www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

நிஜங்களின் அம்பலம்

கட்சி அமைக்க கொடுத்த காசு அபேஸ்.

-நன்றி:நிதர்சனம்.கொம்ஸ :இரமேஸ் -
இலங்கையில் மீண்டும் ஈ என் டீ எல் எவ் கட்சியினை நிறுவும் திட்டம் அம்பலமாகியுள்ளது. இந்த விடயம் பற்றி தெரிய வருவதாவது இந்திய இராணுவத்தின் அடிவருடிகளாகச் செயற்பட்ட தேசவிரோதக் கும்பலை மீண்டும் இலங்கையில் செயற்பட வைப்பதற்கு சந்திரிக்கா அம்மையார் எடுத்த முயற்சி பணத்திருட்டு மோசடியால் ஆரம்ப கட்டத்திலேயே புஸ்வாணமாகியுள்ளது. கடந்த மேமாதம் இவ் அமைப்பின் தலைவர் பரந்தன் றாஜன் ஊடாக கட்சியை நிறுவுமாறு சந்திரிக்கா அம்மையார் தனது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிகாமர் ஊடாக கேட்டுக்கொண்டதாகவும் அதன் ஆரம்ப செலவாக இரண்டு கோடி ரூபாய்களை இலங்கைவங்கிக் கிளையூடாகத் தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட பரந்தன் றாயன் சுமார் ஜம்பது இலட்சம் இந்திய ருபாய்களை இலன்டனில் உள்ள வெம்பிலி பிராந்திய ர்ளுடீஊ வங்கிக் கிளைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தப்பணத்தை கட்சியின் ஜரோப்பியப் பொறுப்பாளரான தேசவிரோத ஊடகத்தை நடாத்திவரும் றாமராஜ் பெற்றுக்கொண்டு அந்த பணத்தில் இலங்கை சென்று இலங்கையில் கில்ரன் நட்சத்திரவிடுதியில் தங்கியிருந்துவிட்டு மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார். கட்சியை நிறுவஅனுப்பிய பணத்தை தனது தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு மாற்றியுள்ள றாமராஜ் காரியாலயம் அமைக்கும் திட்டத்தைப் பிற்போட்டுள்ளார்.

இதனால் பணத்தை பறி கொடுத்த பரந்தன் இறாயன் பணத்தை உடனடியாக கட்சியின் இந்திய வங்கிக்கு மாற்றுமாறு பல மாதமாக கேட்டு வந்ததாகவும் தற்போது இருவருக்குமிடையில் பாரிய கருத்து முரண்பாடு வலுவடைந்திருப்பதாகவும் தெரிய வருகிறது.

இந்தப் பணத்தைச் சுருட்டுவதற்காக றாமராஜ் புதிய தந்திரத்தை கையாண்டுள்ளார். தனது வானொலியில் கடமையாற்றும் அறிவிப்பாளர் ஒவருக்கு கருத்து தெரிவிக்கையில் வடக்கை தாhயகமாக கொண்ட பரந்தன் றாயனை விட அதிகம் கருணாவை தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். பணத்தைச் சுருட்டுவதுடன் பிரதேசவாதம் கொண்ட இவர் தனது வாழ்விடமான கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கருணாவின் உதவியுடன் தனது கட்சியின் தலைமை பதவியை சுருட்டவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தத் தகவலை கட்சியின் முக்கிய மத்திய குளு உறுப்பினரான மனோ மாஸ்டர் என அழைக்கப்படும் இராசரத்தினம் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் தமிழ் வெப் றேடியோ 01.02.2002
தனிமைப்பட்டுப்போன காந்திதேசத்தின் சேவகன்
கௌரிகாந்தன்
பரந்தன் றாஜனின் செவ்வி அண்மையில் நுனுNடுகு இன் அதிகார பூர்வ வானொலியான வுடீஊ யில் கேட்கக்கிடைத்தது.
முன்னரும் ஒரு தடவை வெலிக்கடைச்சிறை படுகொலை தொடர்பாக இதே வானொலி மூலமாக இவரது குரல் கேட்டது. இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் றாஜனின் குரல் ஒலிப்பது பல கேள்விகளை ஒலிக்க வைக்கிறது.

தற்போது நடைபெறப்போகும் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பின் தமிழ் மக்கள் மீதான தாக்கம் முன்னாள் துரோகிகளுக்கு புலிகளின் ஆதரவு வரப்போகும் புதிய அரசாங்கம் து}க்கியெறியப்படப்போகும் வரதர் டக்ளஸ் கூலிக்குழுக்கள் புதிய அரசுக்கான இந்தியாவின் மறைமுக பங்களிப்பு எனப்பலதரப்பட்ட அரசியல் சு10ழ்நிலையில் தான் றாஜனின் குரல் வுடீஊ வாயிலாக ஒலித்தது. சரி ஏன் அவசரப்பட்டு றாஜன் குரல் ஒலித்தது.

தற்போது நடக்கப் போகும் தேர்தலில் கூட்டாக ஒன்றிணைந்துள்ள வுநுடுழு நுPசுடுகு (சுரேஸ்) வுருடுகு 10 த.காங்கிரஸ் என்பன கடந்த காலத்தில் தமிழ் மக்களாலும் புலிகளாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். தற்போது இக்கூட்டு முன்னணிக்கும் புலிகளுக்கும் ரகசிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அதன் பயனாகவே புலிகளும் தமிழ் மக்களும் இன்று இவர்களை இம்முறை தேர்தலில் அரசியல் ரீதியாக நிறுத்தி உள்ளதாக எல்லாத் தரப்பாலும் பேசப்படுகிறது.

ஆக முன்னாள் துரோகிகள் இன்று புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கே சென்று பிரச்சாரம் செய்யக்கூடிய நிலையைப் பெற்றுள்ளார்கள். என்பது பெரியதொரு மனமாற்றத்தையே புலிகளும் தமிழ் மக்களும் கூட்டமைப்பு தொடர்பாக கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை. அது எப்படி இருப்பினும் இந்தக் கூட்டு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருபுறம் இருக்க எதிர்வரும் காலத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தி ஜனநாயக ரீதியில் இக்கூட்டு முன்னணி குரல் கொடுப்பது என்ற நிலைப்பாடானது தமிழ் மக்கள் மத்தியில் இவர்கள் காலு}ன்ற வழி வகுத்துள்ளது என்று துணிந்த கூறலாம்.

இவர்களது நிலைப்பாடு இப்படியிருக்க சந்திரிக்காவின் அரசிலும் முன்னைய ருNP ஆட்சியிலும் சேவகம் செய்ததனால் தொழில் வாய்ப்புப் பெற்றுக்கொடுத்த நன்றிக் கடனுக்காக ஒரு சிறு தமிழ் மக்கள் கூட்டம் வரதருக்கும் டக்ளசுக்கும் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க வேண்டியவர்களாக உள்ளனர். இவர்களது இருப்புக்கூட சற்றுப்பரவாயில்லை.

ஆனால் ஒரு குழு மட்டும் நீண்ட காலமாக தமிழ்மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட நிலையில் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆட்களை வைத்துக்கொண்டு 'ஜெய்கிந்" என்ற கோசத்தைக்கொண்டு இயங்கும் நுNனுடுகு குழுவாகும். குறிப்பிட்ட இவர்களது நிலைப்பாடும் நீண்ட காலமாக தமிழ் மக்கள் மத்தியில் அன்னியப்பட்டுப்போன தொடர்புகளை மறுசீரமைக்க வேண்டிய தேவை நுNனுடுகு இனருக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இன்றும் சொல்லப்போனால் முன்னாள் துரோகிகள் எல்லோரையும் புலிகள் ஏற்றுக்கொண்டுள்ள சு10ழ்நிலையில் தாங்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற பயம்தான் றாஜனின் குரலில் மேலோங்கியிருந்தது எனலாம்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]