www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

நிஜங்களின் அம்பலம்

தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சி

-நிதர்சனம்.கொம் : மட்டக்களப்பு-
பிட்டும், தேங்காய் பூவும் போல இருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே மீண்டும் ஒரு இன வன்முறையை ஏற்படுத்த சில விஷமிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவது கவலைக்; குரியது. இந்த இன வன்முறைக்குப் பின்னால் முஸ்லிம் அரசியல் கட்சி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்று பட்டு வாழ்ந்து வருகின்றனர். மொழியால் ஒன்று பட்டுள்ள இவ்விரு சமூகங்களும் கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமைப் பட்டிருப்பது அவசியமானதாகும். கடந்த போர்க்காலத்தில் இவ் விரு சமூகங்களிடையே கசப்பான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

தமிழ் இனத்தின் விடுதலைக்கு முஸ்லிம் சமூகமும் பக்கபலமாக இருப்பதை விரும்பாத சக்திகள் ஊடுருவி மேற் கொண்ட பல்வேறு சம்பவங்கள், படுகொலைகள் என்பன இன விரிசல்களை ஏற்படுத்திய போதும் தமிழீழ விடுதலைப் புலிக ளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பிற்பாடு தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தும் நடவடிக் கைகளில் விடுதலைப் புலிகளும் அதிக அக்கறை செலுத்தினர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போர்க்காலச் சூழலில் முஸ்லிம்களால் செய்கை பண்ணப்படாத விவசாயக் காணிகளை மீள செய்கை பண்ணுவதற்குரிய ஒரு சூழல் ஏற் பட்டது. ஒவ்வொரு முஸ்லிம் பகுதிகளிலும் உள்ள பிரமுகர்கள் விடுதலைப் புலிகளைச் சந்தித்து தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது. இவ்வாறான சூழ் நிலையில் இரு சமூகங்களிடையேயான உறவு வலுப் பெற்று வருவதை விரும்பாத சக்திகள் வட்டமடு காணிப் பிரச் ;சினையை பூதாகாரமாக்க நினைப்பதும் அதன் மூலம் இன வன்முறையை து}ண்ட நினைப்பதும் வேதனைக்குரியது.

இந்த வேதனை தரும் சம்பவத்தின் பின்னணியில் அம்பாறை மாவட்டத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சி இருப்பது கவலைக்குரியது. நேற்றைய தினம் வட்டமடு பிரச்சினையைக் காரணங்காட்டி நடத்தப்பட்ட ஹர்த்தால் தமிழ் முஸ்லிம் சமூகத்திடையே ஒரு பதட்டமான சூழலை ஏற்படுத்தியது.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நேற்று சில விஷமிகள் கலவரத்தை உண்டு பண்ணுவதற்கான முயற்சிகளிலும் ஈடு பட்டுள்ளனர். அதிஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்கும் சில தமிழர்கள் அக்கரைப்பற்றில் தாக்குதலுக்க உள்ளாகியுள்ளனர்.

சில தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் சேதப்படு த்தப்பட்டன. இச்சம்பவங்கள் நடைபெற்ற போது சிறிலங்காப் பொலிசார் அவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது எது வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காது வன்முறை யைத் து}ண்டும் போக்கில் பார்வையாளராய் இருந்தமை வியப்புக் ;குரியது.எனவே எதிர் காலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இன முரண்பாடுகள் வன்முறை களுக்கு இடமளிக்கக் கூடாது. வட்டமடு காணிப் பிரச்சினையை மிகப்படுத்தாது பேசித்தீர்ப்பதுடன் இரு தரப்பினரும் புரிந்துணர் வுடன் நடந்து கொண்டு தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்த உறுதி பூணுவோமாக.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]