www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

இப்படியும்

அமெரிக்காவை ஆட்டிவைக்கும் கிரிக்கெட் மோகம்

பொதுவாகவே ஆங்கிலேயர்கள் ஆண்ட நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாக இருக்கும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள். அமெரிக்காவும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுதான். அங்கும் முதலில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன் போர் செய்ததால் கிரிக்கெட் விளையாடுவது அடிமைத்தனத்தைக் குறிக்கும் என்று நினைத்து அமெரிக்கர்கள் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்துள்ளனர்



இதனால் கிரிக்கெட் அமெரிக்காவில் தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளது. ஆனால் கிரிக்கெட் போலவே விளையடப்படும் பேஸ்பால் பிரபலமடைந்துள்ளது. கிரிக்கெட் போலவே இருப்பதாலும், கிரிக்கெட்டை விட எளிதாக இருப்பதாலும், பேஸ்பால் விளையாடுவதற்கு கிரிக்கெட்டை விட உபகரணங்கள் குறைவு என்பதாலும் பேஸ்பால் கிரிக்கெட்டின் இடத்தைப் பிடித்துக் கொண்டது



சமீப காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்தும் மேற்கு இந்திய தீவுகள் போன்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்தும் பலர் அமெரிக்காவில் அதிகம் குடியேறுவதால் அமெரிக்காவில் கிரிக்கெட் இழந்த தன் முக்கியத்துவத்தை மீண்டும் பெறத்தொடங்கி இருக்கிறது

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

 

சிக்கன் சாப்பிடுவதற்கு 'கிக்'கான எதிர்ப்பு

உலகம் முழுவதும் விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இறைச்சிக்காகவும் மற்றும் பிற தேவைகளுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்து விலங்கின ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். அவர்கள் தங்கள் எதிர்ப்பை பல வகைகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்,







கீழே உள்ள படங்களில் ஆஸ்த்திரேலிய பெண் ஒருவர் சிக்கன் வகை உணவுகளுக்கு பிரபலமான KFCக்கு தனது எதிர்ப்பை நூதன முறையில் காட்டுகிறார். கோஷங்களை வைக்கவும் அதே இடம் தானா??>>>>>>
=

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

 

ஐஸ்வர்யா ராயை காண அலைமோதிய ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்ட படப்பிடிப்பை காண்பதற்காக துபாயில் ரசிகர்கள் அலைமோதியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், வர்த்தகம் தொடர்பான ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற் காக துபாய் சென்றார்.

அவர் படப் பிடிப்பில் நடிக்கும் செய்தி காட்டுத்தீ போல பரவியது. அவரை பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் ஏராளமாக திரண்டனர். இதன் காரணமாக துபாய் நகர வீதிகளில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஷேக் சயித் ரோட்டிலிருந்து ஜிபெல் அலி என்ற இடம் வரை வாகனங்கள் நத்தை போல இடைவெளிவிட்டு ஊர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. துபாய் மக்களிடம் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த அளவுக்கு புகழும், செல்வாக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது என்று "கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது.

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

 

ஜப்பான் இளவரசிக்கு ஆண் குழந்தை

டோக்கியோ, செப்.6:

ஜப்பானிய இளவரசிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டு அரச பரம்பரைக்கு வாரிசு கிடைத் துள்ளது.

உலகில் மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. தற்போது பேரரசர் அகிடோ அந்நாட்டின் மன்னராக இருக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த இளவரசர் பெயர் நருஹிடோ. அவரது சகோதரர் பெயர் அகிஷினோ. இந்த இருவருக்குமே ஆண் வாரிசு இதுவரை கிடையாது. மூத்த இளவரசருக்கு ஒரேயொரு பெண் குழந்தை பிறந்தது. அகிஷினோவின் மனைவியான இளவரசி கிகோ இதுவரை இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். அவருக்கும் ஆண் குழந்தை பிறக்கவில்லை.

ஜப்பானில் ஆண் வாரிசே பட்டத்திற்கு வர வேண்டுமென்பதே வழக்கமாக இருக்கிறது. இந் நிலையில் ஆண் வாரிசு பிறக்காதது அந்நாட்டு மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. அடுத்த இளவரசராக பட்டமேற்க யாரும் இல்லாத நிலையில், பெண் களுக்கு வாரிசுரிமை தந்து இளவரசியை பட்டத்தில் அமர்த்த வேண்டுமென்பது தொடர்பாக பரவலான விவாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இளவரசி கிகோ மீண்டும் கருவுற்றார்.

இந்த முறை யாவது அவருக்கு ஆண் குழந்தை பிறக்குமா என பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது ஜப்பானிய மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டு அரச பரம் பரைக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது. சிசேரியன் மூலம் பிறந்த இந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்ப தாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

 

சர்வதேசப்போலீஸ் தேடிய கோழித்திருடன்

-Kisukisu.com-
ருமேனியா நாட்டைச் சேர்ந்த 51 வயது நபர் அயாசி. இவர் 4 ஆண்டு களுக்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரரின் கோழிப்பண்ணையில் இருந்து 7 கோழிக்குஞ்சுகளைத் திருடினார். அதன் பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

சமீபத்தில் அவர் நாடுதிரும்பினார். அப்போது எல்லைப்பாதுகாப்பு படை யினர் சர்வதேசப் போலீசார் இவரைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர். கோழிக்குஞ்சுகளைத் திருடியதற்காக சர்வதேச போலீசார் கைது வாரண்டு டன் சென்று அவரைக் கைது செய்தனர். அவருக்கு 3ஷி ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

4 நாட்கள் ஷவரில் நனைந்து உலக சாதனை

ஜெர்மன் நாட்டில் ஹோவல்காப் நகரைச் சேர்ந்த 17 முதல் 25 வயசுக்கு உட்பட்ட 5 ஆண்களும் 2 பெண்களும் 101 மணி நேரம் தொடர்ந்து ஷவரின் கீழ் நின்று உலக சாதனை படைத்தனர்.

கடந்த புதன் கிழமை 10 பேர் ஷவரில் நிற்கத் தொடங்கினர். இடையில் 3 பேர் இந்த சாதனை நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்டனர். மீதி 7 பேர் மட்டும் 101 மணி நேரம் ஷவரில் நின்று சாதனை படைத்தனர்.

2000-ம் ஆண்டு பெர்லின் நகரைச் சேர்ந்த சில இளைஞர்கள் 100 மணி நேரம் ஷவரில் நின்று முதன் முதலாக சாதனை நிகழ்த்தினர். அதை இந்த 7 பேரும் இப்போது முறியடித்து உள்ளனர்.

மிக நிண்ட நேரம் ஷவரில் நின்ற 17 வயதுச் சிறுவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

சாதனை நிகழ்த்திய 7 பேரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஆனால் களைத்துப் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நிறம் மாறிய பூனை

இங்கிலாந்து நாட்டில் ஒகேஹாம்ப்டன் நகரைச் சேர்ந்த தம்பதிகள் பிலிப் ஜோவான் எவார்த். இவர்கள் 9 வயது பூனையை வளர்த்து வந்தனர். வெள்னை நிறப்பூனையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றனர். திரும்பி வந்த பிறகு பார்த்தால், பூனையின் நிறம் கருநீலமாக மாறிவிட்டது.

தலை காதுகள் உடல் ஆகியவை கருநீலமாக மாறி விட்டன.

“மிருக வைத்தியரிடம் பூனையைக் கொண்டு சென்று காட்டினோம். அவரால் நிறம் மாறியதற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை இப்படி திடீர் என்று நிறம் மாறியது எங்களுக்கு கவலை அளிக்கிறது'’ என்று பிலிப் கூறினார்.

தினதந்தி-

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

 

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]