கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?-1
-எழுதியவர்: ஒஸ்லோவில் இருந்து சேது-
கலோ ரஸ்ட் நிறுவனம் ஒரு வருமானத்தை தேடாத மதரீதியான தொடர்புகளை பேனாத அரச சார்பு அற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது பிரித்தானியாவில் இதன் பதிவு இலக்கம் 1001813 ஆகும் அமரிக்காவிலும் இது ஒரு அரசசார்பு அற்ற நிறுவனமாக பிரவு 501 சீ பிரிவின் செக்சன் 3 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது 25 பிரித்தானிய பிரஜைகள் 950 உத்தியோகத்தர்களுடன் 12 வருடங்களுக்கு முதல் பிரித்தானியாவில் ஊழடin ஆவைஉhநடட என்பவரால் தனது மனைவி நண்பர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இவர் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுமட்டுமில்லாமல் பிரித்தானிய இராணுவ கேணல் தர அதிகாரி.
பிரித்தானிய அயர்லாந்து பிரச்சனையில் மிக முக்கிய பங்குவகித்தவர். சுமார் 5500 உத்தியோகத்தர்களை தன்னகத்தில் வைத்திருக்கும் இந்த நிறுவனம் மத்திய ஆசியா கிழக்கு ஆசியா தெற்கு ஆசியா தென் ஆபிரிக்கா போன்ற பிரதேசத்தில் சேவையை செய்துவருகிறது. இந்த நிறுவனம் கடந்த காலத்தில் 10 000 நிலக்கண்னி வெடிகள் 25 000 ஆயிரம் தொன் வெடிக்காத செல்கள் போன்றவற்றை பொஸ்னியா யோர்ஜியா ஆப்கானிஸ்தான் அங்கோலா கம்போடியா போன்ற நாடுகளில் மீட்டு அளித்திருக்கிறார்கள்.
ரஷ்ய பெடறல் புலனாய்வுப்பிரிவு கலோ றஸ்ட் நிறுவனம் செச்னிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகளை கொடுப்பதாக கண்டறிந்தது.இதனால் இந்த நிறுவனம் செச்சினியாவில் இருந்து வெளியேறவேன்டும் என கேட்டிருந்தது. 1997 ஆன்டு ரஷ்ய நிலைகளை உளவு பார்த்துவந்தததாக ரஷ்ய புலனாய்வுத்துறை அறிவித்தது 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் செச்சினிய கிராமம் ஒன்றில் கலோரஸ்ட் நிறுவனத்தவர்கள் பயிற்சி கொடுக்கும்போது ரஷிய படைகள் அவர்களை கைப்பற்றியதாக ரஷ்ய புலனாய்வுப்பிரிவு ஊடகமாநாடு ஒன்றில் தெரிவித்தது.பிரித்தானிய உளவுப்படையினர் இதில் வேலை செய்வதை ரஷ்ய உளவுத்துறை உறுதி செய்தது. இவற்றால் இவர்கள் செச்சினியாவில் சேவையாற்ற முடியாமலும் போனது.
இந்த நிறுவனம் இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியலேயே வடக்கு கிழக்கில் சேவையாற்றிகொன்டு இருந்தது. இந்த நிறுவனத்தில் இலங்கையின் வடமுனைகளில் தமிழ் இளைஞர்களான சங்கர் மற்றும் ஜெயகுமார் போன்றவர்கள் வேலை செய்கிறார்கள். இதே நேரம் மொசாம்பிக் நாட்டில் இருந்தும் பலர் இந்த நிறுவனத்தின் சேவைக்கு என அழைத்துவரப்பட்டார்கள். இவர்கள் வேறு பல நாடுகளில் கடமையாற்றி எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார்கள்.
யாழ்மாவட்டத்தில் இவர்களுடன் இந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் சங்கர் போன்றவர்களின் உதவியுடன் தமிழ் பெண்களுடனான தொடர்பு இந்த மொசாம்பிக் நாட்டவர்களுக்கு கிடைத்திருக்கிறது இதன்மூலம் இவர்கள் காவிவந்த எயிட்ஸ் நோய் யாழ் மாவட்ட தமிழ் பென்களுக்கு பரவி இருக்கிறது. இந்த திட்டமிட்ட கலாச்சார சீரழிவு யாழ் பல்கலைக்கழக வளாகம் வரை பரவி இருப்பதாகவும் இதற்கு இந்த நிறுவனத்தின் தமிழ் உத்தியோகத்தரே காரணம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சங்கர் என்ற இந்த அதிகாரியின் தகப்பனார் மிகப்பெரிய ஒரு கல்விமான் (இராயேந்திர பிரசாத்)தாயார் ஒரு மருத்தவதாதி இருவரும் பலகலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்கள். இவர்களும் ஜரோப்பிய கலாச்சாரத்தில் யாழ்மாவட்டத்தில் குடும்பவாழ்கை வாழ்ந்த வருகிறார்கள்.
இந்த சங்கர் என்பவர் மேற்கொன்டு வரும் சீரழிவான செயல்களாலும் கடமையாற்றும் பிறநாட்டு அதிகாரிகளின் தேவைகளை இவர் பல வழிகளில் தமிழ் பெண்களை பயன் படுத்தி பூர்த்தி செய்து வருவதாலும் நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் பிறநாட்டு அதிகாரிகளும் இவருடைய கருத்துகளுக்க ஒத்துப்போகும் ஒரு நிலை யாழ் மாவட்டத்தில் காணப்படுகிறது.
தனது பாலியல் இம்சைகளுக்க ஒத்துவராத தமிழ் பெண் உத்தியோகத்தர்களை சேவையில் இருந்து இடைநிறுத்துவதும் தனது கருத்துக்களுக்கு அடிபணியாத உத்தியோகத்தர்களை ஆங்கிலவார்த்தைகளில் கெட்டவார்த்தைகளில் திட்டி தீர்பப்துமாக இவருடைய அடாவடித்தனங்கள் தலைவிரித்தாடியவண்ணம் இருக்கிறது. இந்த சங்கர் ஜெயகுமார் போன்றவர்களின் கட்டாய பாலியல் இம்சைகளுக்கு பல தமிழ் பெண்கள் இந்த நிறுவனத்தில் உள்ளாகி இருக்கிறார்கள். பல தமிழ் பெண்கள் சேவையில் இருந்து விலகியும் சில பெண்கள் கட்டாய திருமணங்களுக்கம் உள்ளாகி இருக்கிறார்கள்.
பலசந்தர்ப்பத்தில் சங்கர் என்ற அதிகாரிக்கும் ஜெயகுமார் என்ற அதிகாரிக்கும் நலன் விரும்பிகள் பலதடவை ஆலோசனை கூட கொடுத்திருக்கிறார்கள். இப்படியான கலாச்சாரா சீரழிவான தவறான வேலைகளை செய்யவேன்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டும் அவருடைய அந்த அடாவடித்தனங்கள் அரங்கேறிக்கொன்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் முறைகேடுகளை வெளியே பத்திரிகைகளுக்கும் வேறு ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள் என சந்தேகிகக்கப்படுவோர் பலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு