நான் வளர்கிறேனே மம்மி! - 1
-நாமக்கல் சிபி
1976ம் வருடம், மே மாமதம் சேலம் மாவட்டத்தில் அம்மையும் அப்பனுமாய் ஆணுக்குப் பெண் சரிபாதி என்று சிவபெருமானும், பார்வதி தேவியும் இரண்டறக்கலந்து அர்த்தநாரீசுவரரய் காட்சி தந்து அறுள்பாலிக்கும் திருச்செங்கோடு என்ற ஊரில் மலையின் அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ள சண்முகவடிவு மருத்துவ மனனயில் நாமக்கல் சிபியாகிய நான் அவதரித்தேன் என்று ஆன்றோர் கூறுவர்.
பிறந்தது முதல் முதல் 5 வயது வரை நான் செய்த குறும்புகள், நான் விளையாடியவை, உடன் விளையாடியவர்கள் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் எனக்கு நினனவில்லா விட்டாலும் கூட ஒரு சிலவற்றை என் பெற்றோர் கூறக் கேட்டிருக்கிறேன். இன்னும் சில எனக்கே இன்னும் நினனவில் உள்ளன.
குழந்தைப் பருவத்திலும் குசும்புடன்தான் இருந்திருக்கிறேன் என்று பெற்றோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தொட்டிலில் தூங்கவைக்கும்போது கூட திடீரென கால்களால் எம்பி எம்பி பின்புறமாக நகர்ந்து தலைமட்டும் தொட்டிலிக்குக் கீழே தொங்கும்படியாக செய்து அடிக்கடி பீதியைக் கிளப்புவேனாம்.
அதே போல் கைப் பெருவிரல் சப்பும் பழக்கம் இல்லை ஆனால் அதற்குப் பதிலாக கால் பெருவிரலாம்.
என் அக்கா இருவரையும் பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் விளையாடச் செல்லும்போதெல்லாம் என்னையும் தூக்கிக் கொண்டேதான் செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பதால், முதுகில் பொத் பொத்தென்று இரண்டு போட்டவாறே தூக்கிக் கொண்டு செல்வார்கள். அதேபோல்தான் அவர்கள் சினிமாவிற்குச் செல்லும்போதும். எங்கள் ஊரிலிருந்து 2/3 கி.மீ நடந்து செல்லவேண்டும். என்னையும் தூக்கிக் கொண்டு செல்லவேண்டும் என்றால் எப்படி இருக்கும்.
அப்புறம் எங்கள் தாத்தா வீட்டிற்கு வரும்போது வாங்கி வரும் பிஸ்கெட் பாக்கெட் என்னிடம் கொடுக்கப்படும்போது கொஞ்சம் பிரிந்திருப்பதாய் நான் சந்தேகப் பட்டாலும் போதும். அப்படியே என் கையிலிருந்து பறந்து விடும். எங்கே போய் விழும் என்றெல்லாம் தெரியாது. அதே போல் பாலை பாட்டிலில் ஊற்றி என்னிடம் கொடுத்துவிட என் அப்பாவின் மடியில் அமர்ந்தவாறே அவரின் தொடைகளில் என் கைகளால் தாளமிட்டபடியே குடித்துவிட்டு, இரண்டாவது பெக் பாட்டிலில் ஊற்றிக் கொடுக்க சிறிது நேரம் அதிகம் ஆனாலும் போதும். பிறகு என்னை அடக்க அவர்கள் பட்ட பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.
பிறகு நான் டீவிரவாதியாக மாறிய பிறகு டம்ப்ளரில் டீ நிறைய இருக்க வேண்டும். இரு நூல் அளவு குறைந்தாலும் தகராறுதான். ஒரு சில நாட்கள் வெறுத்துப் போய் என் அம்மா கோபத்துடன் அந்த டீயிலேயே டம்ப்ளரை எடுக்க முடியாத வண்ணம் (டீயையோ அல்லது தண்ணீரையோ) ஊற்றி விட்டு இப்போ குடிடா பார்க்காலாம் என்று சொல்ல அப்போதும் சளைக்காமல் (பின்னே மீசையில் மண் ஒட்டுறதாவது, நாமெல்லாம் அப்பவே சங்கத்து ஆளுள்ள) டம்ப்ளரை கையில் எடுக்காமல் தரையில் படுத்து அப்படியே கொஞ்சம் டீயை உறிஞ்சி விட்டு, கையிலலெடுக்கும் அளவு வந்தவுடன் பிறகு எடுத்து குடித்திருக்கிறேன். இதைப் பார்த்து தலலயால் அடித்துக் கொண்டு கோபம் போய் சிரிப்பார்கள்.
இவையெல்லாம் எனக்கு விவரம் தெரியாத வயசுல நான் செஞ்ச லொள்ளூஸ். மற்றபடி சில குழந்தைகளைப் போல எல்லாப் பக்கமும் ஓடி, சில பொருட்களை உடைத்துவிடுவது, அதிகமா குப்பை போடுறது போன்ற தீவிரவாதச் செயல்கள் எல்லாம் செய்ததில்லை. ஏதாவது ஒரு பக்கம் உக்காந்துகிட்டு எதையாவது யோசனையோடுதான் இருப்பேன்.
(அப்பவே உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சிட்டம்ல)








0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு