www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

நிஜங்களின் அம்பலம்

தமிழன் என்பது மட்டுமல்லசிங்களவனும் அல்ல

-மூலம்:நமது ஈழநாடு-

அண்மையில் யாழ்.பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பேராசிரியர் அ.துரைராஜா நினைவு நிகழ்வில் பேராசிரியர் ரத்னஜீவன் ஹேபர்ட் ஹீல் கலந்து கொள்வதை எதிர்த்தது பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதை குடாநாட்டுப் பத்திரிகையொன்று படங்களுடன் செய்தி யாக வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தி பொய்யென்றும் புகைப்படங்கள் போலியானவையொன் றும் தனது பெயரைக் ஹேபர்ட் என்பதற்குப் பதிலாக றொபட் என்று போட்டி ருந்ததையும் குறிப்பிட்டு, மறுப்புக் கடிதம் ஒன்றை ஹல் எழுதியிருந்தார்.வழமை போலவே ஹல் பிரச்சினையின் மையத்தைத் தொடாமல், நடுப்பெயரைத் தவறாக எழுதிவிட்டது போன்றவற்றைப் பிடித்துக் கொண்டு தொங்குபவராகக் காணப்படுகின்றார்.

தனக்கெதிராக எழுதப்படும் விட யங்களுக்குப் பதிலளிக்காமல் செய்தி யிலுள்ள அற்ப தவறுகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவது இது தான் முதல் தடவையல்ல.04.04.2003 அன்று வன்னியில் இருந்து வெளியாகும் "வெள்ளி நாதம்" பத்திரிகையில் UTHR-J என் பவர்கள் யார்? என்ற கட்டுரையில் இவர் குறித்த பல உண்மைகள் புட்டுக் காட்டப்பட்டிருந்தன.

i) 30 க்கு மேற்பட்ட UTHR-J இன் அறிக்கைகளைத் தயாரித்து வழங் கியதில் இவர் பிரதான பங்கு வகிக்கிறார்.

ii) யாழ்.பல்கலை ஆசிரியர்கள் எவருமே அங்கம் வகிக்காத "றோ" வின் ஊடுருவல் காரணமாக 1989ஆம் ஆண்டுகளிலேயே கலைக்கப்பட்டு விட்ட UTHR-J அமைப்பின் பெயரைக் குடாநாட்டுக்கு வெளியில் இருந்தே இவர் வசதியாகப் பயன்படுத்துகிறார்.

iii) "றோ"வின் ஊடுவல் காரணமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தவர், இந்தியாவுக்கு எதிராகக் குரல் எழுப்பிப் புகழ்பெற்ற ரத்னஜீவன் ஹல் தான்.
iv) ஐந்து வருடங்களாக தீவிர யுத்த நடவடிக்கையில் ஊடகங்கள் எதுவும் வடபகுதிக்கு அனுமதிக்கப் படாத வேளையில் விதிவிலக்காக யாழ். செய்திகளை இலங்கை இரா ணுவப் புலனாய்வுத்துறையின் அனு சரணையுடன் விலாவாரியாகக் ஹல் பெற்றிருந்தார்.

v) ஹல் புலனாய்வு சேவைகளால் ஆட்டுவிக்கப்படுகிறார்.

vi) UTHR-J அறிக்கைகள் புலிகளை இழிவுபடுத்துவதையும் இலங்கையிலுள்ள பிரச்சினை சிங்கள - தமிழ் மக்களுக்கு இடையேயானயல்ல. புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடை யேயானது என்பதாகவும், சித்திரிப்பதையும் நோக்கமாகக் கொண்டவை.

இந்த விடயங்களுக்குள் 06.06.2003 வெள்ளிநாதம் இதழில் பதிலளிக்க முற்பட்ட ஹல் யாழ்.பல்கலைக்கழ கத்தில் தகுந்த தகைமைகள் இல்லாமல் பூச்சிய ஆராய்ச்சியுடன் புத்தி ஜீவிகளாக நடிக்கிறார்கள் என்றும் இவர்கள் தான் தனக்கு எதிரான தகவல்களைத் தருவதாகவும் கூறி, பிரச்சினையைத் திசை திருப்ப முயற் சித்தாரே ஒழிய, அவர் குறித்த தகவல் களை உறுதியான முறையில் மறுக்கவில்லை என்பதை 06.06.2003 வெள்ளிநாதம் இதழைப் பார்ப்பவர் கள் எவரும் புரிந்துகொள்வார்கள்.

இதற்கிடையே வைகாசி மாதம் 2003 வெள்ளிநாதம் இதழில் UTHR-J பின்னிணைப்பு - 1 என்ற கட்டுரையில் இவரது தந்தையார் ஆறுமுக நாவலருடன் துண்டுப்பிரசுரப்போர் ஒன்றை நடத்தியதாகவும் UTHR-J அறிக்கைகளை வெளியிடுவதும் அதனை ஒத்ததுதான் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதில் தந்தையார் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்றும், அது தனது பூட்டனுக்குப் பூட்டன் என்றும், காலவழுவில் தொங்கிக் கொண்டு திசை திருப்பலில் ஈடுபட்டாரே தவிர, தானும் தன் சகோதரர்களும் கேந்திர முக்கியத்துவமான இடங்களில் இருந்துகொண்டு தமிழ்த் தேசியத்தின் விரோத சக்திகளுக்கு துணைபோவது பற்றி எழுதப்பட்டிருந்தது பற்றியோ, தன் சகோதரனான கலாநிதி ராஜன் ஹல் வேறு பலருடன் சேர்ந்து ""முறிந்த பனை மரம்"" (Broken Palmyrah) எழுதியது பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.

ஆனால், குறித்த கட்டுரை ஆசிரியரை மதச் சர்ச்சை ஒன்றுக்குள் இழுத்துவிட முயன்று இருக்கின்றார் என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டி ருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. 08.08.2003 வெள்ளிநாதம் இதழில் இவரது இரண்டு கடிதங்களுக் கும் பதிலளித்த UTHR-J என்பவர்கள் யார்? கட்டுரை ஆசிரியர், முரண் பாடுகளின் மொத்த வடிவமாக ஹல் எப்படி இருக்கிறார் என்பதை அழகாக எடுத்துக் கூறியிருந்தார்.

i) ""ஆசிய விழுமியங்கள்"" என்பவை காட்டுமிராண்டித்தனத்தை மறைப்பதற்கான போர்வை என்றவர், வெளிநாட்டில் தொடர்ந்து வாழ்ந்தால் தன் பிள்ளைகள் தன்னிலிருந்து அன்னியப்பட்டு விடுவார்கள் என்பதால் தாய் நாடு திரும்பியதாகக் கூறி ஆசிய விழுமியங்களாலேயே தானும் வடிவமைக்கப்பட்டிருப்பது தன்னை அறியாமலே வெளிக்காட்டி இருக்கிறார்.

ii) தகமையற்றவர்கள், பேராசிரியர்கள் போட்டுக்கொள்கிறார்கள் என்று கண்டிக்கும் கடிதத்தில் ஹல் என்று ஒப்பமிட்டவர் அதே காலப்பகுதியில், அதாவது யாழ்ப்பாணக் கல்லுரியில் 05.02.2002 இல் ஆற்றிய உரையை டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியிட்டபோது அதன் கீழே பேராசிரியர் ஹல் என்று அழகாகப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

iii) விழாவொன்றில் மங்கல விளக்கு ஏற்றக்கூப்பிட்ட பொழுது அதன் உச்சியில் சேவல் வடிவம் இருந்ததால் தான் ஏற்றப்போக வில்லை என பச்சைமதவெறியுடன் பெருமையடித்துக் கொண்டிருக்கும்(05.02.2002 உரையில்) ஹல்,நந்திக்கொடியைக் கொண்ட யாழ்.பல்கலைக்கழகத்தில் ""சேவை""யாற்ற வருவதற்கு தலைகீழாக நிற்கிறார்.

என்றவாறாக ஹலின் சுய வடிவம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அத் தோடு இவரைப்பற்றிய விவரங்களின் அடிப்படையாக 28.07.2002 திகதி சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகை யின் ஆசிரியருக்கு கடிதப் பகுதியில் வந்த ""UTHR-J - USURPER WHITH A HIDDEN AGENDA"" என்ற தலைப்பி லான கடிதமே இருந்தது என்பதை வெளிப்படுத்திய கட்டுரையாசிரியர் முடிந்தால், சண்டே லீடர் பத்திரிகைக்கு மறுப்பு அனுப்பும் படி ஹல்லுக்கு சவால் விட்டிருந்தார். ஆனால், இன்று வரை ஹல் சண்டே லீடருக்கோ அல்லது வெள்ளி நாதத்துக்கோ மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆற்றிய சேவைக்கு (அல்லது துரோகத்துக்கு) பரிசாகத்தான், அண்ணளவாக 2 வருடகாலத்துக்கு முன் நாடு திரும்பியிருந்த ஹலுக்கு பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதா, என்பது பெறுமதி மிக்க கேள்வியாக எழுகிறது. வேதாகமத்தில் உள்ள ஒரு வசனம்

""....... என்னோடில்லாதவன்
எனக்கு எதிராக இருக்கிறான்....""
என்று கூறுகிறது.

எவரும் விரும்பியோ விரும்பா மலோ ஈழத்தமிழ்த் தேசியத்தின் ஒரே பிடிமானமாக இன்றைக்கு இருப் பது விடுதலைப் புலிகள்தான். எனவே புலிகளைக் கொச்சைப்படுத்த நினைக்கும் ஹல் போன்றவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது எவரும் சொல்லித் தெரியவேண்டிய விடயமல்ல.ஆபிரிக்க கவிதைத் தொகுதி யொன்றின் முன்னுரையில் ""தான் கறுப்பன் என்பது மட்டுமல்லாமல் தான் வெள்ளையனும் அல்ல என்பதை உணர்ந்து கொண்டதன் எதிரொலிகள் ஆபிரிக்கக் கவிதைகளில் ஆழமாக எதிரொலிக்கின்றன"" என்று கூறப்பட்டுள்ளது.

இதே போலவே, ஹல், சிதம்பரம், மகேந்திரன் முன்னாள் துதுவர் - துதரக தமிழ்ப் பணியாளர் தமிழில் கதைத்தால் கொழும்புக்கு அனுப்பி விடுவேன் என்ற சிங்கள விசுவாசி, அர்ஜீனா மகேந்திரன் (முதலீட்டுச் சபைத்தலைவராக இருந்தவர் - தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் இருந்த கிழக்குக் கடற் பரப் பில் சீன மீனவர்களுக்கு றோலர் அடிக்க அனுமதி பெற்றுக் கொடுத் தவர்) போன்றோர் என்னதான் குத்தி முறிந்து சிங்களத்துக்குச் சேவை செய்தாலும், அவர்கள் சிங்களவர்கள் அல்ல என்று உணரும் காலம் வந்தே தீரும். சிஹல உறுமயவின் ஸ்தாபகரான டீ.டு.குணசேகர, தான் சிங்கள பௌத்தன் அல்ல என்று உணர நேர்ந்தது போல்.

UTHR-J என்பவர்கள் யார்? என்ற கட்டுரையின் இறுதியில் அக்கட்டுரை யாசிரியர், உகண்டா நாட்டினரான ஒக்கோட் பிற்ரெக்கின் ""லாவின்னோ வின் பாடலிலிருந்து....."" என்ற கவி தையின் சில வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
""..........................
ஒக்கொல்வின் தலையை
நு}ல்கள் என்ற காட்டில்
தொலைத்துவிட்டார்
.............................
வகுப்பறைகளில் வைத்து
அவர்களுடைய விதைகள்
பெரிய புத்தகங்களால்
நசுக்கப்பட்டுவிட்டன.........""
ஹ{ல் போன்றோருக்கு மிகப் பொருத்தமான வரிகள் இவை அல்லவா!

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]