பனிச்சங்கேணித் தாக்குதலுக்கு முன்னரே அரசு அறிக்கை
-நிதர்சனம்.கொம் : மட்டக்களப்பு -
வாகரைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்கக்காவல் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு எத்தகைய இழப்புகளும் எற்படாத நிலையிலும் தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் நடைபெற்றதாக இராணுவத் தரப்பு தகவலை மேற்கோள்காட்டி அரச ஊடகங்கள் ஊடாக, 7 விடுதலைப் புலிப் போராளிகள் உயிரிழந்ததாக செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.
வாகரைப் பிரதேசத்தில் மோதல்கள் எதுவும் இடம் பெறாத நிலையில் அப்பகுதி கிராம வாசிகள் மீது எறிகணைத் தாக்குதல் மேற்கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் ஊடகங்கள் ஊடாக தகவல் வெளிவந்தது. இதன்படி அந்த பிரதேசத்தை அண்டிய கிரிமிச்சை இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு சம்பவம் நடைபெற இருப்பது நிகழ்வுக்கு முன்னர் தெரிந்திருக்கிறது. இதனை அரசபடைகள் மழுப்பியுள்ளதுடன் சம்பவத்தை மறைக்க முற்பட்டுள்ளார்கள். இதே அரசு ஆட்சியில் இருக்கும் போது குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குமாரின் கையில் அவருக்கான மரணஇரங்கல் கடிதம் சந்திரிக்காவிடம் இருந்து சென்றது அனைவரும் அறிந்த விடயம்.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு