காதல் செவ்வாய்! - 1
-பிதற்றல்கள் வலைப்பூ-
காதல் - என்ற வார்த்தையை சொல்லும்போதே நமக்கெல்லாம் உள்ளுக்குள்ள ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுது இயற்கையாவே. அதனாலதானோ என்னவோ நாம சினிமாவுல அல்லது சீரியலில் பார்க்குற காதல் ஜோடி கூட நல்லபடியா சேரணும்னு நமக்குள்ள ஒரு பதை பதைப்பு வந்துடுது. அந்த காலத்துல இந்த காதலுக்கு தடையா இருந்தது மதம், ஜாதி, மொழி இதெல்லாம். ஆனா இப்ப காலம் மாறிப் போயிடுச்சு. இதெல்லாம் கூட பெரிய அளவுல தடையா இருப்பதில்லை. வெறும் கௌரவமும், அந்தஸ்தும், காசு பணமும்தான். பெத்த பொண்ணு நல்ல படியா வாழணும்னு பெத்தவங்க நினைக்கறதும் ஒரு பக்கம் நியாயம்தான். அதே சமயம் வறட்டுப் பிடிவாதத்துக்காக பொண்ணோட/பையனோட சம்மதம் இல்லாமயே வேற பையனுக்கு/பொண்ணோட கல்யாணம் பண்ணி வெச்சி காலம் பூராவும் வெளிப்படையா கண்ணீர் விட்டு அழவும் முடியாம, சந்தோஷமா வாழவும் முடியாம...போறவங்களோட வாழ்க்கையை கொஞ்சம் நினைச்சிப் பாருங்க...
டீ.ஆரோட "மைதிலி என்னைக் காதலி" படத்துல ஒரு பாட்டு வரும் பாருங்க.
"தண்ணீரிலே மீனழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார்.."
டீ.ஆரோட எல்லாப் படங்களிலுமே பார்த்தீங்கன்னா ஏதாவது ஒரு காதல் தோல்வியைச் சொல்லியிருப்பார். எனக்குத் தெரிஞ்சி காதல் தோல்வியோட வலி என்னன்னு திரைப் படங்களில் அதிகமா பதிவு செஞ்சவர் அவராத்தான் இருக்கும்.
தன்னோட ஒரு தலைக் காதல் ஏற்கப்படாமல் போனபோது "மைதிலி என்னைக் காதலி" படத்துல ஒரு பாட்டோட தொகையறாவுல பாடுவார் பாருங்க.
"காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே....
கண்ணீரை மருந்தாக்குங்களே...
கண்ணீரை மருந்தாக்குங்களே..."
அந்த மூன்று வரிகளைக் கேட்டாலே போதும். அந்த வலி நம்ம மனசுலயும் வந்து உக்காந்துடும்.
ரொம்ப நாளா ஆசை வெச்சிருந்த தன்னோட முறைப் பொண்ணு, இன்னொருத்தரை விரும்பறான்னு தெரிஞ்சவுடனே, தன்னோட ஒரு தலைக் காதல் கானல் நீராயுடுச்சேன்னு அந்தப் பாட்டுல என்னமா சொல்லுவார் பாருங்க.
"சமைச்சி வெச்ச மீனுக் குழம்பை
நீயும் சளைக்காம தின்னபோது
தாலி கட்ட நினைச்சிருப்பே
நீயும் தாரமாக்கத் துடிச்சிருப்பே..
அன்று கையைதான கழுவு என்றாள்
இன்று காதலில்லை அழுவு என்றாள்"
டீ.ஆர் இப்படி பாடுறதைக் கேட்டு பக்கத்து வீட்டு ஊமை வாட்ச் மேன் தேம்பி தேம்பி அழுவான். பாவம் அவனுக்குள்ளயும், அந்த ஊமை மனசுக்குள்ளயும் ஒரு காதல் தோல்வி இருந்ததே அப்பதான் தெரியவரும்.
ஒரு பக்கம் தன்னோட ஒரு தலைக் காதல் தோல்வியில் முடிய இன்னொரு பக்கம் தன்னை விரும்புற இன்னொரு பெண்ணோட காதலை ஏத்துக்க முடியாம தவிக்கும் தவிப்பை பாட்டுலயே நல்லா சொல்வார்.
"அமாவாசை இரவினிலே நிலவது உதிப்பதில்லை..
அழகற்ற என் முகத்தை அன்றொருத்தி ஏற்க வில்லை..."
அதே மாதிரி ஒரு தாயின் சபதம் படத்துல டீ.ஆரும், அவருடைய நண்பரின் தங்கையும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் அதை வெளியில் சொல்லிக்காமலேயெ இருப்பாங்க. அதுக்குள்ள விதி செய்த சதியால், இவங்க காதலைப் பத்தி தெரியாத பெரியவங்க அந்தப் பொண்ணுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சி வைக்க
அந்த பாழும் மனசுங்க ரெண்டும் கிடந்து தவியாய் தவிக்கும் பாருங்க..
அப்பதான் டீ.ஆர் பாடுவாரு...
"அட காதலிச்சா போதாது
அதை மூடி வைக்கக் கூடாது
கல்யாணம்தான் சொர்க்கத்துல
நிச்சயிக்கப் படுதாம்
பத்திரிக்கை மட்டும் இங்கே
அச்சடிக்கப் படுதாம்..
சம்மதம் கேக்காமலே
சம்மந்தம் பேசுறாங்க...
இரு மனங்களைப் பார்க்காமலே
திருமணங்களைச் செய்யுறாங்க.."
இதென்ன கலாட்டா, காதல் பற்றி சுவாரசியமான ஜாலியான விஷயம் ஏதாவது சொல்லுவேன்னு பார்த்தால் இப்படி காதல் தோல்வியோட சோகத்தை சொல்றேன்னு பார்க்கறீங்களா, ஆமாங்க! அடுத்து நான் சொல்லப்போறதும் ஒரு சொல்லாத காதலோட வலியைத்தான்.








1 கருத்துக்கள்:
At 5:25 AM, நாமக்கல் சிபி @15516963 கூறியது:
என்னங்க இது என்னோட காதல் செவ்வாய் பதிவை நகைச்சுவையில் தொகுத்திருக்கீங்க?
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு