சர்வதேசப்போலீஸ் தேடிய கோழித்திருடன்
-Kisukisu.com-
ருமேனியா நாட்டைச் சேர்ந்த 51 வயது நபர் அயாசி. இவர் 4 ஆண்டு களுக்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரரின் கோழிப்பண்ணையில் இருந்து 7 கோழிக்குஞ்சுகளைத் திருடினார். அதன் பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
சமீபத்தில் அவர் நாடுதிரும்பினார். அப்போது எல்லைப்பாதுகாப்பு படை யினர் சர்வதேசப் போலீசார் இவரைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர். கோழிக்குஞ்சுகளைத் திருடியதற்காக சர்வதேச போலீசார் கைது வாரண்டு டன் சென்று அவரைக் கைது செய்தனர். அவருக்கு 3ஷி ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
4 நாட்கள் ஷவரில் நனைந்து உலக சாதனை
ஜெர்மன் நாட்டில் ஹோவல்காப் நகரைச் சேர்ந்த 17 முதல் 25 வயசுக்கு உட்பட்ட 5 ஆண்களும் 2 பெண்களும் 101 மணி நேரம் தொடர்ந்து ஷவரின் கீழ் நின்று உலக சாதனை படைத்தனர்.
கடந்த புதன் கிழமை 10 பேர் ஷவரில் நிற்கத் தொடங்கினர். இடையில் 3 பேர் இந்த சாதனை நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்டனர். மீதி 7 பேர் மட்டும் 101 மணி நேரம் ஷவரில் நின்று சாதனை படைத்தனர்.
2000-ம் ஆண்டு பெர்லின் நகரைச் சேர்ந்த சில இளைஞர்கள் 100 மணி நேரம் ஷவரில் நின்று முதன் முதலாக சாதனை நிகழ்த்தினர். அதை இந்த 7 பேரும் இப்போது முறியடித்து உள்ளனர்.
மிக நிண்ட நேரம் ஷவரில் நின்ற 17 வயதுச் சிறுவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
சாதனை நிகழ்த்திய 7 பேரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஆனால் களைத்துப் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நிறம் மாறிய பூனை
இங்கிலாந்து நாட்டில் ஒகேஹாம்ப்டன் நகரைச் சேர்ந்த தம்பதிகள் பிலிப் ஜோவான் எவார்த். இவர்கள் 9 வயது பூனையை வளர்த்து வந்தனர். வெள்னை நிறப்பூனையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றனர். திரும்பி வந்த பிறகு பார்த்தால், பூனையின் நிறம் கருநீலமாக மாறிவிட்டது.
தலை காதுகள் உடல் ஆகியவை கருநீலமாக மாறி விட்டன.
“மிருக வைத்தியரிடம் பூனையைக் கொண்டு சென்று காட்டினோம். அவரால் நிறம் மாறியதற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை இப்படி திடீர் என்று நிறம் மாறியது எங்களுக்கு கவலை அளிக்கிறது'’ என்று பிலிப் கூறினார்.
தினதந்தி-








0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு