|
யாழ்ப்பாணம்
25.03.2004
இணைந்த வடக்கு -
கிழக்கு தாயகம் என்பதில் மட்டு - அம்பாறை தமிழ் மக்கள்
விலகிப்போவது என்பது சாத்தியமற்றது. அத்துடன், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு, எந்தத்தரப்பும் அங்கு
மக்களை கோரியிருக்கவுமில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின்
செயலாளர் நாயகமும், திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான
இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தேர்தல் பிரசார
நடவடிக்கைகளுக்காக நேற்றுமுன்தினம் குடாநாட்டுக்கு வருகைதந்த
அவர் - யாழ்.நகரில் தமிழரசுக் கட்சி தலைமையகத்தில்
ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்
தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய
கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர்களான -
மாவை.சேனாதிராசா,சி.சிவமகாராசா மற்றும் க.ஈழவேந்தன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.மாலை 5.15 மணியளவில் விமானம் மூலம் பலாலி
விமானநிலையத்துக்கு வருகைதந்த இரா.சம்பந்தன், 6.15 மணியளவில்
தமிழரசுக்கட்சி அலுவலகத்துக்கு வருகைதந்தார்.
ஆதரவாளர்களிடையே
உரையாற்றிய அவர், பின்னர் ஊடகவியலாளர்களது கேள்விகளுக்குப்
பதிலளித்தார். வட-கிழக்குப் பகுதி மக்களுக்கு இடைக்கால நிர்வாக
கட்டமைப்பினை வழங்குவதன் மூலம்,முஸ்லிம் மக்களுக்கு அவர்களிடையே
பிரசார நடவடிக்கைகளை தாங்;கள் முன்னெடுத்துவருகின்றோம். அத்துடன்,
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முதன்மை
வெற்றியைப்பெறும்.
இதேவேளை,
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள வன்னிப்பகுதி
மக்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக உரிய நடவடிக்கைகளை
எடுக்கப்பட்டு வருகின்றது எனத்தெரிவித்த அவரிடம் மட்டு - அம்பாறை
மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
வேட்பாளர்கள் அழுத்தங்களுக்கு உட்படுத்தபட்டுள்ளனரா? என்ற
கேள்விக்கு பதிலளித்த போது - இதுவரை தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களிக்குமாறு எந்தத் தரப்புககளும்
கோரியிருக்கவில்லை எனத்தெரி வித்தார்.
ஆயினும், மட்டு -
அம்பாறை மாவட்டங்களில் போட்யிட்டு, வெற்றியீட்டும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வெற்றிபெற்ற பின்னர், ஏனைய
கூட்டமைப்பின்; அங்கத்தவர்களுடன் இணைந்துசெயற்படுவரா?எனக்
கேட்டபோது - சுயாட்சி மற்றும் தாயகக்கோரிக்கைகள்; உள்ளிட்ட
முக்கிய கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே, மட்டு - அம்பாறை
மாவட்டத்திலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்கீழ் அவர்கள்
போட்டியிடுவதால், தொடர்ந்தும் அவர்கள் இணைந்தே செயற்படுவரெனவும்
அவர் பதிலளித்தார்.
நன்றி:நமது ஈழநாடு |