவுங்கள்ளாம் யாரு?"


இளா: "தலை அவுங்கள்ளாம் அப்ரெண்டிசுங்க அதாவது எழுத நிறைய திறமை இருக்கும், ஆனா பிளாக்கர் ஐடி கிரியேட் பண்ண டைம் இருக்காது, எந்த வம்பு தும்புக்கும் போவாதவங்க, எங்கயாச்சும் இப்படி ஒண்ணு நடந்ததுனா கூடி நின்னு வேடிக்கை பார்ப்பாங்க, அவ்வளவுதான்"

கைப்புள்ளை: "ஆஹா! இப்படி வேற ஒரு குரூப் கெளம்பி இருக்காங்காளா? அது போகட்டும் சிபி.. நாம ரகசியக் கூட்டம் நடத்துற இடம்தான் யாருக்குமே தெரியாதே? எப்படி இவ்வளவு கரெக்டா கண்டு பிடிச்சி வந்தாங்க?"

சிபி: "அதான் தலை நானும் யோசிக்கிறேன், நானும் அவங்க விரட்டும்போது திரும்பி திரும்பி பார்த்துகிட்டேதான் வந்தேன், எப்படி கரெக்டா வழி தெரிஞ்சி துரத்துறாங்கன்னு?"

கைப்புள்ளை: "வழி தெரியாத ஆளுங்களையும் கூடவே கூட்டிட்டு வந்துட்டு யோசிக்கறாராம்ல... சரி சரி.. நாளைக்கே வேற இடம் பார்க்கணும்.. இளா, தேவ், வேற இடம் பார்த்து அப்புறமா கூட்டத்தைக் கூட்டுவோம்"

இளா: "தலை, இவ்ளோ நடந்திருக்கு, உங்களுக்கு வலிக்கவே இல்லையா..?"

கைப்புள்ளை::ஹெ.ஹெ.. நமக்கெல்லான் என்னிக்கு வலிச்சிருக்கு"

அப்போது நன்மனம் அங்கே மூச்சிரைக்க ஓடிவருகிறார்.
"தலை..தலை.. உங்களை அடிக்க வலைப்பதிவர்கள்..எல்லாரும் ஒண்ணு சேர்ந்து வந்துகிட்டிருக்காங்களாம்..."

அனுப்பியவர் Admin

 

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2006)
 
[பாவனை செய்யபĮ